Jun 18, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-04

யூதர்களின் திட்டங்கள் - இஸ்ரேல்_உருவாகிய_வரலாறு - தொடர்: 04

எப்படிப்பட்ட திட்டங்களை தீட்டி யூதர்கள் பலஸ்தீன் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என இனி பார்க்கலாம்.

முதலில் அவர்கள் ஓர் இயக்கத்தை தொடங்கினார்கள். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் பலஸ்தீனை நோக்கி இடம்பெயர வேண்டும் அங்கு சொத்துக்களை வாங்க வேண்டும் என்பது தான் அவ்வியக்கத்தின் குறிக்கோள் பிரச்சாரமாக இருந்தது.

இதன்படி 1880ம் ஆண்டு முதல் புலம்பெயர்வு தொடங்கியது. ஐரோப்பாவில் வசித்துவந்த யூதர்கள் ஒருவர் பின் ஒருவராக பலஸ்தீனில் குடியேறினார்கள்.

அதன் பின் புகழ்பெற்ற யூத தலைவனான #தியோடர்_ஹெர்சல் 1897ம்ஆண்டு #ஜியோனிஸ்ட்_மூவ்மென்ட் எனப்படும் யூத இயக்கத்தை துவங்கினான். (Zionist organization -ZO) பலஸ்தீனை கைப்பற்றுவது மற்றும் ஹைஹலுஸ் ஸுலைமானியை மீண்டும் கட்டுவது என்பனவற்றையே அவ்வியக்க குறிக்கோளாக அறிவித்தான். இதற்காக யூதர்கள் கோடிக்கணக்கில் செல்வங்களை வழங்கினர்.

Zionist movement இன் முதல் மாநாடு வட சுவிஸ்லாந்தின் பெஸ்லே நகரில் நடைபெற்றது. அப்போது தியோடர் தன்னுடைய டயரியில் பின்வருமாரு எழுதினான். " பெஸ்லேயில் யூத தேசத்தை நான் கண்டுகொண்டேன் என்பதை நான் அறிவித்தால் உலகமே என்னை பைத்தியக்காரன் என்று சொல்லும். ஐந்து அல்லது ஐம்பது அண்டுகளில் இந்த பேருண்மையை உலகம் உணர்ந்து கொள்ளும். "

1901ம் ஆண்டு தியோடர் இஸ்லாமிய கலீபாவான #சுல்தான்_அப்துல்_ஹமீது_கான் இடம் தன்னுடைய தூதரை அனுப்பி வைத்தான்.
"பலஸ்தீன் பகுதியை யூத தேசமாக அறிவித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துருக்கிய அரசின் கடன்களை நாங்கள் கொடுத்துவிடுகிறோம்".
இதுதான் அவன் கொடுத்தனுப்பிய செய்தி

இதை கலீபா ஏற்றுக்கொள்ளவில்லை. காரித்துப்பி நிராகரித்துவிட்டார். " நான் உயிரோடு இருக்கும் வரை துருக்கி கிலாபத் நிலைத்திருக்கும் வரை பலஸ்தீனை யூதர்களிடம் ஒப்படைப்பது நடைபெறாது.உங்களது அனைத்து செல்வங்களின் மீதும் காரி உமிழ்கிறேன்" என கூறிவிட்டார்.

தியோடர் கலீபாவிடம் பேசுவதற்காக அனுப்பிய யூத தூதுவனின் பெயர் #கர்ரா_ஸவ்_ஆவ்பந்தி ஆகும்.

அதாவது இஸ்லாமிய கலீபாவிடம் நேருக்கு நேர் பலஸ்தீன் மண்ணுக்கு விலை பேரம்பேசும் அளவுக்கு யூதர்களின் பலம் கூடியிருந்தது.

பேரத்தை மறுத்த கலீபாவை நோக்கி யூத தூதுவன் "நாங்கள் சொல்வதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்கவேண்டி வரும்" என எச்சரிக்கை செய்யும் அளவு அவன் துணிச்சல் பெற்றிருந்தான்.

கிலாபத் இருக்கும் வரை பலஸ்தீன் பற்றிய தங்கள் கனவு பலிக்காது என தெரிந்த யூதர்கள் கிலாபத்தை உடைக்கும் பணிகளில் இறங்கினார்கள்.

பிரீமேசன்,தோனாமா,மற்றும் மேற்கத்தைய கல்வியை கற்று துருக்கிய தேசியவாதத்துக்கு பலியான இளைஞர்களும் யூதர்களின் சதியில் பங்குபற்றினர்.

(இங்கு தோனாமா எனப்படுவோர் முஸ்லிம்களாக வெளியில் நடித்த யூதப்பற்றாளர்கள்)

இவர்கள் யூத இராணுவத்தின் உதவியையும் பெற்றார்கள்.

கடைசியாக இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டது. சுல்தான் அப்துல் ஹமீது கான் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். இதன்போது வரலாற்றிலே_மிக_மிக_கேவலமான_சம்பவம் முஸ்லிம் உம்மத்தால் நிகழ்த்தப்பட்டது. இதை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

அதாவது

1908ம் ஆண்டு கலீபா அப்துல் ஹமீதிடம் "நீங்கள் பதவியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்" எனும் செய்தியை சுமந்தவாரு மூன்று நபர்கள் சென்றார்கள். அதில் இருவர் துருக்கியர். மூன்றாம் நபர் யார் தெரியுமா???

நாம் ஏற்கனவே பார்த்த #ஹர்ரா_ஸவ்_ஆவ்பந்தி அவனே தான். பலஸ்தீனை பேரம்பேச சென்று கலீபா காரி உமிழ்ந்து அனுப்பினாரே அவனேதான்.

முஸ்லிம்கள் செய்த ரோஷம்கெட்ட கேவலமான பணி இது. கலீபாவை நீக்கியும் விட்டு அந்த செய்தியை யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள் என்று பார்த்தீர்களா???

எந்த யூதனை காரி உமிழ்ந்து கலீபா விரட்டினாரோ அவனிடம் "நீ வெளியே போகலாம்" என்ற செய்தியை கொடுத்தனுப்பினார்கள் இந்த மானம்கெட்ட உம்மத்.

நான் காரித்துப்பியவனே என்னை வெளியே போ என்று சொல்லும் போது கலீபாவின் மனம் எப்பாடுபட்டிருக்கும் என கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

இன்சா அல்லாஹ்...
தொடரும் ....


சிந்தனை கலஞ்சியம்


 #புகைப்படம்:- கலீபா கிலாபத்தை விட்டு வெளியேறும் காட்சி



 

No comments:

Post a Comment