Aug 6, 2013

இஸ்லாத்தின்படி வாழ்வின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசு இருப்பது பர்ளு...!

இஸ்லாம் என்பது அரசு, சமூகம் மற்றும் மனிதர்களின் வாழ்வியல் ஆகியவற்றை உள்ளடக்கிய சித்தாந்தம் என்பதால் ஆட்சிபுரிதல் என்பது அதன் பிரிக்கமுடியாத பகுதியாக உள்ளது.

ஆகவே அரசை நிர்ணயிப்பதன்வாயிலாக ஆட்சிபுரிதலை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.

அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரிதல் கட்டாயக் கடமை என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டுள்ளன.

அல்லாஹ் அவனது திருமறையில் இது குறித்து இவ்வாறு கூறுகிறான்.

"எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே தீர்ப்புச் செய்வீராக இன்னும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோஇச்சையைப் பின்பற்றாதிருப்பீராக." (அல்குர்ஆன் - 5: 48)

“இன்னும் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே அவர்களிடையே தீர்ப்புச் செய்வீராக மேலும் அவர்களுடைய மனோஇச்சையை பின்பற்றாதிருப்பீராக இன்னும் அல்லாஹ் உம்மீது இறக்கி அருளியவற்றில் சிலவற்றைவிட்டும் உம்மைத் திருப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக.”
(அல்குர்ஆன் - 5: 49)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்.” (அல்குர்ஆன் - 5: 44)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களாவார்கள். ” (அல்குர்ஆன் - 5: 45)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் பாவிகளாவார்கள். ” (அல்குர்ஆன் - 5: 47)

“உமது இறைவன்மீது ஆணையாக, தங்களிடையே எழும் சர்ச்சைகளில் உம்மை நீதிபதியாக ஏற்று பின்னர் நீர் தீர்ப்புச் செய்தவற்றில் எத்தகைய அதிதிருப்பதியும் தமது உள்ளங்களில் கொள்ளாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரை அவர்கள் உண்மையாக ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள்”
(அல்குர்ஆன் - 4: 65)

“ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் இன்னும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்” (அல்குர்ஆன் - 4: 59)

“மனிதர்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கினால் நீதமாகவே தீர்ப்புவழங்குங்கள்” (அல்குர்ஆன் - 4: 58)

ஆனால் துரதிஸ்டவசமாக இன்று இஸ்லாம் பகுதியாக சில முஸ்லிம் நாடுகளில் ஆளப்படுகிறது. இதனால் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான குப்பார்களது சதித்திட்டம் மற்றும் படையெடுப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றில் இருந்து உம்மத்தை பாதுகாக்க உம்மத்தினது கண்ணியம் பேணப்பட முடியாத நிலையில் முஸ்லிம் உம்மத் திக்குமுக்காடி இருப்பதனைக் காணலாம்.

இவற்றில் இருந்து மீள நபிவழியில் மீள இஸ்லாமிய அரசு ஒரே தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

இதற்கு தடையான தேசியவாதச் சிந்தனை உம்மத்திடம் களையப்பட்டு முஸ்லிம் இராணுவ நுஸ்றா கிடைக்க வேண்டும்.

அத்தகைய சூழல் உருவாக இயன்ற தாவாக்களை முன்னெடுப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

No comments:

Post a Comment