Jan 27, 2016

இஸ்லாமியத் தலைமைத்துவத்திலிருந்து ஜனநாயகம் முரண்படுகிறது – பாகம் – 2

அல்லாஹ்(சுபு)வின் நேசம் மனிதன்மீது இறங்குவதுதான் ஈமான் மற்றும் இறைவனுக்கு கட்டுப்படுதல் ஆகியவற்றின் மிகஉயர்ந்த நிலையாக இருக்கிறது. இறைவன்மீது ஈமான் கொண்டு அவனுக்கு கட்டுப்படும் மக்கள் அவனுடைய நேசத்திற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்(சுபு)வின்ஹ நேசத்தை பெற்றுக்கொள்வதில் அவன் விதித்துள்ள நிபந்தனையை கடை பிடிப்பவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிக்கிறான். நபி(ஸல்) அவர்களை மட்டுமே தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் பெற்றவராகவும் ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதுதான் அல்லாஹ்(சுபு)வின் நேசத்தில் உண்மையாக இருப்தற்குரிய நிபந்தனையாக இருக்கிறது. குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றின் சட்டரீதியான விதிமுறைகளுக்கு மட்டும் கட்டுப்படுவதுதான் வாழ்வியல் பயணத்தில் பங்குகொள்வதற்கும் வாழ்வியலின் கடும்பணிகளை நிறைவேற்று வததற்கும் உரிய நிபந்தனையாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வும் அவனுடையதூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் பரிந்துரை செய்துள்ள சிந்தனையுடன் முரண்படுகின்ற சிந்தனையின் அடிப்படையில் எவரேனும் தனது வாழ்க்கை பயணத்தை அமைத்துக்கொண்டால், அல்லாஹ் (சுபு) அருளியவற்றிற்கு அந்நியமான சட்டத்தை எவரேனும் மனநிறைவுடன் பின்பற்றினால், தனது அபிப்ராயம் மற்றும் சிந்தனை அடிப்படையில் தன்னை பின்பற்றவேண்டும் என்று அழைப்புவிடுக்கும் தலைவரை எவரேனும் பின்பற்றினால், அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி செயலாற்றாத குழுவை எவரேனும் பின்பற்றினால், தலைவர் குழுக்கள் ஆட்சியாளர் ஆகியவர்களின் கூற்றுகள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் இணக்கமாக இருக்கிறதா அல்லது முரண்பாடாக இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யாமல் எவரேனும் அவற்றை பின்பற்றினால் நிச்யமாக அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கேள்விக்கணக்கிலிருந்து தப்பித்துச்செல்ல முடியாது!
 
     ஆகவே அல்லாஹ்(சுபு) அருளியவற்றிற்கு அந்நியமானவற்றின்பால் மக்களிலுள்ள தலைவர் ஒருவர் அழைக்கும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால், அல்லது முஸ்லிம்களை ஏமாற்றும் பொருட்டு குறிப்பிட்ட சட்டம் உண்மையாக இறைசட்டமாக இல்லாத நிலையில் அது அல்லாஹ்(சுபு)வின் சட்டத்திற்கு இணக்கமாக இருக்கிறது என்று கூறும் நிலையில் அதை ஒருமுஸ்லிம் பின்பற்றினால் அவர் அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் வழங்காத சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே கருதப்படுவார்கள். மறுமைநாளில் அவருடைய நிலை மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) கூறுவதை போன்று இருக்கும்,
 
إِنَّ اللَّهَ لَعَنَ الْكَافِرِينَ وَأَعَدَّ لَهُمْ سَعِيرًا خَالِدِينَ فِيهَا أَبَدًا لَا يَجِدُونَ وَلِيًّا وَلَا نَصِيرًا يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آَتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا  ‎ ‎‎‎‎‎‎  ‎
     நிச்சயமாகஅல்லாஹ்நிராகரிப்பவர்களைசபித்துகொழுந்துவிட்டெரியும்நெருப்பைஅவர்களுக்காகதயார்படுத்திவைத்திருக்கிறான். அவர்கள்என்றென்றும்அதில்தங்கிவிடுவார்கள்.
 
அவர்களுக்குபாதுகாப்புஅளிப்பவர்களையோஉதவிசெய்பவர்களையோஅவர்கள்அங்குகாணமாட்டார்கள். நரகத்தில்அவர்களுடையமுகங்கள்புரட்டிப்புரட்டுபொசுக்கப்படும்நாளில்எங்களுடையகேடே!
 
நாங்கள்அல்லாஹ்வுக்கும்அவனுடையதூதருக்கும்வழிபட்டிருக்கவேண்டாமா?! என்றுகதறுவார்கள். அன்றியும்எங்கள்இறைவனே!
  நிச்சயமாகநாங்கள்எங்கள்தலைவர்களுக்கும்எங்கள்பெரியவர்களுக்கும்வழிபட்டோம். நாங்கள்தவறானவழியில்செல்லும்படிஅவர்கள்செய்துவிட்டார்கள். எங்கள்இறைவனே!
 
நீஅவர்களுக்குஇருமடங்குவேதனையைகொடுத்துஅவர்கள்மீதுபெரும்சாபத்தைகொண்டுசபிப்பாயாக!’ என்றுகூறுவார்கள். (அல்அஹ்ஸாப் : 64 – 68)
 
உண்மையில் தனிமனிதரை அல்லது (சட்டரீதியாக அமைக்கப்படாத) குழுவை அல்லது அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டுதலிலிருந்து விலகிச்செல்லும் சட்டத்தை, இஸ்லாத்திற்கு அந்நியமான சிந்தனையை பின்பற்றி வரும் நிலையில் தாங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவனுடைய நேசத்தை பெறுவதற்கு பணியாற்றி வருவதாகவும் கருதிக்கொண்டு வழிகேடான் பயணத்தடத்தில் செல்லும் முஸ்லிம்களை பற்றிய துல்லியமானதும் உறுதியானது மான விவரிப்பாக இது இருக்கிறது. இந்த வழிகெட்ட கூட்டம் மறுமைநாளில் மிகுந்த வருத்தத் தையும் வேதனையையும் அனுபவிக்கும்! அப்போது ‘நாங்கள் எங்களிலுள்ள தலைவர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்தோம்! அவர்கள் எங்களை வழிகேட்டில் ஆழ்த்தி விட்டார்கள்!’ என்று கூறுவார்கள். தனிமனிதரை தலைவராகவும் கட்டளையிடும் அதிகாரம் உடையவராகவும் ஆக்கிக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான இரகசியம் இங்குதான் இருக்கிறது! ஏனெனில் தன்னுடைய வாழ்க்கை பாதையில் சட்டத்திற்கு புறம்பான கட்டுப்படுதல் எதுவும் தான் அறியாத வண்ணம் உட்புகுந்துவிடாத வகையிலும் ஏமாறு தலுக்கும் வழிகேட்டிற்கும் இட்டுச்செல்லாத வாழ்க்கை முறையில் இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் விஸ்வாசியான ஒருவர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதன்காரணமாகவே அல்லாஹ்(சுபு) தன்மீது நேசம் கொண்டுள்ள விஸ்வாசிகளை பாதுகாத்து வருவதோடு அவர்களுக்கு தனது மன்னிப்பையும் கிருபையையும் வழங்குகிறான்! எனவே தலைமைத்துவமும் கட்டளையிடும் அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கும் உரியது என்பதாலும் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்(சுபு)வும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களும் தீர்மானிக்கும் அடிப்படையில் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறதுஹ என்பதாலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தவிஷயத்தில் அல்லாஹ்(சுபு) விஸ்வாசிகளை நேர்வழியில் செலுத்து கிறான். எனவே அல்லாஹ்(சுபு)விற்கு மாறுசெய்வது மூலமாக மட்டுமே ஒரு மனிதருக்கு கட்டுப்படமுடியும் என்ற நிலை ஏற்படும் பட்சத்தில் அந்த மனிதரை நேசிப்பதற்கோ அல்லது அவருக்கு கட்டுப்படுவதற்கோ அனுமதியில்லை.ஹ கட்டுப்படுதலை அவசியமாக்கும் நேசம் என்பது அல்லாஹ்(சுபு)விற்கு மட்டுமே உரியதாகும். கீழ்ப்படியும் குறிப்பிட்ட செயல் தொடர்பான இறைசட்டத்தை அறிந்திராத நிலையில் அந்த செயலில் ஒருவருக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு அனுமதியில்லை. இஸ்லாத்தில் தலைமைத்துவம் என்பது சட்டரீதியான செயலை நிறைவேற்றுதலில் மற்றவரை வழிநடத்தும் வகையில் மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது; எனவே தலைவர் அல்லது அமீர் ஆகியவர்கள் வாழ்வியலில் மேற்கொள்ளும் கடும்பணி என்பது இஸ்லாமிய சட்டங்கள் அங்கீகாரம் செய்துள்ள நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு முஸ்லிம்களின் ஆற்றல்களை ஒருங்கிணைப்பதாக இருக்கிறது. தலைமைத்துவம் மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவற்றில் மிகஉயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுள்ள ஆட்சியாளர் அல்லாஹ்(சுபு)வின் கட்டுப்படுதலில் சமுதாயத்தின் பயணத்தடத்தை பாதுகாப்பதற்கும் அது தொடர்பான நிர்வாக மேலாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பு வகிப்பவர் என்ற முறையில் அவருடைய தலைமைத்துவம் என்பது அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை பின்பற்றி ஒழுகும் உம்மாவின் பாதையை மேற்பார்வையிட்டு சீர்படுத்துவதற்குரிய அதிகாரமாக மட்டுமே வரையறை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களிலுள்ள தனிமனிதர் எவரும் நரகத்தின் பாதையில் நடந்து சென்றுவிடாத வண்ணம் உம்மாவை வழிநடத்தும் பொறுப்பு ஆட்சியாளரை சார்ந்த இன்றியமையாத பணியாக இருக்கிறது!
 
     அல்லாஹ்(சுபு) அருளியவற்றுக்கு அந்நியமான சட்டங்களை கொண்டு மக்களை வழி நடத்தும் ஒருவரை பற்றி எளிமையாக கூறவேண்டுமானால் அவர் நரக நெருப்புக்கு உரியவரான நயவஞசகர் ஆவார், ஏனெனில் மக்களை வழிநடத்துவதில் இஸ்லாத்தின் விதிமுறைகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் உரிமையையும் ‎அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குரிய உரிமையையும் சட்டத்திற்கு புறம்பாக அவர் அபகரித்துக்கொண்டார். தாங்கள் பின்பற்றும் தலைவரின் நயவஞ்சக தன்மையில் ஏமாந்துபோய் அவரை பின்பற்றிய மக்களும் நரக நெருப்பில் இருப்பார்கள் ஏனெனில் அல்லாஹ்(சுபு)விற்கும் அவனுடைய சட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு எதிராக அவர்கள் கலகம் செய்கிறார்கள். மறுமை நாளில் இந்த இருசாராரும் ஒருவரையொருவர் சபித்துக்கொள்வார்கள்; ஒருவருக்கு எதிராக மற்றொருவர் வெளிப்படையாக பகைமை கொள்வார்கள்; ஒவ்வொரு சாராரும் மற்றவருக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்துவார்கள்; ஒவ்வொருவரும் மற்றவரின் நிராகரிப்பிற்கு பொறுப்பேற்க மறுப்பார்கள்! குற்றவாளிகள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சாபம் இடுவார்கள்; ஒருவர் மற்றவரின் குற்றங்களை பகிரங்கப்படுத்துவார்; மகத்துவமிக்க அல்லாஹ்(சுபு) சங்கைமிக்க குர்ஆனில் தனது வார்த்தை மூலமாக இந்த காட்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறான்.
 
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآَنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْدَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَنْ نَكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ  
 
நிச்சயமாகநாங்கள்இந்தகுர்ஆன்மீதும்இதற்குமுன்னுள்ளவேதங்கள்மீதும்நம்பிக்கைகொள்ளமாட்டோம்என்றுஇந்தநிராகரிப்பவர்கள்கூறுகின்றனர்.ஆகவேஇந்தஅக்கிரமக்காரர்கள்தங்கள்இறைவன்முன்புநிறுத்தப்படும்போதுஅவர்களில்சிலர்சிலர்மீதுகுற்றம்சுமத்துவதைநீர்காண்பீர்!அவர்களில்பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘நீங்கள்இல்லாவிடில்நிச்சயமாகநாங்கள்ஈமான்கொண்டிருப்போம்’என்றுகூறுவார்கள்!கர்வம்கொண்டவர்கள்பலவீனமானவர்களைநோக்கி‘உங்களிடம்நேரானவழிவந்தபின்னர்(அதைவிட்டும்)நாங்களாஉங்களைதடுத்துக்கொணடோம்?அவ்வாறு)இல்லை!
 
நீங்கள்தான்குற்றவாளிகள்’என்றுகூறுவார்கள்.பலவீனமானவர்கள்கர்வம்கொண்டவர்களைநோக்கி‘அவ்வாறுஇல்லை!நாங்கள்அல்லாஹ்வைநிராகரிக்குமாறும்அவனுக்குஇணைவைக்குமாறும்நீங்கள்ஏவவில்லையா?இரவுபகலாகசூழ்ச்சிசெய்யவில்லையா?’என்றுகூறுவார்கள்.ஆகவேஇவர்கள்அனைவரும்வேதனையைகாணும்சமயத்தில்தங்கள்துக்கத்தைமறைத்துக்கொள்வார்கள்.எனினும்நிராகரித்தவர்களின்கழுத்தில்நாம்விலங்கிடுவோம்,இவர்கள்செய்துகொண்டிருந்தவற்றிற்குரியகூலியைதவிர்த்துவேறெதுவும்கொடுக்கப்படுவார்களா?!
(ஸபா : 31 – 33)
      மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மறுமைநாளின் நிகழ்வை தெளிவாக எடுத்துக்காட்டும் அதேவேளையில் மரணத்திற்கு முன்னர் மக்களின் வாழ்வில் இடம்பெற்றுள்ள நான்கு எதார்த்த உண்மைகளை குறிப்பிடுகின்றன.
தலைவர்கள் மற்றும் உயர்ந்த அந்தஸ்த்து கொண்ட பெரியவர்கள் ஆகியவர்களிடம் அவர்களை பின்பற்றிய மக்கள் கூறும் வார்த்தைகள் : “நீங்கள் இல்லாவிடில் நாங்கள் ஈமான் கொண்டிருப்போம்” தனது குற்றத்திற்காக அல்லது தனக்கு ஏற்பட்ட தோல்விக்காக மற்றவரை குறைகூறுதல் என்பது பெரும்பான்மையான மனிதர்களின் இயல்பாக இருக்கிறது; இத்தகைய அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம்; ஒருவரிடம் உள்ள குறிப்பிட்ட குறை பற்றி அவரிடம் சுட்டிக்காட்டும்போது அவர் அந்த குற்றச்சாட்டை மற்றவர் மீது திருப்பி விடுவார். ஆனால் உண்மையில் குற்றச்சாட்டை கூறுவதும் அதை மறுப்பதும் விவகாரத்தின் உண்மைநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுவதில்லை, ஏனெனில் குற்றச்சாட்டை கூறுவதால் மட்டும் அதை நிரூபித்துவிட முடியாது, மாறாக அதை நிரூபனம் செய்யும் சட்ட ரீதியான ஆதாரத்தை அளிக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் பலவீனமானவர்கள், தலைவர்களை பின்பற்றும் நபர்கள், கர்வம் கொண்டவர்கள் ஆகியவர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரம் அவர்களுடைய வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்பான எதார்த்த நிலையிலிருந்து கொண்டுவரப்படுமே தவிர அந்த எதார்த்த நிலையைவிட்டு அவர்கள் நீங்கிய பின்னருள்ள நிலையின் அடிப்படையில் கொண்டுவரப்படாது. நமது தலைவர்களும் நமக்கு கட்டளையிடுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளவர்களும் நம்மை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நம் அனைவருடைய வாழ்வின் உண்மை நிலையாக இருக்கிறது, அவர்கள் நம்மை தவறான பாதையில் வழிநடத்துவதோடு அல்லாஹ்(சுபு)வுக்கு முழுமையாக மாறுசெய்யும் வழியிலேயே செலுத்திவருகிறார்கள், வாழ்வியல் விஷயங்களை தீர்மானிப்பதிலும் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் நோக்கங்களை நிர்ணயம் செய்வதிலும் முழுமையான நிராகரிப்பை கொண்டுள்ள வாழ்க்கையில்தான் நாம் வாழ்ந்துவருகிறோம்!
     எனினும் ‘நீங்கள் இல்லாவிடில்’ என்ற சொற்றொடர் குர்ஆன் வசனத்தில் இடம் பெற்றுள்ளது, வாழ்வியலில் தலைவர்கள், பெரியவர்கள் போன்றவர்களை பின்பற்றியவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் அவர்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக இருந்தது என்பதும் செயல்பாடுகள் தொடர்பான அல்லாஹ்(சுபு)வின் சட்டங்களை அறிந்துகொள்வதில் அவர்கள் அலட்சியம் காட்டவில்லை என்பதும்தான் இதற்கு அர்த்மாகும்!ஹ அல்லாஹ்(சுபு) அவர்களை படைத்துள்ள நோக்கத்தை பற்றி அறியாமல் இருந்ததற்கும் அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக தலைவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்ததற்கும் அவர்கள் வாழ்ந்துவந்த சூழல்தான் காரணம் என்றும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் கர்வம் கொண்ட தலைவர்கள் இருந்தது வந்த காரணத்தினால்தான் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பின்பற்றியவர்கள் தாங்கள் பின்பற்றிய தலைவர்கள் மீது குற்றத்தை சுமத்திவிட்டு தாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை மறைத்துவிடுகிறார்கள். இக்கூற்று அவர்களுடைய நிராகரிப்பையும் அவர்கள் நரகத்தின் வேதனைக்கு தகுதியானவர்கள் என்பதையும் அவர்கள் நிராகரிப்பில் வாழ்ந்து வந்ததை மறுக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அல்லாஹ்(சுபு)வின் ஹகேள்வி கணக்கிற்கு உட்படும் அந்த மகத்தான நாள் என்பது உண்மையில் பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக்கொள்ளும் நாளாகவே இருக்கிறது! மனிதன் தனது வாழ் நாளில் இடம்பெற்றிருந்த உண்மையையோ அவன் மேற்கொண்ட செயலையோ அவன் கூறிய வார்த்தையோ ஒருபோதும் மறுக்கமுடியாது! இதன்காரணமாகவே ‘நாங்கள் ஈமான் கெண்டிருப் போம்’ என்று பலவீனமானவர்கள் கூறுவார்கள். பலவீனமானவர்கள் அவர்களுடைய வாழ் நாட்களில் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்பதும், அவர்கள் ஈமான் கொண்டுள்ள விஸ்வாசியாக இல்லை என்றநிலையில் அவர்கள் நிராகரிப்பை கொண்டுள்ள நிராகரிப்பாளராக இருந்தார்கள் என்பதும்தான் இதற்கு அர்த்தமாகும். அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்ப்படியாத மனிதர் களை பொருத்தவரை அவர்கள் நிராகரிப்பாளர்களாக இல்லை, மாறாக கீழ்ப்படியாத காரணத் தால் ஒருமுறையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளோ தண்டனைக்கு உட்படும் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள், எனவே அவர்கள் நிராகரிப்பிற்குரிய தண்டனையை அடைய மாட்டார்கள். அல்லாஹ்(சுபு)வுக்கு அந்நியமானவர்களை பின்பற்றவதிலும் அவர்களுக்கு கட்டுப் படுவதிலும் தங்கள் வாழ்நாட்களை கழித்தார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
     எனினும் நிராகரிப்பாளர்களாக இருந்தவர்கள் தங்களுடைய நிராகரிப்புக்கு காரணமாக மற்றவர்களை காட்டுவதற்கு முனைகிறார்கள் என்றபோதும் அது உண்மையில்லை என்பதால் அவர்கள் என்றென்றும் நரகத்தில் இருப்பார்கள், நரகத்தில் அவர்கள் தலைகள் வெப்பத்தில் உருகிவிடும்! ஆரம்பமும் முடிவும் இல்லாத நரகத்தில் நிராகரிப்பவர்கள் இழிவில் வீழ்ந்து கிடப்பார்கள்! எனினும் பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘நீங்கள் இல்லா விடில் நாங்கள் ஈமான் கெண்டிருப்போம்’ என்று கூறும் வார்த்தையில் உண்மையில்லை! பூமியில் தலைவர்களாகவும் பெரியவர்களாகவும் உயர்ந்தநிலையில் வாழ்ந்தவர்கள் தங்களை பின் பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வுக்கு மாறுசெய்யும் தீயவழியில் செலுத்தினார்கள் என்றபோதும், தலைவர்கள் தங்களை பின்பற்றியவர்களை அல்லாஹ்(சுபு)வின் ஈமானிலும் அவனுக்கு கீழ்ப் படிவதிலும் வழிநடத்தியிருக்க முடியும் என்றபோதும், உண்மைநிலையின் அடிப்படையில் மக்களின் நிராகரிப்பிற்கு அல்லது ஈமானிற்கு தலைவர்கள் காரணமாக இருப்பதில்லை, ஏனெனில் தலைவரின் கட்டளை அடிப்படையில் ஒருவர் நிராகரிப்பையோ அல்லது ஈமானையோ தேர்வுசெய்து கொள்ளுதல் என்பது தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாக இருக்காது மாறாக எஜமானரின் கட்டளைக்கு அடிமை கட்டுப்படுதல் என்ற விவகாரத்தை சார்ந்ததாகவே இருக்கும்! எனவே தலைவரை பின்பற்றுதல் என்ற விவகாரத்தில் மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இதன்காரணமாகவே நிராகரிப்பவர்கள் மறுமைநாளில் இருக்கும்நிலை மற்றும் அவர்கள் கூறும் வார்த்தைகள் ஆகியவை பற்றி  எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) கூறுகின்ற விவரிப்பு என்பது அவனுடைய(சுபு) அற்பதமாகவும் அவனுக்கு(சுபு) மட்டுமே உரித்தான தெய்வீக தன்மையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது என்பதை நாம் காண்கிறோம், மகத்துவமும் உயர்வும் அவனுக்கே உரியது! இது நமக்கும் ஓர் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது, எனவே நாம் அல்லாஹ்(சுபு) வுக்கு மாறுசெய்யும் வகையில் கீழ்ப்படியாத வாழ்க்கையை தேர்வுசெய்து கொள்வதற்கு எத்தகைய காரணங்களையும் கற்பிக்க முடியாது! இத்தகைய நிலையை தேர்வுசெய்து கொள்ளும் ஒருவர் தான் குற்றமற்றவர் என்று எத்தகைய சாக்குப்போக்குகளை கூறியபோதும் தனது செயல்பாடுகளை இரகசியமாக மறைத்துக் கொண்டபோதும் தனக்குத்தானே பொய்யுரைத்து கொண்டபோதும் அல்லது தன்னுடைய தீனின் விதிமுறைகளை அலட்சியப்படுத்திய போதும் அவர் குற்றமற்றவர் என்ற மறுப்புரைக்கு உரிய ஆதாரத்தை நிரூபனம் செய்யாதவரையில் அவருடைய தற்போதைய நிலையை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்(சுபு) அவரிடமிருந்து எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்! ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் உடலிலுள்ள உறுப்புகளும் மறுமைநாளில் அவருடைய கீழ்ப்படியாமை குறித்து அவருக்கு எதிராக சாட்சியம் அளிக்கும்! எந்த அளவுக்கு அவர் கீழ்ப்படியாமையில் வாழ்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு எதிராக அவருடைய உடலுறுப்புகள் சாட்சியம் அளிக்கும்! நமக்கு எதிராக மலக்குகள் சாட்சியம் அளிப்பார்கள்! உண்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தூதர் முஹஹஹம்மது(ஸல்) அவர்களும் சாட்சியம் அளிப்பார்கள்! மறுமைநாளில் நாம் எவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோமோ அந்த தலைவர்களின் நாவுகளின் சாட்சியத்தை கொண்டு உலக வாழ்க்கையில் எவ்வாறு இருந்தோம் என்பது பற்றிய உண்மைகளை எல்லாம்வல்ல அல்லாஹ்(சுபு) நமக்கு அறிவித்து காட்டுவான்!
* இன்றைய நாட்கள் பூமியில் இஸ்லாமிய அரசு இல்லாத காலகட்டமாகவும், இஸ்லாமிய விதிமுறைகள் அடிப்படையில் மக்கள் மத்தியில் இருக்கும் உறவுகளை ஒழுங்குபடுத்துவதும் அந்த உறவுகளின் விளைவாக சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியதுமான  அல்லாஹ்(சுபு)வின் ஆட்சியை ஹமக்கள் மத்தியில் நிறுவதை தடுக்கக்கூடிய காலகட்டமாகவும் இருந்துவருகிறது! இஸ்லாமிய சமூகத்திலுள்ள முஸ்லிம்களின் உறவுகளை முஸ்லிம் அல்லாத சமூகங்களுடன் அல்லாஹ்(சுபு)வின் சட்டங்கள் அடிப்படையில் நிறுநிறுத்துவதை தடுக்கக்கூடிய காலட்டமாகவும் இன்றை காலகட்டம் விளங்குகிறது. இந்த குறுகிய வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில் அதனுடன் தொடர்புள்ள இஸ்லாமிய நோக்கத்தை நிறைவுசெய்துகொள்ளும் வகையில் ஒருமுஸ்லிம் இஸ்லாமிய விதிமுறைகளின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வழிநடத்தி செல்வதையும், முஸ்லிம்கள் தங்களுடைய மரணத்திற்கு முன்பாக இஸ்லாமிய சட்டங்களை பொருத்த நோக்கங்களை நிறைவுசெய்து கொள்வதை தடைசெய்யக்கூடியதாகவும் இன்றைய காலகட்டம் இருந்துவருகிறது! இது மக்கள் மத்தியில் குர்ஆனின் சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கட்டுப்படுவதை தடுக்கும் வகையில் தலைவர்களும் புகழ்பெற்ற மனிதர்களும் இறை மார்க்கத்திற்கு எதிராக போரிடும் காலகட்டமாகும்! எல்லாம்வல்ல இறைவன் கட்டளையிட்டுள்ள அடிப்படையில் மக்கள் மத்தியில் ஷரீஆவை நிலைநிறுத்தும் அதிகார அமைப்பை நிறுவுவதற்கு உகந்த காலகட்டம் இதுதான்! அதை அல்லாஹ்(சுபு)வின் கட்டளை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமே ஒழிய ஹஇஸ்லாமிய சிந்தனைகளை சிதைப்பதின் மூலமும் அதன் கோட்பாடுகளை அழிப்பதன் மூலமும் இஸ்லாத்தை அழிப்பதற்கு வழிவகைகளை தேடுபவர்களின் விருப்பங்களின் அடிப்படையில் அல்ல!

No comments:

Post a Comment