Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-03

யூதர்களின் நன்றி கெட்டத்தனம்
ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அதாவது கி.பி.70ம் ஆண்டிலேயே ஹைஹலுஸ் ஸுலைமானி உருத்தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டது. இதை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம்.
ஆனால் இஸ்லாத்தின் மீள்வருகைக்கு பின் உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலே பைத்துல் முகத்திஸ் வெற்றிகொள்ளப்படுகிறது. அப்போது அங்கே யூதர்களின் எந்தொரு வழிபாட்டுத்தலமும் இல்லை. மாறாக ஒருசில கட்டிட சிதலங்களே அங்காங்கு காணப்பட்டன.
எனவே மஸ்ஜிதுல் அக்ஸாவையும் பொன்னிற கூரை கொண்ட கூவ்வதுஸ் ஸக்ராவையும் எங்கள் வழிபாட்டுத்தலங்களை அழித்துவிட்டே முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள் என யூதர்கள் போலிக்குற்றச்சாட்டு சுமத்த முடியாது.
இவை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளும் உண்மைகளாகும்.
இனி ஐரோப்பாவில் யூதர்கள் எப்படி நடாத்தப்பட்டார்கள் என பார்ப்போம்
 
ஐரோப்பியர்களுக்கு யூதர்கள் சபிக்கப்பட்ட ஓர் இனமாகவே கருதப்பட்டார்கள்.
இங்கிலாந்து மன்னர் ‪#‎முதலாம்_எட்வர்ட்‬ 1290ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில் யூதர்கள் அனைவரும் இங்கிலாந்தின் எல்லையை விட்டே வெளியேறிவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கிறித்தவ பாதிரிகளும் நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து யூதர்களுக்கு எதிராக மக்களை திரட்டும் பணியை செவ்வனே செய்தார்கள்.
பிரான்ஸ்ஸில் ‪#‎மன்னர்_பிலிப்ஸ்‬ 1302ல் யூதர்கள் அனைவரும் பிரான்ஸை விட்டே போய்விடவேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
அதேபோன்று
1498ம் ஆண்டு ‪#‎12ம்லூயிஸ்_மன்னர்‬ யூதர்கள் ஒன்று நாடுதுறக்க வேண்டும் அல்லது கிறித்தவத்துக்கு மாற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
ஜேர்மனிலும் ரஸ்யாவிலும் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலும் யூதர்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது சமூக பொருளாதார அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
ஒரு சில நாடுகள் யூதர்கள் எவரையும் விட்டுவைக்காது நாட்டைவிட்டே வெளியேற்றும் பணியை செய்தன. இன்னும் சில நாடுகளோ குறிப்பிட்ட சில நிலப்பரப்பை ஒதுக்கி அவ்விடங்களில் மட்டுமே யூதர்கள் வாழ வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு செல்லலாகாது என்றும் தடை விதித்தன. அப்பகுதிகளை சுற்றியும் பெரும் அரண்களை போன்று சுவர்கள் எழுப்பப்பட்டன. இப்பகுதிகள் "‪#‎ஹெட்டோ‬" என அழைக்கப்படுகின்றன.
இனி யூதர்கள் தொடர்பாக முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பார்க்கலாம்
 
உஸ்மானிய கிலாபத்தின் கலீபாவான ‪#‎2ம்_பயாஸீத்‬ 1493ல் ஒரு அரசாணையை வெளியிட்டார். அதாவது தன்னுடைய ஆட்சி எல்லைக்குள் வசிக்கின்ற யூதர்களோடு மக்கள் நன்முறையில் நடந்துகொள்ளவேண்டும் என்பதே அந்த அரசாணை.
இவ்வாறு யூதர்கள் கடந்த 13நூற்றாண்டுகளாக (அதாவது 1924 கிலாபத் வீழ்ச்சியடையும் வரை )யூதர்கள் ஓர் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றால் அது முஸ்லிம்களின் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் கீழ் தான் என்பது யூதர்களும் மறுக்க இயலாத உண்மையாகும்.
ஸ்பெயின்(உந்துலிஸ்) நாட்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த காலம் தான் எங்களுடைய வரலாற்றில் பொற்காலம் என யூத வரலாற்று ஆசிரியர்களே கூறியுள்ளார்கள்.
அழுகைக்கதவு என்ற ஒன்றை யூதர்கள் தம்முடைய மதத்தின் புனித பொருளாக கருதிவருகின்றார்கள். இந்த கதவு கூட முஸ்லிம்களின் கருணையால் தான் யூதர்களுக்கு கிடைத்தது. அதாவது இக்கதவு மண்ணுள் புதையுண்டு அடையாளம் தெரியாத அளவுக்கு காணாது போயிருந்தது. முற்புதர்களும் குப்பைகூளங்களும் அதை மூடிவிட்டிருந்தன. கி.பி. 16ம் நூற்றாண்டில் சுல்தான் சலீம் உஸ்மானி ஆட்சிக்காலத்தில் அக்கதவு கண்டுபிடிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு யூதர்கள் அதை தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. (ஆதாரம்:- News from Israel bulletine july1987, the government of isrel Bombay)
ஆனால் இந்த நன்றிகெட்ட இனம் இன்று என்ன செய்கிறது???
இன்சா அல்லாஹ்....
தொடரும்.....

No comments:

Post a Comment