Oct 24, 2013

இதோ இன்னொரு முஹர்ரம் ....



அது கலீபா உமர் (ரலி ) ஆட்சிக்காலம் ; அபூ மூசா அல் அஸ் அரி (ரலி )  கலீபாவிட்கு எழுதிய கடிதத்தின் வரிகளின் முக்கியத்துவம் கலீபாவால் உணரப்பட்டது . அப்படி என்னதான் எழுதியிருந்தார் ?விடயம் இதுதான் " உங்களிடம் இருந்து வரும் கடிதங்களில் காலம் குறிப்பிடப்படுவதில்லை " எனும் செய்தியே அது . கலீபா முக்கியமான சஹாபாக்களை ஓன்று கூட்டி ஆலோசித்தார்கள் . முஸ்லீம் உம்மாவின் காலக்கணிப்பின்' கலண்டர் ' உதித்தது . அந்தக் கட்டங்கள் சுருக்கமாக உங்கள் கண்முன் தருகிறேன் .கீழே அவதானியுங்கள் .

ஆலோசனை கட்டத்தில் பற்பல ஆலோசனைகள் சிலர்  நபி (ஸல்) அவர்களின் பிறப்பில் இருந்து வருடக்கணிப்பை தொடங்கலாம் என்றனர் ,இன்னும் சிலர் நுபுவத்திளிருந்து தொடங்கலாம் என்றனர் ,ஒரு சாரார் ஹிஜ்ரத்தில் இருந்து தொடங்கலாமே என்றனர் . இந்த  ஆலோசனையே ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . சிந்திக்க வேண்டிய இடம் இதுதான் .
                                           
இந்த ஹிஜ்ரத்தின் நிகழ்வுதான் உண்மையில் இஸ்லாத்தின் கட்டமைப்பு வடிவத்தை , அதன் பிரத்தியோகமான நாகரீகத்தை காட்டக்கூடிய   ,அதன் பூரண பிரயோகத்தின் திட்டமிட்ட வாயிலாக அமைந்தது .  'சுரகாவிட்கு' பாரசீக மன்னரின் தங்கக் காப்புகள் பெற்றுத்தரப்படும் என்ற  வாக்குறுதி வழங்கப்பட்டதும் இந்த ஹிஜ்ராவில் தான் .அதாவது இனி தாகூத்திய சாம்ராஜ்யங்கள் இறைவனின் படைக்கு முன் நிம்மதியாக நிமிர்ந்து நிற்க முடியாது . என்ற எதிர்வு கூறப்பட்ட சுப செய்தி சொல்லப்பட்டதும். இந்த ஹிஜ்ராவில் தான் . அதாவது சத்தியத்துக்கும் அசத்தியதுக்கும் இடையில் அதிகாரப் பிரிகோடு தெளிவாக வரையப்பட்டது.
                                                                         
அதனையடுத்து எந்த மாதத்தில் இருந்து வருடக் கணிப்பை மேட்கொள்ளலாம்  என்ற ஆலோசனை மேட்கொள்ளப்பட்டது .அதன் போது சில சஹாபாக்கள் நபி (ஸல் ) ஹிஜ்ரத் சென்ற ரமலான் மாதத்தை முன் மொழிந்தனர் .ஆனால் தீர்மானிக்கப்பட்டதோ 'முஹர்ரம் ' காரணம் இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்ட 'துல்ஹஜ் ' மாதத்தை இறுதியாக்கி அதற்கு அடுத்ததாக வரும் 'முஹர்ரம் ' தலை மாதமாக அங்கீகரிக்கப்பட்டது . அத்தோடு இந்த மாதம் அல் குர் ஆன் குறிப்பிடும் புனித மாதங்களில் ஒன்றுமாகும் . இதுதான் இஸ்லாமிய 'கலண்டர் 'உத்தியோக பூர்வமாக பிறந்த வரலாறாகும்.

இன்று இன்னோர் முஹர்ரத்தை நாம் எதிர்கொள்ளப்போகிறோம் . ஆனால் அரசியல் அனாதைகளாக!! பசித்த எதிரியின் புசிக்கும் பண்டங்களாக !! எமது நிலங்களில் 'டெண்ட் 'அடித்த எதரிகளின் செருப்புகளாக வீற்றிருக்கும் மனிதர்கள் முன்னாக  , 'வெஸ்டனை' சிஷ்டமாக்கி இனி இதுதான் இஸ்லாம் என கூச்சலிடும் மேற்கின்  அடிவருடித்தன மேதாவிகள் முன்பாக .  யா அல்லாஹ் உனது கருணையை எங்கள் மீது பொழிவாயாக இந்த சாபக்கேடுகளில் இருந்து எங்களுக்கு மீட்சியை தருவாயாக . மீண்டும் தூய இஸ்லாத்தின் அதிகார நிழலில் கண்ணியம் பொருந்திய முஸ்லீம்களாக வாழ அருள் பாலிப்பாயாக.

http://khandaqkalam.blogspot.ae

No comments:

Post a Comment