Oct 13, 2013

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்…..!

இவர்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அஞ்சக் கூடியவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் தீனுல் இஸ்லாத்தினது பாதுகாவலர்களாகவும் திகழவேண்டும்!

இதுவே, இஸ்லாம் எழுச்சிபெற மறுமலர்ச்சிபெற இஸ்லாத்திற்கு எதிரான தீயசக்திகள் தோற்கடிக்கப்பட வழிவகுக்கும்!

நபி (ஸல்) கூறினார்கள் :
'உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்லவில்லை. எனவே எவர் ஒருவர் அவ்வறிவைப் பெற்றுக் கொண்டாரோ அவர் முழுமையானதொரு பங்கைப் பெற்றுக் கொண்டவராவார்.'

இந்த வகையில் “சித்தீக்” எனும் உண்மையை உரைக்கம் பண்பு “அமானா” எனும் அமானிதம் பேணும் பண்பு “பதானா” எனும் புத்திகூர்மை “தப்லீக் “ எனும் பிரச்சாரம் என்ற நான்கு வகைப் பண்புகளும் நபிமார்களது பண்புகளாகும்.

இத்தகைய உண்ணதமான பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக, வாரிசா எமது உலமாக்கல் இருக்கும் போதுதான் வஹியின் ஒளியில் முழுமனித சமூகதிற்குமான நேர்வழி கிடைப்பதற்கும் குர்ஆன் சுன்னாவின்படி மனித சமூகம் வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிவகுக்கும்.

இத்தகைய உண்ணதமான பணியை சுமந்த உலமாக்கல் அச்சமற்றவர்களாகவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணிந்து நடப்பவர்களாகவும் ஹக்கிற்காக போராடுபவர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நீதி நிலைக்கும். மனித சமூகம் நல்வழிப்படும்.

இன்று உலகில் முஸ்லிம் ஆட்சியாளர்களது அநீதியை எதிர்த்து போராட வேண்டிய மிகப் பாரிய பணியை உலமாக்கள் கொண்டுள்ளதுடன் அல்லாஹ்வுடைய தீன் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஒழுங்குபடுத்தப்பட முஸ்லிம்களது ஒரே தலைமை மீள நபி வழியில் உருவாக உழைக்கவும் கடமைப்பட்டவர்கள். இவர்களது மார்க்க உபதேசங்களில் இத்தகைய இஸ்லாமிய தலைமை உருவாகுவதன் அவசியம் பற்றி அதிகம் அழுத்தம் தொணிக்கவேண்டும்.

இன்று இலங்கையில் பேரினவாத சக்திகளது “இனவாதப் போக்கு” மற்றும் “இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையுத்தம்” போன்றவற்றில் எமது உலமாக்களது பங்குபற்றி மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இவர்களுக்கு சமூகத்தை வழிநாடாத்துவதற்கான பாரிய பொறுப்புள்ளது. குப்பார்களுக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்தவும் அவர்களது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.

இன்று உலமாக்களில் பெரும்பாலானவர்கள் மேற்கினது மதஒதுக்கல் சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டு இஸ்லாத்தை பள்ளிக்குள் முடக்கிய நிலையில் தமது உபதேசங்களை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தை இன்றுள்ள முதலாளித்துவ உலக ஒழுங்கினது மாற்றீடாக அதன் வாழ்வியல் அம்சங்களை, பொருளாதார முறைமைகளை, அரசியல் ஒழுங்கை முன்வைத்து ஒடுக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு இஸ்லாம்தான் ஒரே தீர்வு என்பது பற்றி ஆக்கபல கருத்தியல் முன்னெடுப்புகளை எடுக்க தவறியிருப்பதனை நாம் காணலாம்.

இன்று முஸ்லிம்களது ஈமானுக்கு வேட்டு வைக்கும், இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போக்கை கண்டும் மௌனித்தபடி தானும் தன்பாடும் என்றபடி வாழும் மார்க்க அறிஞர்கள் தங்களது அமானிதம் பற்றி சிந்திக்கவேண்டும்.

அத்துடன் முஸ்லிம் புத்தி ஜீவிகள் இஸ்லாம் எனும் கண்ணாடியினூடாக இன்று முஸ்லிம்களுக்கு எதிரான சிநத்தனையுத்தத்தை பார்த்து உரிய தஃவாக்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது எதிர்கால சந்ததிகளது இருப்பை பாதுகாப்பதுடன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கும்.

சிந்திப்போம்! ஆக்கபல தஃவாக்களை முன்னெடுப்போம்! பேரினவாத தீயசக்திகளது நச்சுக்கருத்துக்களை எதிர்கொள்வோம்! இஸ்லாத்தை முற்படுத்துவோம்!



Mohideen Ahamed Lebbe 

No comments:

Post a Comment