Aug 24, 2013

முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

எகிப்தில் இஸ்லாம் நபிவழியல் மீள் எழுச்சி பெறுவதற்கான அடிப்படையான சிந்தனைகள்..! முஸ்லிம் உம்மத் பாடம் பெறவேண்டிய அடிப்படைகள்!

இன்று எகிப்தில் இஸ்லாம் மீள் எழுச்சிபெற்று அமுலாக்கப்பட நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மதீனாவில் ஆட்சியை நிறுவினார்களோ அதுவே உங்கள் வழிமுறையாக இஸ்லாமிய அரசு நிறுவப்படுவதில் அமைய வேண்டும்.

இதற்கு எகிப்தியமக்களதும் முழு முஸ்லிம் உம்மத்தினதும் பணி என்ன என்பது பற்றி அவசியம் சிந்தித்து செயற்படவேண்டும்.

இதுகுறித்து பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையுள்ளது.

1.சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட முர்சியின் ஆதரவாளர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட உழைக்கவேண்டும்.

2.அமெரிக்காவின் பின்னணியில் இருந்து இராணுவத்தினால் வரையப்பட்ட அனைத்து திட்டங்களையும் வீசியெறிய பாடுபடவேண்டும்.

3.அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட இரத்தம் சிந்தக் காரணமான இராணுவ ஆட்சியில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளை நோக்கியும் நகர கூடாது. மாற்றீடாக இஸ்லாமிய அடிப்படையில் ஆளப்படத் தேவையான கிலாபா அரசு வேண்டும் என்றும் மேற்கினது எந்த ஆட்சித் தலையீடும் தேவையில்லை என்றும் மக்கள் கோரவேண்டும்.

4.ஜனநாயக அரசியல் தந்திரோபாய விளையாட்டில் இருந்து முற்று முழுக்க விடுபட்டு, கிலாபாவை மாற்றீடாக கோரி மக்கள் பாடம் பெறவேண்டும். அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் இருந்து இந்த ஜனநாயக அரசில் விளையாட்டில் மேற்கினது கை ஒங்கி ஏற்பட்ட அழிவுகளையும் இன்று எகிப்தில் ஏற்பட்டுள்ள முஸ்லிம்களது இக்கட்டான நிலையையும் கருத்திற்கொண்டு பாடம் படிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியினை கருத்தில் கொள்ள வேண்டும்.
' ஒரு விசுவாசி ஒரே புற்றினுள் இருமுறை தீண்டப்படமாட்டான்'

5.மதச்சார்பற்ற ஜனநாயக வழிமுறையிலான அனைத்து கோஷங்களையும் நிராகரிப்பதுடன் மேற்கினாலும் அமெரிக்காவினாலும் முன்வைக்கப்படும் குறுகிய கால நலன்களுக்கு மசிந்து விடக்கூடாது.

6.கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

7.எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

8.இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

9.கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

10.அல்லாஹ்வினது உதவியும் வெற்றியும் வந்து கிலாபா நிறுவப்படும்வரை பொறுமையுடன் தொடர்ந்து தஃவா முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துன்பங்களையும் அவனது தீன் நிலைநாட்டப்படுவதற்காக சகித்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment