Jul 13, 2014

ஒரு முஸ்லிமின் சுயசரிதை !

குருதியில் குளித்து 
மண்டையோட்டில் மதுவருந்தி
அநாகரிகத்தின் அடிமடியில் 
கல்லாகிப்போன 'கல்புகளை'
உதாரண புருஷர்களாய்
செதுக்கிய 'வஹியே' !
இன்றும் எம் பரண்களில்
பத்திரமாய் தான் இருக்கிறாய் !

நீ வந்த மாதத்திலும்
உன்னை உதட்டால் ஒலிக்க வைத்து
பத்திரமாய் பொதி சுமக்கும்
பணியில் தான் இன்னும் நான் !?

மௌடீக குப்பைகள் ஈமானை விலைபேச
ஆன்மீக வறுமைதான் விடாமல் தொடர !
தியாகம் இப்போது திகிலூட்டும் விடயம்தான் !

புவியின் ஈர்ப்புக்குள் பாதம்
புதைந்துவிட புழுப்போல் வாழ்கிறேன் !
ஓர் நம்பிக்கை அந்த 'வஹி' எனும் உளி
இப்போதும் பத்திரமாய் தான் இருக்கிறது !
அது இன்னொரு சத்திய வரலாற்றுக்காய் !

No comments:

Post a Comment