Sep 10, 2013

வட்டியும் முஸ்லிம்களும்...மீளுவதற்கான வழி முறைகள் ....?


வட்டி நரகிற்கு இட்டுச் செல்லும். ஆம் நாம் அதனைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அது குறித்து ஏகப்பட்ட மார்க்கச் சொற்பொழிவுகள்!

ஆனால் ஊரில் வட்டி வங்கிகள் திறக்கப்படும் போது அதனை எம்மால் எதிர்க்க முடியாது காரணம் வட்டி வங்கிகளை நடைமுறைப்படுத்துவது அரசு.

இது நமது நம்பிக்கைக்கு முறனானது. நமது ஈருலக வாழ்வையும் நாசப்படுத்தக்கூடியது.

அப்படியாயின் சிறுபான்மை முஸ்லிம்களின் பொறுப்பு?

இஸ்லாம் தனிமனித வாழ்வில் வருவதற்கு தனிமனிதனது ஈமான் செல்வாக்குச்செலுத்தும்.

ஆனால் பொதுவாழ்வில் அந்த ஈமான் நிலைத்திட அதனை அமுல்படுத்திட சமூகத்திற்கு அதிகாரம் தேவை. அந்த அதிகாரத்தை வழங்குவது அரசு.

இன்று இலங்கை ஒரு முதலாளித்துவ சிந்தனையில் தமது பொருளியல் ஒழுங்கை ஒழுங்குபடுத்தும் அரசு. அது நிச்சயம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளியல் ஒழுங்கை அமுலாக்கும். அதே நேரம் முஸ்லிம்கள் வட்டிகடைகளை மூட முட்பட்டால் என்ன நடக்கும்? அதற்கான பவர் எம்மிடம் இருக்கா?

அப்படியாயின் மாற்றுவழி சிறியளவில் நாம் இஸ்லாமிய வங்கிகளை நாடலாம் ஆனால் அது தற்காலிகமானது.

அதே நேரம் அது ஏதோ அடிப்படையில் இலங்கையில் உள்ள ஒரு வட்டி வங்கியுன் தொடரபை கொண்டிருக்கும். முஸ்லிம் நாடுகளில் வட்டியின் நிலை? ஆம் அங்கு கூட வட்டிவங்கிகளின் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. அல்லது அந்த நாடு தமது முதலீட்டை ஏதாவது முதலாளித்துவ வட்டி வங்கிகளில் வைப்பிலிட்டடு செயற்படுகிறது.
அவ்வாறாயின் மாற்று வழி?

நிச்சயமாக அது இஸ்லாம் எதிர்பார்கும் உலக தலைமைத்துவம் மீளவரும் போதுதான் சாத்தியம். ஏனெனில் இன்று அநேகமான இஸ்லாமிய நாடுகளின் அரசியல் விவகாரங்களின் தலையீடு மேற்கத்தைய முதலாளித்துவ ச்கதிகளில் தங்கியுள்ளதால் இந்நிலை தொடரவே செய்யும்.

இஸ்லாமிய கிலாபா எனும் ஆட்சி வரும்போது கிடைக்கும் இஸ்லாமிய உலக ஒழுங்கே மாற்றீட்டு பெருளாதாரத்தை உலகிற்கு வழங்கும். அதற்கே அந்த முழுமையான அதிகாரம் உண்டு. அத்தலைமைத்துவமே முழுமையான பாதுகாப்பையும் இஸ்லாம் சகல துறைகளிலும் அமுலாக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

1924 ஆம் ஆண்டுக்கு முன்பு நபி (ஸல்) அவரகள் மதீனாவில் ஆட்சியை நிறுவும் வரை இஸ்லாம் இவ்வாறான ஒரு தலைமைத்துவம் மூலமே சகல விவகாரங்களையும் ஒழுங்கு படுத்தியது.

இந்த உண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாம் பல மட்டங்களில் சிந்தனையை தூண்ட வேண்டும்.

from Mohideen Ahamed Lebbe 

No comments:

Post a Comment