Oct 9, 2013

சடவாத மதஒதுக்கல் சிந்தனை

அனைத்து தீமைகளுக்கும் அரணாக மேற்கினது முதலாளித்துவ சடவாத மதஒதுக்கல் சிந்தனையுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக அல்லாது ஒரு மக்கள் கூட்டமாகவே வாழகிறார்கள். நாம் வாழும் சமூகம் மத ஒதுக்கலையும் முதலாளித்துவ சடவாதச் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. 

மத ஒதுக்கல் சிந்தனையின் காரணமாக எந்த ஒரு பாவச்செயலும் சட்ட ரீதியாகத் தடைசெய்யப்படுவதில்லை. அத்துடன் தனி நபர் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு பிரஜைக்கு பாவங்களைச் செய்யும் சந்தர்ப்பங்களை சமூகம் வழங்குகிறது. பாவங்கள் செய்யும் போது ஒருவருக்கு ஏற்படுத் தடைகளை அகற்றும் பொறுப்பையும் அரசு சமூகம் சுமந்துள்ளது.

முதலாளித்துவச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் முதலாளி வர்க்கம் மதுக்கடைகளையும் விபச்சார விடுதிகளையும் சமூகத்துக்குள் நிறுவுகின்றன.

சடவாதச் சிந்தனையின் காரணமாக ஐம்புலன்களுக்குள் அகப்படாத இறைவனையும் மறுமையையும் மறுப்பதால் அல்லது புறக்கணிப்பதால் உலக வாழ்வு மாத்திரமே உண்மை எனக் கொள்ளப்படுகிறது. எனவே வாழ்வின் இலட்சியம் புலன் இன்பங்களை உச்சப்படுத்துவது மாத்திரமாகவே கொள்ளப்படுகிறது.

எந்தப்ப பாவங்களை முஸ்லிம் மக்கள் கூட்டம் தடுக்க விரும்புகிறதோ அந்தப் பாவங்கள் அத்தனையும் இலங்கைச் சமூகத்தினால் வளர்க்கப்படுகிறது. குறைந்த பட்சம் வளர்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனவே பாவங்களின் ஒழிப்பு என்பது வெறும் பாவங்களுக்கு எதிரான போராட்டமல்ல. அது மதஒதுக்கல் சிந்தனைக்க எதிரான போராட்டம். அது முதலாளித்து அரசியல் மற்றும் சடவாத சமூகக்கட்டமைப்புக்கு எதிரான போராட்டம்.
இன்று பாவங்களின் தாயாக விளங்கும் மதஒதுக்கல் முதலாளித்து மற்றும் சடவாதச் சிந்தனைகளும் அச்சிந்தனைகளைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சமூகக் கட்டமைப்புகளும் என்பதனை நாம் உணரவேண்டும்.

இன்று பத்திரிகைகள், வானொலி, டீவி, இன்டர்நெட், சினிமா, டீவிகேம்ஸ் மற்றும் எமது பல்கலைக் கழகங்கள் போன்றவை மதஒதுக்கல் முதலாளித்துவ சடவாதச் சிந்தனைகளை பிரதிபலிப்பதுடன் அச்சிந்தனைகளை பாதுகாப்பதற்கு அரசியல் மற்றும் சமூக நிறுவனங்கள் மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வெறும் ஊடகங்களாகும்.

இன்று எல்லா முஸ்லிம்களுக்கும் போதைப்பொருள் பாவனை அல்லது விபச்சாரம் ஹறாம் என்பதும் அது ஈருலக வாழ்வையும் நாசமாக்கும் என்பதும் தெரியும். இருந்தும், எம்மில் சிலர் இப்பாவங்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து மிம்பர்களில் பேசப்பட்டாலும் பாவச்செயல்கள் ஒழிந்துவிடப்போவதும் இல்லை.

இது இவ்வாறு இருக்கும் போது மற்றொரு பக்கத்தில் இவ்வாறான தவறான சிந்தனைகளால் உந்தப்பட்டு கெட்டுப்போன இளைஞர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மேலைத்தேய கலாச்சார யுத்தத்தினால் காயப்பட்டவர்கள். இவர்களுக்கு வெறும் புத்திமதி கூறல், பயங்காட்டல் அவர்களது பழங்க வழக்கங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதும் இல்லை.

இந்த அடிப்படையை உணர்ந்து நாம் இன்றைய இஸ்லாத்திற்கு எதிரான கலாச்சார மோதல்கள் பற்றி தெளிவாக உணர்ந்து மேலைத்தேய சிந்தனைகளில் இருந்து எமது இளைஞர்களையும் யுவதிகளையும் பாதுகாப்பதுடன் அது இஸ்லாமிய சிந்தனைகளுக்கு எந்தளவு அச்சுறுத்தலானது என்பன பற்றிய அறிவூட்டல் வழங்க வேண்டும்

No comments:

Post a Comment