Jun 20, 2016

கடந்தகால மற்றும் நிகழ்கால இறையில்லங்களின் நிலைமைகள்:

நமது காலங்களில் உள்ள இறையில்லங்களையும், நமது கடந்தகால நேர்வழி பெற்ற முன்னோர்கள் காலத்து இறையில்லங்களையும் நாம் ஒப்பு நோக்குவோமானால் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. நமது முன்னோர்கள் சத்தியத்தை (ஹக்) கவனமாக எடுத்துக் கொண்டார்கள். வெளித்தோற்றத்தையல்ல. ஆனால் நாம் வெளித்தோற்றத்தை எடுத்துக் கொண்டு சத்தியத்தை விட்டு விட்டோம். எல்லாமே தலைகீழாக ஆகிவிட்டது. இறையில்லங்கள் ஜங்கால தொழுகை நிறைவேற்றிப்பட மட்டும், பயன்படுத்தப்பட்டு பிறகு முடப்பட்டுவிடுகின்றன. இதன் முடிவு இறையில்லங்கள் முஸ்லிம்கள் வாழ்வியல் விவகரங்களிருந்து முற்றிலும் புறக்கணிக்கபட்டுவிட்டது. மார்க்கத்திலிருந்து நடைமுறை வாழ்கையை பிரிக்கும் நோக்கத்தோடு அரசியல் பேச்சாளர்களும் ஆலோசனை கர்த்தாக்களும் மதத்தை அரசியலுடன் கலக்கக்கூடாது என்ற ஆட்சியாளர்களின் கருத்தை ஓங்கி ஒழிப்பதற்காக தங்கள் கோஷங்களை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மத புரோகிதர்களுக்கு அரசியலில் எந்த வேலையுமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் முடியாது இஸ்லாம் என்பது அரசியல் , பொருளாதாரம், சமூகம், நீதி நிர்வாகம்  ஆகிய அனைத்து
துறைகளையும் உள் அடக்கிய ஒரு முழுமையான மார்க்கம். இதில் எந்த ஒன்றையும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்தால் முழுமையான இஸ்லாமாக இருக்காது.

 இறுதியாக இறையில்லம் என்பது இஸ்லாம் என்ற மார்கத்தின் செய்திகள் உருவாக்கப்பட்ட இடம். இந்த இடத்திலிருந்துதான் இஸ்லாமிய மாபெரும் தலைவர்கள் தங்களது ஒளிமயமான பயணித்தை ஆரம்பித்தார்கள். உலகம் எங்கிலும் இஸ்லாத்தின் சங்க நாதத்தை அவர்கள் எடுத்துச் சென்றார்கள். ஆம் அந்த மதினாவின் இறையில்லம் மிகமிக எளிமையானதாகும். அதன் தரை பாகம் கூலன்ங்கற்களை கொண்டு பரப்பப்பட்டது. அதன் விளக்குகள் இரவில் மட்டும் ஏற்றப்பட்டது. அதன் கூரைகள் ஈத்த மர ஓலை கொண்டு வேயப்பட்டது.

முஸ்லிம்களே! அறிந்துகொள்ளுங்கள்.நாம் சத்தியத்தை விட்டுவிட்டு வெளிதொற்றதை மட்டும் தக்கவைத்து கொண்டு துர்பாக்கியசாலிகளாக இருக்கிறோம்.உயர்ந்து நிற்கும் மினாரக்களையும்,எழில் கொஞ்சம் இறை இல்லங்களையும் அமைத்து பெருமை பாராட்டி கொள்ளும் நாம் இஸ்லாத்தின் உயிர துடிப்பான செயல்களை செய்வதுமில்லை நினைத்து பார்ப்பதும் இல்லை ஆகவே இறை இல்லங்களை அலங்கரிக்கும் செயல்களில் நம்மை நாம் உட்படுத்தி கொண்டு இறை இல்லங்களின் தனித்தன்மையும் அதன் முக்கியத்துவத்தையும் பாழ்படுத்திவிட்டு அங்கு சச்சரவையும் இனபாகுபாடுகளையும் கொண்டுவரவேண்டாம் இப்போது நம்மிடம் பாகிஸ்தானிய பள்ளி, சிரியா பள்ளி, பாரசிக பள்ளி, குர்திஸ் பள்ளி, துருக்கி பள்ளி என்று எண்ணில் அடங்காத பிரிவு இறை இல்லங்கள் இருக்கிறது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளிகும் சொந்தமான இறை இல்லங்களும் கட்சிகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் மத்ஹபுகளுக்கு சொந்தமான இறை இல்லங்களும் இருக்கின்றன அவைகள் ஒன்றில் மற்றொரு பிரிவுகள் சொல்வதை தடுத்துக் கொள்கின்றன. இஸ்லாத்தின் செய்திகள் அவைகளுக்கு இரண்டாம் பட்சம்தான்.தலைமைதுவதிற்கும், அதிகாரத்திற்கும் பிழைத்திருக்கும் தந்திரத்திற்கும் தான் முதலிடம். இவையெல்லாம் இன்று நமது இறையில்லங்களில் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இறையில்லம் அல்லாஹ்(சுபு)விற்கு சொந்தமானது என்று இஸ்லாம் கூறியபோதும் இவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.


அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்-குர்ஆன் 72:18)


ஆகவே நாம் வலியுறுத்துவது என்னவெனில் முக்கியமாக இஸ்லாமிய குழுக்களுக்கும், கட்சிக்களுக்கும், இமாம்களுக்கும், இறையில்லங்களில் அவர்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும் அதன் கதவுகளை உண்மையான முஸ்லிம்களுக்கும் என்றும் திறந்து வைத்திருக்க வேண்டும். அறிஞர்களுக்கும் சுஜூத் செய்பவர்களுக்கும்,மார்க்கத்தை போதிப்பவர்களுக்கும்,இஸ்லாம் மார்க்கதின்ம்படி முஸ்லிம்களின் அனைத்து  வாழ்வியல் விவகாரங்களும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக பணிபுரிபவர்களுக்கும் அது எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.அப்போது மட்டும்தான் அல்லாஹ்வின் திருநாமம் இறை இல்லங்களில் உயர்ந்து ஒலிக்கும். அப்போது மட்டும்தான் முஸ்லிம்கள் நல்லக்காரியங்களில் பங்கு கொள்வார்கள்.தீயவற்றில் இருந்து தங்களை காத்து கொள்வார்கள் தங்களின் சமூகத்திற்காக அவர்கள் பொறுப்பெடுத்து சிந்தனை செய்வார்கள். இந்தநிலை மீண்டால்தான் இறை இல்லங்கள் தனது பழைய அசலான நிலைக்கு வந்துவிட்டது என்று கூறமுடியும்.அங்கு இஸ்லாமிய தீனும்,அல்லாஹ்வின் திருநாமமும் மறுபடியும் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

இறை இல்லங்களில் அல்லாஹ் தனது திருநாமங்கள் துதி செய்யப்படுவதையும். உயர்த்தப்படுவதை அனுமதித்து இருக்கிறன் (குர்ஆன்)

இறையில்லங்களின் பக்கம் உங்கள் முகங்களை திருப்பியவர்களாக அல்லாஹ்விடம் அவனுடைய மார்கத்தை (மேலோங்குவதற்காக) பணிந்து வேண்டுங்கள்.


Source - இஸ்லாத்தில் இறை இல்லத்தின் பங்களிப்பு

No comments:

Post a Comment