இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான சகாத் பெரும்பாலும் ரமழான் காலத்தில் அறவிடப்படுகிறது.
இது இன்று முழுமையாக சகாத் கொடுக்கத் தகுதியானவர்களிடம் இருந்து அறவிடப்படுவதில்லை.
சில அதிகாரமற்ற அமைப்புக்களால் உலகில் முஸ்லிம்களிடம் இருந்து அறவிடப்பட்டு முறையற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
தக்வா என்ற அடிப்படையில் முடிந்தளவு தருவதை எடுக்கும் அளவில்தான் இன்று சகாத் அறவிடப்படுகிறது. காரணம் அதனை அறவிடுவதற்கான அதிகாரம் பெற்ற ஆமில்கள் இன்று இல்லை. இந்த ஆமில்களை நியமிக்கும் கலீபாவும் இல்லை.
இதனால் சகாத் எனும் கடமை பகுதியாக அல்லாது முழுமையில்லாத நிலையில் அதிகாரமற்ற நிலையில் அறவிடப்பட்டு முறையாக பகிர்ந்தளிக்கப்படாட நிலையினை நாம் காணலாம்.
இதனல்தான் இன்று செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறும் அதேவேளை ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருப்பதனைக் காணலாம்.
இன்றுள்ள முஸ்லிம் நாடுகளில் உள்ள செல்வங்களுக்கான சகாத் முழுமையாக ஏனைய முஸ்லிம் நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இல்லை.
அதேநேரம் மிக வறிய முஸ்லிம் நாடுகளான சோமாலியா எதியோப்பியா போன்ற நாடுகளில் பட்டினிச்சாவு இருக்கும் போது சவூதிஅரேபியா, குவைத் கட்டார் போன்ற நாடுகளில் செல்வம் மிகைத்துக்காணப்படுவதனைக் காணலாம்.
இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு தேசத்தின் எல்லைக்குள் வளப்ப பங்கீடும் சகாத் விநியோகமும் முறையாக நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பினும் அது ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படத் தேவையான முஸ்லிம் உம்மத்தினது பொதுத் திறைசேரி இன்று உலகில் இல்லை.
அது உருவாகிட நபி வழியிலான இஸ்லாமிய அரசு நிறுவப்படவேண்டும். அதன் கலீபா சகாத் முறையாக அறவிடப்பட்டு விநியோகம் செய்யப்படத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுப்பார். இது 1300 வருட இஸ்லாமிய ஆட்சியில் நாம் கண்ட உண்மையாகும்.
இது இன்று முழுமையாக சகாத் கொடுக்கத் தகுதியானவர்களிடம் இருந்து அறவிடப்படுவதில்லை.
சில அதிகாரமற்ற அமைப்புக்களால் உலகில் முஸ்லிம்களிடம் இருந்து அறவிடப்பட்டு முறையற்ற முறையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
தக்வா என்ற அடிப்படையில் முடிந்தளவு தருவதை எடுக்கும் அளவில்தான் இன்று சகாத் அறவிடப்படுகிறது. காரணம் அதனை அறவிடுவதற்கான அதிகாரம் பெற்ற ஆமில்கள் இன்று இல்லை. இந்த ஆமில்களை நியமிக்கும் கலீபாவும் இல்லை.
இதனால் சகாத் எனும் கடமை பகுதியாக அல்லாது முழுமையில்லாத நிலையில் அதிகாரமற்ற நிலையில் அறவிடப்பட்டு முறையாக பகிர்ந்தளிக்கப்படாட நிலையினை நாம் காணலாம்.
இதனல்தான் இன்று செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறும் அதேவேளை ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருப்பதனைக் காணலாம்.
இன்றுள்ள முஸ்லிம் நாடுகளில் உள்ள செல்வங்களுக்கான சகாத் முழுமையாக ஏனைய முஸ்லிம் நாடுகளில் வாழும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இல்லை.
அதேநேரம் மிக வறிய முஸ்லிம் நாடுகளான சோமாலியா எதியோப்பியா போன்ற நாடுகளில் பட்டினிச்சாவு இருக்கும் போது சவூதிஅரேபியா, குவைத் கட்டார் போன்ற நாடுகளில் செல்வம் மிகைத்துக்காணப்படுவதனைக் காணலாம்.
இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு தேசத்தின் எல்லைக்குள் வளப்ப பங்கீடும் சகாத் விநியோகமும் முறையாக நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பினும் அது ஏழை நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படத் தேவையான முஸ்லிம் உம்மத்தினது பொதுத் திறைசேரி இன்று உலகில் இல்லை.
அது உருவாகிட நபி வழியிலான இஸ்லாமிய அரசு நிறுவப்படவேண்டும். அதன் கலீபா சகாத் முறையாக அறவிடப்பட்டு விநியோகம் செய்யப்படத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுப்பார். இது 1300 வருட இஸ்லாமிய ஆட்சியில் நாம் கண்ட உண்மையாகும்.
No comments:
Post a Comment