Jul 8, 2014

யதார்த்தம் பிழைக்குதே!!!

எம் தீராத தாகம் தீர்க்க கானல் நீரா !?
இதுதான் அதுவா !? அதுதான் இது என்றால் 
அடுத்தவைகள் அதிர்ந்திருக்க வேண்டுமே !?
அரண்ட கண்களால் பார்த்தால் எல்லாம் 
பேய்தான் !? உங்களுக்கு பொறாமை 
நச்சரிப்பான எச்சரிப்பும் நையாண்டியும் எமக்கு !?

'ஆர்மி அரசாண்டால் வெடிதீர்க்கும் சாத்திரங்கள்' 
என ஒரு நூதனத்தை சாதனையாக்கி விட்டீர்களே !
காத்திருந்ததால் கனியவில்லை அதனால் 
அடித்துப்பறித்து 'கார்பைட்' போட்டு பழுக்க வைப்போம் !
என 'கம்யூனிஸ்ட் 'பாணியில் சிலரின் வினோத விளக்கங்கள் !
'மாஒ சேதுங் ' ஒன்றும் நமக்கு நபியல்லவே !
உள் மனம் எச்சரித்து உசாராக்கியது !
சுன்னாவில் தேடாமல் இது என்ன சுதந்திரம் !!!

அவசியத்தின் அவசரம் அதுதான் 
கல்லடித்து வீழ்த்தினோம் என்கிறீர்கள் !
அநீதி அதை எதிர்த்தது வரை சற்று சரி என்றாலும் 
அந்த பிரகடனம் தான் முற்றாய் பிழைக்கிறதே!
மாங்காய் அல்ல இது அல்லாஹ்வின் மார்க்கம் !
புரியவில்லையா உங்களுக்கு !?

காலத்தின் கட்டாயம் என கற்பழித்தவனுக்கே 
கல்யாணம் கட்டி வைக்கப்படும் பெண் போல !
இந்த உம்மத்துக்கு அதை தீர்வாய் காட்டும் 
கட்டப்பஞ்சாயத்துகள் இன்று ஏராளம் தாராளம் !
குயிலுக்கு அழகாய் கூவமுடியும் 
இது அக்மார்க் உண்மை மாற்றுக் கருத்தும் எமக்கில்லை 
ஆனால் அதற்கு கூடு கட்டி 
குஞ்சுக்கு அடைகாக்க முடியுமென்றால் 
யதார்த்தம் பிழைக்குதே!!!

No comments:

Post a Comment