Jun 4, 2014

மகாராஷ்டிராவில் காவிகள் வெறியாட்டம் : முஸ்லிம் இஞ்சீனியர் அடித்துக்கொலை !


பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; 500 குர்ஆன் எரிப்பு.... கடும் அச்சத்தில் முஸ்லிம்கள்!! 

116 காவி குண்டர்கள் கைது !!! 

மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும், கடந்த 5 நாட்களாக, 30 பள்ளிவாசல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, முஸ்லிம்களின் உயிர்-உடமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று (03/06) 'முஹ்சின் சாதிக் ஷேக்' என்ற 24 வயது 'ஐடி இஞ்சீனியர்' அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார், பள்ளியின் இமாம் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த மும்பை ரவுடி பால்தாக்கரே குறித்தும் சத்ரபதி சிவாஜி, மற்றும் சில ஹிந்து தலைவர்கள் குறித்தும் யாரோ ஒரு விஷமி, 'பேஸ்புக்'கில் மார்பிங் செய்து படம் போட்டுள்ளான் எனக்கூறி, கடந்த சனிக்கிழமையன்று, காவிகள், கலவரத்தில் ஈடுபட்டனர்.

200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

குறிப்பாக 'புனே' நகரை சுற்றிவளைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

50 க்கும் அதிகமான 'குர்ஆன்' பிரதிகளை கிழித்தெறிந்தும், தீவைத்துக் கொளுத்தியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.

ஆயிஷா பள்ளிவாசலின் இமாம், மவுலவி அஷ்பாக் மிஸ்பாஹி, கடுமையாக தாக்கப்பட்டு 'இனாம்தார்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டேவாடி பகுதியில் உள்ள 5 மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், 'மதரசா ஷப்னம் கரீப்நவாஸ்' பாடசாலயில் அரபி பயில வந்த 20 சிறுவர்களையும் தாக்கி, அவர்கள் வைத்திருந்த குரான் உள்ளிட்ட புத்தகங்களை கிழித்துள்ளனர்.

குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு, விரைவில் நடக்கவுள்ள தேர்தலில், பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றிப்பெறவே, இக்கலவரங்கள் நடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Maruppu

No comments:

Post a Comment