Aug 23, 2013

“வாழ்க்கைச் சித்தாந்தமாக”!!!!

இஸ்லாம் வெறுமனே ஆத்மீகத்தை போதிக்கும் மதமல்ல. அது ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான செய்தியாக, சம்பூரணமான வாழ்க்கைத்திட்டமாக இஸ்லாம் விளங்குகிறது.

மனிதனது வாழ்வியல் விவகாரங்கள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் அது நிர்ணயம் செய்கிறது. அனைத்து வாழ்வியல் விவகாரங்களில் எழும் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.

மேலும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் மனிதன் கொண்டுள்ள உறவு, மனிதன் தனக்குத் தான்னே கொண்டுள்ள உறவு, மனிதன் இதர மனிதர்களுடன் கொண்டுள்ள அனைத்து வகையான உறவுகளையும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் வகையில் இஸ்லாம் நிர்ணயம் செய்துள்ளது.

இஸ்லாம் தனித்தன்மை கொண்ட தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருப்பதுடன் அவற்றில் இருந்து தனித்தன்மையான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

இக்கலாச்சாரம் வாழ்வியல் கண்ணோட்டம் குறித்து கோடிட்டுக் காட்டுவதுடன் அக்கலாச்சார வட்டத்தினுள் உறுதியாக நிலைப்படுத்துகிறது.

அத்துடன் தனித்துவம் கொண்ட சிந்தனைகளையும் ஹலால் ஹறாம் அடிப்படையிலான வாழ்வியல் கண்ணோட்டத்தையும் தனித்துவம் கொண்ட வாழ்க்கை முறையையும் இஸ்லாமிய ஷரீஆ உருவாக்கியுள்ளது.

இஸ்லாத்தின் செய்தி ஒரு முழுமையான செயலாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆட்சியமைப்பு, பொருளாதாரம், சமூகம், கல்வி, உள்நாட்டு விவகாரம், வெளிநாட்டு விவகாரம் தொடர்பான அரசின் கொள்கைகளையும் அரசிற்கும் சமூகத்திற்கும் மத்தியில் உள்ள உறவுகளையும், அரசிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் உள்ள உறவுகளையும், போர் மற்றும் அமைதி ஆகியவற்றில் ஏனைய அரசுகள் மற்றும் சமூகங்களுக்கு மத்தியிலும் உள்ள உறவுகளையும் நிர்ணயித்துள்ள ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாகும்.

இவ்வாழ்க்கைச் சித்தாந்தத்தை அமுல்படுத்தும் இஸ்லாமிய அரசே கிலாபத்து அரசாகும்.

ஆனால் அத்தகைய இஸ்லாமிய அரசை இன்று முஸ்லிம் உம்மத் இழந்து நிற்கிறுது. அதனை மீள உருவாக்க உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமிதும் கடமையாகும்.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இஸ்லாம் பற்றிய அடிப்படையை “மாற்றீட்டுச் சித்தாந்தமாக”, “மாற்றீட்டு வாழ்க்கை முறையாக” பெரும்பான்மை குப்ர் சமூகத்திற்கு முன்வைக்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்களது வாழ்கை முறைக்கெதிராகவும் முன்னெடுக்கப்படும் சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு இன்றைய முஸ்லிம் உம்மத் தள்ளப்பட்டுள்ளது என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் பொறுப்பு பற்றி சிந்தித்து செயற்படவேண்டும்.

இதனை நிரந்தமாக பேணும் ஒரு இஸ்லாமிய உலக தலைமையும் கிலாபாவினது மீள் உருவாக்கும் முஸ்லிம் நாடுகளில் உருவாக பங்களிப்புச் செய்யவேண்டும். அதற்கான தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும்.

இஸ்லாத்தை வெறுமனே ஒரு மதமாக பார்க்கும் சிந்தனைப்போக்கை மாற்றி அது வாழ்வில் எழும் அனைத்து விடயங்களுக்குமான தீர்வை வழங்கும் ஒரு “வாழ்க்கைச் சித்தாந்தமாக” முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கி தீனுல் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட உலக தலைமைத்துவம் மீள உலகில் உருவாகி மனித சமூகம் நேர்வழிப்பட, நிம்மதியடைய தமது தஃவாபற்றி பரந்து சிந்திக்க வேண்டும்.

நாம் வெறும் ஆத்மீகதிருப்தியோடு நின்றுவிடும் மனப்பாங்கை மாற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அருளாக அனுப்பப்பட்ட நோக்கத்தை உணர்ந்து இறுதி மனிதன் வரைக்கும் அல்லாஹ்வுடை தீன் சென்றடைவதற்கான இஸ்லாமிய ஆட்சிபற்றி சிந்திக்க வேண்டும். அதன் அடிப்படையில் செயற்பட வேண்டும்.

No comments:

Post a Comment