Jul 11, 2013

கற்ற பாடங்கள் போதும் சகோதரா.! (பகுதி 02)

தாருள் இஸ்லாத்தை குப்ரால் குளிப்பாட்டி
தேசிய விலங்கிட்டு மனித அடிமைதுவத்துக்க
முஸ்லிமை மறுபிரவேசம் புரிய வைத்தது
அந்த 1924 ம் ஆண்டுதான் ! - வில்லங்கம் அன்று
தாத்தாரியர் பாக்தாதுக்குள் நுழைந்தது போல்
வாளேந்தி வரவில்லை ! அது இந்த முஸ்லீம்
உம்மத்தின் உதிரத்தில் உதித்த ஒரு அடாவடி
மகனால் தான் நிகழ்ந்தது 'ஜாஹிலீய ' மயக்கத்தில்
மதிகெட்டு அந்த மாபாதன் முஸ்தபா கமால் அதாதூர்க்
மிதித்தான் இஸ்லாத்தின் அரசியலை என்பது உண்மை .

ஆனால் அதற்குமுன் அரபி அஜமிக்கு அடிமையா !?
என்ற மமதை நெருப்பு 'கிலாபாவை ' பற்றவைத்து
சகோதரத்துவத்துவத்தை சாம்பலாக்கி அதில்
சுல்தானிசம் சுயநலத்தோடு சுகப்பிரசவம் கண்டதும்
மறுக்க முடியாத உண்மையாகும் .அந்த எறிந்த வீட்டில்
கொள்ளி பிடுங்குவது 'தாகூதிய ' கோட்டான்களுக்கு
சுலபமாய் போனது !அது குரங்கு கையில்
பூமாலையாகி மரம் தாவித் தத்துவத்தில் முஸ்லிம்
உலகின் அரசியலை மாற்றியது !

கோலா லீற்றருக்கு மசகு எண்ணை பீப்பா சமன் என்ற
'வெஸ்டன்' புரபிட் பேஸ்' அந்தப்புர' பெனிபிட்களால் '
புரிந்தும் புரியாமல் விடப்பட்டது ! இந்த முஸ்லீம்
'கிங் கோப்ராக்களுக்கு ' மகுடி வாசிப்பு என்னவோ
பிரிட்டிஷ் M I 5 வும் U .S பென்டகனும் தான் என்பது
ஓபன் சீக்கிரட் ! எதிர்த்துக் கேட்போரை 'நீங்கள்
கேட்டவை என அடக்கி வாசிக்கத்தான்
'சரீயா ' சட்டமாம் இந்த பூச் சுத்தலுக்கு ரிசவ்
'பதுவாக்களோடு ' கிளிப்பிள்ளை ஆலிம்கள்
உலகெங்கும் ஏராளம் !
(இன்னும் தொடரும் ..)

No comments:

Post a Comment