Oct 20, 2013

சிரியாவில் அசாத்தின் அடக்குமுறையினால் அகதியாக்கப்பட்ட முஸ்லிம்கள்


இன்று சிரியாவில் அசாத்தின் அடக்குமுறையினால் அகதியாக்கப்பட் முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ள விதத்தை விபரிக்கும் படவரைபுதான் இது.

இவர்கள் இந்த கஷ்டமான சூழலில் இருந்து விடுவிக்கப்பட இன்று உலகில் எத்தகைய முஸ்லிம் தலைமைத்துவமும் அக்கறை எடுக்கவில்லை.

1300 வருட இஸ்லாம் வழங்கிய தலைமத்துவமான கிலாபா ஆட்சிமுறையில் இத்தகைய நெருக்கடியான சூழலில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

முஸ்லிம்களது உரிமை, கண்ணியம், உயிர், மானம் என்பன காக்கப்பட அமீருல் முஃமினீன் தனது முஸ்லிம் இராணுவத்தை பயன்படுத்தினார் என்பது எமது வரலாறு.

ஆகவே இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள ஒரே இஸ்லாமிய தலைமை நபி வழியில் மீள நிறுவப்படுவதன் மூலமே முஸ்லிம்களுக்கு விடிவும் விமோசனமும் உருவாகும். குர்ஆன் சுன்னா உலகில் முழுமையாக அமுலாக்கப்பட்டு முழு உலக மக்களும் இன்றைய முதலாளித்துவ அடக்குமுறையில் இருந்து விடுவிக்கப்பட வழிவகுக்கும்.

இன்று உலகில் மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிமுதல் ஒழுக்க வீழ்ச்சி வரையிலான அனைத்து பிரச்சினைகளுக்குமான மாற்றீட்டுத் தீர்வை இஸ்லாம் முன்வைத்து முழு உலக மக்களும் நிம்மதி பெருமூச்சு விடவும் அமைதியடையவும் வழிவகுக்கும். ஏனெனில் அகிலங்களின் ரப்பாஹிய இறைவன் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை முறை தீனுல் இஸ்லாம் மாத்திரமே என்பதனை நாம் உணர்வோம்.

No comments:

Post a Comment