Jul 17, 2016

மதிப்பிற்குறிய தையுப் எர்தூகான் அவர்களுக்கு!



உங்களது விவேகமான முயற்சி மூலம் ஒரு மோசமான விளைவை தரத்தக்க சதிமுயற்சி முறியடிக்கப் பட்டது! அல்ஹம்துலில்லாஹ். உங்கள் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்த மக்கள் மீண்டும் அதே மதிப்பை தருவார்கள் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நீங்கள் ஹிக்மத் என்ற பெயரில் உறவாடிய அல்லாஹ்வின் எதிரிகளே உங்களை கழுத்தறுக்க துணிந்தார்கள் என்பதை தாங்கள் எம்மைவிட நன்றாக அறிவீர்கள். ஆனாலும் துருக்கியின் வெளியுறவுக் கொள்கையின் சகல ஒப்பந்தங்களும் உடன் பாடுகளும் அந்த துரோகிகளுக்கு சாதகமாகவே இன்னும் இருப்பதையும் எம்மை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள்!


தம்மோடு நட்புறவு பாராட்டிய யூதக் கோத்திரங்களே வஞ்சம் செய்ய துணிந்தபோது அல்லாஹ்வின் தூதரது(ஸல்) முதல் அரசியல் நடவடிக்கை அவர்களுடனான ஒப்பந்தங்களை துண்டித்தது தான்! ஆனால் தாங்கள் இது விடயத்திலும் உங்கள் பாணியில் ஹிக்மத் வர்சனை பின்பற்றி படிப்படியாக முறிப்பதாக கூறுவீர்கள் என்றே எதிர்பார்க்கிறேன். அல்லது (உருப்படியான ஒரு ஜெனரேட்டர் பிளான்ட் கூட இருக்காத )துருக்கியில் உள்ள!!!! ஒரு அமெரிக்கன் மிலிட்டரி பேசுக்கு பவர்கட் செய்து! எம்மனதை குளிரப் பண்ணியது போல காத்திரமான சில பல வேலைகளை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்!

நீங்கள் உடன்பாடு ரீதியாக உறவு வைத்திருக்கும் அந்த இஸ்லாத்தின் எதிரிகள் நட்புறவோடிருந்து திடீரென வஞ்சத்தில் குதித்தவர்கள் அல்ல! மாறாக காலம் காலமாக துரோகத்தை வழிமுறையாக கொண்டவர்கள்! இதெல்லாம் நாம் சொல்லித்தான் தாங்கள் தெரிய வேண்டியதில்லை! இதற்குப் பிறகும் அவர்கள் எந்த விதத்திலும் நம்பிக்கைக்கு உரித்தானவர்கள் அல்ல! மேலும் இவர்களே முஸ்லீம் நிலங்களில் இரத்த ஆற்றை ஓடவிட்டவர்கள்! இடுகாடாய் மாற்றியவர்கள், மாற்றிக் கொண்டிருப்பவர்கள்! இப்படிப் பட்டவர்களோடு நீங்கள் ஸிலோ மோசனில் ஒப்பந்தங்களை முறிக்கும் போது அவர்கள் வேகமாக எம்மில் பலருக்கு கபன் அணிவிக்கும் பணியை முடிப்பார்கள்!

அதைவிட ஒரு முக்கியமான விடயம் நீங்கள் செக்கியூலரி சத்தையும் தேசிய ஜனநாயகத்தையும் நம்பியுள்ளதே அந்த குள்ள நரிகள் முஸ்லீம் உம்மத்தை ஆடுகளாக்கி தேவைக்கு ஏற்ப பலியெடுக்க போட்ட திட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்! அதற்கு உடந்தையாக இருந்த முஸ்தபா கமால் அத்தாதுர்க் என்ற நயவஞ்சக துரோகியை மதிப்பித்தவாறே துருக்கியின் ஆட்சிக்கதிரையில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நாம் நினைவூட்ட கடமைப் பட்டுள்ளோம்! அந்தவகையில் ஒரு அடிப்படை சதியின் நிழலில்தான் தாங்கள் அமர்ந்துள்ளீர்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது!

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்; அது சதிப்புரட்சியை தடுக்க மக்களை அழைத்த அதே வார்த்தைகளை கொண்டு செக்கியூலரிச ஜனநாயகம் எனும் கமால் பாட்சாவின் ரூலிங் சிஸ்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து அவ்விடத்தில் இஸ்லாத்தை பிரதியீடு செய்ய மக்களை அழையுங்கள் என்பதே! உங்கள் வார்த்தைகளை நம்பி அதற்கு மக்கள் செவிசாய்க்க மறுத்தால் ஏதோ மிகப்பெரிய தவறு நிகழ்கிறது என்பதை உங்களாலும் எம்மாலும் புரிய முடியும்! இந்த சரியான சந்தர்ப்பத்தை தவறவிட்டால் எப்போதுதான் இவைகளை செய்யப் பேகிறீர்கள்!?

இவண்
முஸ்லிம் உம்மத்தில் ஒருவன்.

No comments:

Post a Comment