May 28, 2014

அந்த நாள் மறந்து விட்டதா ?


அந்த நாள் மறந்து விட்டதா ? இந்த முஸ்லீம் உம்மத்தின் மீது உத்தியோக பூர்வமாக தாகூத்திய அடிமை சாசனம் வரையப்பட்ட நாள் . காசா முதல் காஸ்மீர் வரை கந்தலாக்கப்பட்ட இந்த முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமை மானம் பற்றி தட்டிக்கேட்க நாதியற்றதாக்கி அல்லாஹ்வின் அடிமை மட்டுமே என்ற கண்ணியத்தின் வரலாறு ;தேசம் ,தேசியம் , அரபி, அஜமி, வெள்ளையன்,ஆபிரிக்கன் என்ற எல்லைக் கோடுகள் மூலம் களங்கப் படுத்தப் பட்ட நாள் . இஸ்ரேல் எனும் இரக்கமற்ற இரத்தக் காட்டேரி தன்னை சுற்றியிருந்த அரசியல் விலங்கின் பூட்டை உடைத்து தனது சாவகாசமான
சரித்திரப் படுகொலைகளுக்கு சொடுக்குப்போட்டு பாதை அமைத்த நாள் . 

போஸ்னிய புதைகுழிகளில் குற்றுயிராய் கதறிய இந்த உம்மத்தின் அழைப்பாக " இஸ்லாத்தின் படை எங்கே ?" எனும் வினாவுக்கு வெட்கித்துப்போய் மௌனத்தை பதில் அளிக்க ஏதுவாய் அமைந்த
நாள் . சிந்துவில் எம் உம்மா சிதறடிக்கப்பட்டபோதும் ,காவித் துரியோதனர்கள் துகில் உரித்து எம் சகோதரிகளை மானபங்கப்படுத்திய போதும் "இன்னொரு முஹம்மது பின் காசிம் வரமாட்டாரா ? " என்ற வினாவுக்கு 'பொலிடிகல் டிப்லோமடிக்' புரியாது கண்ணீரோடு வெறுங்கை ஏந்தி பிரார்த்தனை மட்டும்
புரிந்த நாள் . மியன்மாரின் படுகொலை நாடகத்தில் அரசியல் திருப்பத்தின்
இரத்த சாட்சியமாய் இந்த உம்மத்தின் உதிரங்கள் விலைபேசப்
பட்டபோது மாதக்கணக்கில் வேடிக்கை பார்க்க வைத்த நாள் .

மொத்தத்தில் முஸ்லீம் எனும் சகோதரத்துவ சிந்தனை திசைமாறி ; குப்பார் வீசிய பிச்சைப் பாத்திரத்தில் வாழ்க்கை குதிரைஒட்டி சுகம் காண்பதில் சுவனம் நுழையலாம் எனும் ஜாஹிலீயத் மார்க்கமாக முஸ்லிமின் தலையில்
ஏறி யகூதிய கடிவாளத்தை சிலுவையின் முகவரியோடு பூட்டிய நாள். அது எந்தநாள் ??

 இஸ்லாத்தின் ஒரே தலைமையும், அரசியல் இராஜ தந்திர கேடையமுமான
இஸ்லாமிய கிலாபா வீழ்த்தப்பட்ட நாள். அது ஹிஜ்ரி 1342 ரஜப் மாதம் பிறை 28. ஆனால் இது முடிவுரை எனும் தப்புக் கணக்கில் யூத ,கிறிஸ்தவ எதிரிகளால் கொக்கரிக்கப்பட்ட வார்த்தைப் புரளி என்பது புரியும் காலம்
வெகுதூரத்தில் இல்லை . நம்புங்கள் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மீண்டும்வரும் ;ஏனென்றால் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே " நீங்கள் அல்லாஹ்வுக்கு (சுப ) உதவி செய்தால்அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதிப் படுத்துவான் . அவன் கேட்கும் உதவி நீங்கள் அவன் பிரதிநிதி என்பதை உறுதிபடுத்த நிபந்தனை அற்று அவனது மார்க்கத்தை மீண்டும்
சக்தியாக்க உதவுங்கள் என்பதே . அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல் ) அந்த
சஹாபாக்களுக்கும் உதவிய அதே ஜிப்ரீல் (அலை ) தனது வானவர்
படையோடு எமக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் . அல்லாஹு அக்பர்............

No comments:

Post a Comment