Oct 27, 2015

'கிலாஃபா' விடயத்தில் சமரசம் செய்ய முஸ்லிம்கள் ஒரு கனமும் சம்மதிக்க மாட்டார்கள் பகுதி - 06

5. முஸ்லிம் உலகில் நேரடியாக மேற்கொள்ளப்படும் கிலாஃபத்திற்கான போராட்டத்திற்கு நாம் பூரண ஆதரவினை வழங்க வேண்டும். ஏனெனில் அது இஸ்லாத்தின் அதியுயர் கட்டளைகளில் ஒன்றாகும்.


“எனக்கு பிறகு ஒரு நபி வரமாட்டார். எனினும் குலபாஃக்கள் தோன்றுவார்கள். அவர்கள் பலராக இருப்பார்கள் என ரசூல்(ஸல்) சொல்ல...ஸஹாபாக்கள் அதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என வினவ, ரசூல்(ஸல்) சொன்னார்கள் “அவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பைஆவை நிறைவேற்றுங்கள். அவர்களுக்குரியதை அவர்களுக்கு வழங்குங்கள். அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) வழங்கியது பற்றி அவர்களை விசாரித்துக்கொள்வான்.” என பதிலளித்தார்கள்.
 
மேலும்  “எவரொருவர் தனது கழுத்தில் பைஆ(ஒரு கலீஃபாவுக்கு) இல்லாத நிலையில் மரணிக்கிறாரோ அவரது மரணம் ஜாஹிலிய மரணமாகும் என்ற ரசூல்(ஸல்) நபிமொழி அந்த பைஆவை வழங்குவதற்கு தேவையான கலீஃபா இல்லாத நிலையில் அவரை மீண்டும் நிறுவுவதற்கு முயற்சிக்காமல் இருப்பதன் விபரீதத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறான பல ஆதாரங்கள் கலீஃபா ஒருவரை ஏற்படுத்துவதற்கு நாம் ஏன் பாடுபட வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அதேபோன்று இப்பணியில் கிலாஃபா என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து கொண்டு கிலாஃபத்தின் பெயரால் சிந்தரிக்கப்படும் போலித் தோற்றங்களை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும் மிகவும் அவசியப்படுகிறது.

எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் உலகில் நிலவும் சர்வாதிகார, மேற்குலக முகவர் ஆட்சிகளை வீழ்த்தி கடப்பாடும், மக்களின் நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பிரதிபளிக்கக்கூடிய உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டும். இந்த கிலாஃபா என்ற அரசியல் மாற்றீடு மாத்திரமே முஸ்லிம் உலகை ஸ்திரத்தன்மையும், பலமுமிக்க ஒரு பிராந்தியமாக மாற்றும். மேலும் உலகின் ஏனைய பிராந்தியங்களில் வாழும் முஸ்லிம்களையும் அனைத்து மட்டங்களிலும் ஓரணியில் திரட்டி உலகை தலைமை தாங்கக்கூடிய ஹைரு உம்மத்தாக எம்மை மாற்றும் கருவியாகத் திகழும்.
 
எனவே குப்ரிய அரசுகளும், எமது தாஹூத்திய தலைமைகளும், உலகளாவிய ஊடகங்களும் கிலாஃபா என்ற சிந்தனைக்கு எதிராக ஓய்வின்றி சதி செய்தாலும், முஸ்லிம்கள் - அவர்கள் உலகில் எங்கு வாழ்தாலும் சரி கிலாஃபா – தமது அதிமுக்கிய மார்க்கக் கடமை என்பதையும், அதுதான் தமது மறுமலர்ச்சிக்கான ஒரே வழி என்பதையும் நன்குணர்ந்து கிலாஃபாவிற்கான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடவேண்டும்.
 

பகுதி - 05 /

(முற்றும்.)

Sources From
Darul Aman.Net

 
 

No comments:

Post a Comment