Oct 8, 2015

பிரிவினை ஷிர்கின் அடையாளம் !!

உலக அக்கிரமக்காரகளின் கூட்டுச் சதியால் உலகைத் தொழும் வஞ்சகர்களால் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து கழுத்தறுக்கும் முனாஃபிக்குகளால் முஸ்லிம்களின் முதுகில் ஏறி வெட்டி எறியப்பட்ட கிலாஃபத் எனும் இஸ்லாமியத் தலைமையை இழந்து நூற்றாண்டு கடந்து விட்டது .தலையில்லா முண்டமாய் உயிரற்ற ஜடமாய் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது.

  இஸ்லாத்தின் தலைமையை விட்டு விலகி நிற்கவும் அனுமதியில்லை பிணங்கினால் பிளவு பட்டால் வீரம் வீணாகும் .சோரம் போய்விடுவீர்கள் எச்சரிக்கை என்கிறது அல்குர்ஆன் (8:46) 

  தலைமையில்லா இந்த முஸ்லிம் உம்மா நூற்றாண்டாய் இலக்கின்றி வாழ்கின்றது .இக்கால கட்டத்தில் பட்ட துன்பங்கள் படும் அவதிகள் சொல்லி மாளாது .

 ஆப்கான் வீதிகளிலும் ஈராக்கின் நகரங்களிலும் சிரியாவிலும் லிபியாவிலும் அமெரிக்கா குண்டு மழை பொழிகின்றது .

  ஈமானின் விளிம்பில் நிற்கும் முனாஃபிக்குகளோ இன்னும் வீரியமாய் முஸ்லிம்களை காரிஜியாக்கள் என்கிறார்கள் .
 
முஸ்லிம்களை பிரிக்க முஸ்லிம்களை காஃபிராக்க தனிப் பள்ளிவாசலைக் கட்டக் காசு கொடுக்கிறார்கள் .

அமெரிக்க எஜமானிய யூத கிறித்தவ ஷிர்க்கின் கூட்டுப் படையினரின் நோக்களிந்து முஸ்லிம்களை எகிப்திலும் காஸாவிலும் கொல்கிறார்கள் இந்த முனாஃபிக்குகள் !

   அன்று நபி (ஸல்) அவர்களைக் கொல்லத் துடித்த முஷ்ரிக்குகளின் முனாஃபிக்குகளின் கூட்டுப் பட்டாளம் இன்று தலைமையில்லா முஸ்லிம்களைக் கொல்கின்றது .கேட்க நாதியில்லை .

முஸ்லிம்களின் இறைச்சியை விற்கிறான் பர்மாக்காரன் என்றால் முஸ்லிமை மாட்டு இறைச்சிக்காக  கொல்கிறார்கள் பாரத நாட்டினர் .

  நபி (ஸல்) கூறினார்கள் ஒரு முஸ்லிம் அநியாயமாகக்
கொல்லப்படுவதை அல்லாஹ் ஒருபோதும் சகிப்பதில்லை .அதை விட இந்த உலகம் முழுவதும் அழிந்து போவதை அல்லாஹ் பொருட்டாய் கருதுவதுமில்லை .( திர்மிதி)

  தலைமையில்லா இன்றைய உலகில் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் எந்த மதிப்புமில்லை .மரியாதையுமில்லை .அத்தோடு முஸ்லிம்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை .

   புரட்சி மின்னலாய் ஆயிரமாயிரம் குட்டித் தலைவர்கள் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள் .புற்றீசல்கள்போல்!!

  பிரிவினை எனும் ஷிரிக் அவிழ்க்க முடியாத முடிச்சாகி விட்டது .பெரும் பிரச்சனையாகி விட்டது .முஸ்லிம்களை முடக்கியும் விட்டது .

  ஒற்றுமையாய் ஒருடலாய் ஒரே சுவராய் கீறிலில்லா ரசம் போகாத கண்ணாடியாய் வாழ வேண்டிய முஸ்லிம்கள் இன்று வகை தொகையின்றி பிரிந்து கிடக்கின்றார்கள் .

அதே முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கருத்து முரண்பட்டு மோதிக் கொண்டபோது , அந்தலுசியா எனும் ஸ்பெயினிலிருந்து துரத்தப்பட்டார்கள் .அதுபோல இந்தியாவிலும் பிரித்தாளப்பட்டு அரசியல் அடிமைகளாக்கப் படுகிறார்கள் .

பிரிந்து கிடப்பது நரகின் விளிம்பின் மீது மனிதர்களை நிறுத்தி அழகு பார்க்கும் ஷைத்தானின் கோர விளையாட்டு .சாத்தானின் சூழ்ச்சி ! ஷிர்க் என்பதே ஏகத்துவத்தை மறுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை பங்கிட்டுக் கொள்ளும் பிரிவினை !

  அருளுக்கொரு கடவுள் , அன்புக்கொரு கடவுள் , அறிவுக்கொன்று , அழிவுக்கொன்று , எனக்கு உனக்கு என எண்ணிலடங்கா கடவுள்களை உருவாக்கும் தனித்தனி கடவுள்களின் பிரிவுதான் ஷிர்க் .பிரிவு என்பதே ஷிரிக்கின் அடையாளம் .

  தீனை நிலைநாட்டுகள் ! அதில் பிரிந்து விடாதீர்கள் !   அல்குர்ஆன் (42:13)

ஷைத்தானின் சூழ்ச்சியால் பிரிந்து கிடந்த மனித குலத்தை மீண்டும் ஒரே குலமாய் உருவாக்க அனுப்பபட்டவர்கள் தான் நபிமார்கள் .அதில் இறுதியானவரே முஹம்மது (ஸல்) 

   நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பிரித்து விடாதீர்கள் .சேர்ந்து வாழுங்கள் .பிறர் பற்றி நல்லெண்ணம் கொள்ளுங்கள் .

ஒருவர் மற்றொருவரின் கழுத்தை அறுக்கும் காஃபிராகி விடாதீர்கள் .பிரிந்து நிற்பவர்கள் , தனித்தனி அடையாளங்களோடு தனித்து நிற்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் .

 நாம் பிரிந்து விட வேண்டாம் .
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றுவோம் .இழந்த இஸ்லாத்தின் தலைமையை கிலாஃபத்தை மீட்டெடுப்போம் !


சகோ. எஸ்.எம்.புஹாரி.


No comments:

Post a Comment