Sep 30, 2013

தன்னை ரப்பாக பிரகடன்ப்படுத்தி இஸ்லாத்தின் எழுச்சியை தடைசெய்ய முற்படும் Criminals பற்றி அல்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்துகிறது.

அபரிமிதமான செல்வமும் அதிகாரமும் வழங்கப்படும் போது ஒரு மனிதன் தன்னை ரப்பாக பிரகடனப்படுத்த ஆரம்பித்துவிடுவான்.

அத்தகையவன் மனோ இச்சைகளை பின்பற்றுவதுடன் அல்லாஹ்வுடைய சட்டம் ஒழுங்கு நீதி நிலைத்திடாதிருக்க உழைப்பான்.

மனிதச் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தி மனித சமூகத்தை ஜாஹிலிய்ய சமூகமாக வாழவழிவகுப்பான்.

உண்மையை மறைத்து பொய்புரட்டுக்களை வாழவைப்பான்.

இத்தகையவன் சர்வாதிகாரியாக தொழிற்பட ஆரம்பிப்பான்.

அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் உலகில் நிலைபெறமால் தடுப்பான்.

அத்துடன் அவன் எல்லாவகையான குற்றங்களையும் செய்யும் ஒரு கிறிமினலாக தொழிற்படுவான்.

இஸ்லாம் எழுச்சிபெறக் கூடாது என்று தொழிற்படும் அத்தகையவர்களைப் பற்றி சூறா அல் கலமில் அல்லாஹ் 9 தன்மைகளைகொண்டு அடையாளப் படுத்துகிறான்.

சூறா அல்கலமின் வசனங்கள் (68: 9-13) இவற்றைத் தெளிவுபடுத்துகிறது. 


1. பொய்யர்கள் (வாக்குறுதியகள் அழிப்பான் ஆனால் மாறுசெய்வான்)
2. மிகவும் இழிந்தவனாக தொழிற்படுவான்.
3. அவதூறுகூறி இழிவுபடுத்துவான்
4. பிளவுகளைத் தூண்டுவான்.
5. இஸ்லாம் எழுச்சிபெறுவதனை சகலவழிகளிலும் தடைசெய்வான்.
6. அடக்குமுறையை கையாளுவான்
7. பாவியாக இருப்பான்.
8. துஷ்டனான இருப்பான்
9. பிறப்பில் இழிவடைந்திருப்பான்

No comments:

Post a Comment