Apr 27, 2013

(இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!)

அமெரிக்க டெக்ஸாஸ் மாநில குண்டு வெடிப்பு ! முஸ்லீம்கள் மீது முத்திரை குத்தும் இன்னொரு முகமூடித் தாக்குதலா!? ( பகுதி 04)

(இஸ்லாம் என்றால் பயங்கர வாதம் ! முஸ்லீம் என்றால் பயங்கர வாதி!)


பயங்கர வாதம் என்பதட்கான வரைவிலக்கணம் முதலாளித்துவ மேட்கின் அகராதியில் மிகவும் விசித்திரமானது! சுயநலம் மிக்க தமது அதிகார எல்லையை அதி தீவிரமான கருத்தியல் பாதுகாப்பில் வைத்திருக்க 'பச்சோந்தி' தனமாக நிறம் மாறும் ஒரு வடிவமாகவே அந்த வரைவிலக்கணம் அமைந்துள்ளது. 1979 ம் ஆண்டு அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உலவுத் துறையினர் ஒரு மாநாடு ஒன்றை கூட்டி இந்த அட்புதமான முடிவை சொன்னார்கள்!

அந்த வரைவிலக்கணம் இதுதான் " அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதட்காக சமூகத்தின் பொதுவிருப்புக்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல் என்பதே பயங்கர வாதம் ஆகும்" என்பதே அதுவாகும். ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகனே! எனும் பழமொழிக்கேட்ப
சுய அரசியல் இலாபங்களுக்காக இந்த விடயம் அரசியல் வடிவமாக மாற்றப் பட்டது!அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல மாநாடுகள்; அதன் பின்னால் பல தீர்மாணங்கள் என அந்த 'இராஜதந்திர பாதுகாப்பு வேலி உலகளாவிய ரீதியில் கொண்டு வரப்பட்டது..

பல இயக்கங்கள் ,சங்கங்கள் ,கலகங்கள் இந்த சூதாட்ட அரசியலில் பயங்கரவாத அமைப்புகள் என முத்திரை இடப்பட்டது. இதில் மிகுந்த வேடிக்கை என்னவென்றால் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளை தவிர எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் இந்த 'லிஸ்டில்' சேர்க்கப் பட்டன!
இன்று வரை சேர்க்கப் படுகின்றன! இஸ்லாமிய இயக்கங்கள் இந்த 'லிஸ்டில் 'சேர்க்கப்பட ஒரு சில வார்த்தைகளை உச்சரித்தால் போதும் என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றுக் கொண்டன.

இந்த கோமாளித் தனமான வரைவிலக்கணம் இஸ்லாத்தையும் , முஸ்லீம்களையும் மிகத் தெளிவாகவே குறிவைத்தது. இந்த சூதாட்ட அரசியலில் 'சியோனிஸமும் , இஸ்ரேலும் தெளிவான 'ஜோக்கர்கள்' போல் பவனிவர பாலஸ்தீனின் பச்சைக் குழந்தையும் பயங்கர
வாதியாக உலகின் முன் காட்சிப்படுத்தப் பட்டனர். "முஸ்லீம் என்றால் குடிநீரோ குடியிருக்க இடமோ கொடுக்க மாட்டோம்" என முஸ்லீம் அல்லாத மக்கள் கூறும் அளவுக்கு அச்சப் படுத்தப் பட்டார்கள்.

இயல்பு வாழ்க்கையில் இருந்து 'இமிக்கிரேசன்' வரை இறுக்கமான ஒரு நிர்ப்பந்த வாழ்வை நோக்கி முஸ்லீம் தள்ளப்பட்டான். இப்போது அவனுக்கு முன் தெரிவுகள் மூன்றானது.

1. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்குகட்டுப்பட்ட ,அதனோடு முரண்படாத ஒரு கூட்டு வாழ்வை நோக்கி தனது இஸ்லாமிய இயல்பு நிலையை மீறி வாழ பழகிக் கொள்ளல்.

2. குப்ரிய மேலாதிக்க நிபந்தனைகளுக்குகட்டுப்படாத இலட்சிய வாத இஸ்லாமிய சித்தாந்த போரை கருததியலாக முன்வைத்து போராடுதல்.

3. கருத்தியல் தொடர்பில் அழுத்தம் கொடுக்காத வன்முறை சார் போராட்ட வடிவத்தை கொண்டு தனது வாழ்வியலை பாதுகாத்தல்.

இந்த முடிவுகளில் மேட்கின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நடந்தது? என்பதை இன்ஷா அல்லாஹ் மறுமுறை சொல்கிறேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment