Jan 27, 2016

அக்ஸாவும் அய்யூபியும்


கற்களுக்கும் குண்டுகளுக்கும்
இடையே பாலஸ்தீனத்தில்
ஒரு போட்டி!

யுத்தம் முந்தியது
மனித ரத்தம் சிந்தியது !

சஹீதுகள் வீட்டில் ஓலம் இருந்தாலும்
வெற்றியின் சந்தோசம் இருக்கின்றது ! .

மகளை பிரிந்தாலும் மகனை பிரிந்தாலும்
பிரியாமால் தொடர்கின்றது போராட்டம்!
சொல்லாமல் போனாலும்
போராடும் தொடர் குணமே
வாரிசுகளின் நாட்டம் !

அக்ஸாவை பார்க்கும் பொழுதெல்லாம்
வெட்கப்படுகின்றேன் ?

சலாஹுதீன் அய்யுபிக்கு இருந்த தைரியம்
எங்களுக்கு இல்லையே !

சலாஹுதீன் வெற்றிக்கு காரணம்
படை பலமா ? ஈமானிய உயர் பலமா ?

ஈமானிய உயர் பலம்! உறுதி பலம் !

முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன்
குதிரைகளின் சேனைகளை கட்டுகிறேன்
வாள்களின் உலோகத்தை கூராக்குகிறேன்
இறைவன் கடைமைகளை சீராக்குகிறேன்
குர் ஆன் வேதத்தை இதோ வாசிக்கிறேன்
சலாஹுதீன் அய்யுபியை நோக்கி
புன்னகை சிதற விட்டு புறப்படுகிறேன்
பிரார்த்தனை செய்கிறேன்இப்போது!

இறைவா
அக்ஸாவை மீட்க உதவி செய் !

– அபூஷேக் முஹம்மத்

SOURCES FROM IQRAH.NET

No comments:

Post a Comment