Apr 13, 2011

இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற நூலிலிருந்து- பகுதி 01

முன்னுரை

கி,பி,1990ஆம் ஆண்டு ஏற்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஒரு அரசின்வீழ்ச்சியல்ல. மாறாக அது உண்மையில் ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாகும்,சர்வதேச அளவிலும் உலக அளவிலும் அந்த சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட முடிவாகும்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலுள்ள மேற்கத்தியநாடுகளுக்கும் சோவியத் ரஷ்யா தலைமையிலுள்ள கீழ்திசை நாடுகளுக்கும்ஏற்பட்ட மோதல் என்னும் பனிப்போர் இரண்டு வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட சர்வதேசமோதல் மட்டும் அல்ல, மாறாக அது முதலாளித்துவ சித்தாந்தம் (Capitalism)கம்யூனிஸ் சித்தாந்தம் (Communism) என்கின்ற இரண்டுகொள்கைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப்போராகும், இந்த சச்சரவின் எல்லைகள்ஐரோப்பாவுடன் நின்று விடவில்லை, முழு உலகத்தையும் வியாபித்தது, இறுதியில்கி,பி,1990 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று துண்டுகளாக சிதறியதோடுஅது முடிவுக்கு வந்தது, கார்ல் மார்க்ஸின் பொதுவுடமை தத்துவம் ஆட்சிமுறைஎன்ற விதத்திலும் அதன் மக்களிடமும் அதனை அமல்படுத்திய அதன்அரசுகளிடமும் வீழ்ச்சியுற்றது, இறுதியாக சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் அது மறைந்து போனது.

இயல்பாகவே சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் பொதுவுடமை கோட்பாட்டின்தோல்வியும். முதலாளித்துவ சித்தாந்தத்தை ஒரு கோட்பாடாகவும்.ஆட்சிமுறையாகவும். வாழ்வியல் நெறிமுறையாகவும் முன்நிறுத்தும் அமெரிக்கதலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு வெற்றியாகவே அமைந்தது, மேலும்அவர்கள் இந்த வெற்றியை முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு கிடைத்தவெற்றியாகவே பறைசாற்றிக் கொண்டார்கள், ஜப்பானிய தத்துவமேதை புஹியாமா(Fukiyama) இதை ஒரு சரித்திரத்தின் முடிவு என்று வர்ணித்தார்.

சித்தாந்தங்கள் அதை கடைபிடிக்கும் அரசுகள் வீழ்ச்சியுறுவதால் அழிந்து போய்விடுவதில்லை, அந்த சிந்தாங்களை நடைமுறைபடுத்தும் அரசுகள் வீழ்ச்சியுற்றுசெல்வாக்கு இழந்து போனாலும் துண்டு துண்டுகளாக சிதறினாலும் அது முடிவுக்குவந்து விடாது, மாறாக அதை கடைபிடிக்கும் மக்கள் அதை துறந்துவிட்டு வேறொருசித்தாந்தத்தை தழுவ ஆரம்பித்து அதன்படி தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்டுஅந்த அடிப்படையில் தங்கள் விவகாரங்களுக்கு தீர்வு தேடிக் கொள்ளும்போதுதான் அந்த சித்தாந்தங்கள் அழிவை சந்திக்கின்றன, இந்த நிலைதான் கார்ல்மார்க்ஸின் பொது உடமை சித்தாந்தத்துக்கு ஏற்பட்டது, அதை கடைபிடித்து வந்தஅனைத்து கீழ்திசை நாடுகளும் அதன் மக்களும் அதை புறக்கணித்துவிட்டுதழுவிக் கொண்டு அதன் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கை முறைகளைஅமைத்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை பொறுத்தவரை கி,பி,1924ஆம் ஆண்டு உதுமானிய கிலாபத் என்றஅதனுடைய அரசு வீழ்த்தப்பட்ட பிறகும் அதனுடைய சித்தாந்தம் உலகெங்கிலும்நிலைபெற்று வருகிறது, காரணம் அதனை பின்பற்றும் பல்வேறு வகையான மக்கள் அது ஆட்சி கட்டிலிலிருந்து அகற்றப்பட்டாலும் அன்றாட மக்கள் வாழ்வியல்விவகாரங்களில் தலையிடுவதை விட்டும் அது தடுக்கப்பட்டாலும். சர்வதேசஅரங்கத்தில் அது செயல்படுவதை விட்டும் முடக்கப்பட்டாலும் தொடர்ந்து மக்கள்அதனை தழுவிக் கொண்டுதான் இருக்கிறார்கள், வெறும் சித்தாந்தம் என்ற அளவில்அது சிதைக்கப்பட்டாலும் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தவும் உயர்த்திப்பிடிக்கவும் அரசு இல்லாத போதும் அதன் செல்வாக்கு உலக மக்களிடையேஉயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சித்தாந்தம் அதனை பின்பற்றும் மக்கள் இருக்கும் காலமெல்லாம் இருந்து கொண்டேதான் இருக்கும், அதன் கொள்கைகள்ஒரு அரசின் மூலம் நிலை நிறுத்தப்படாவிட்டாலும் சரியே, எனினும் சர்வதேசஅளவில் அதன் கொள்கைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதற்கு ஒரு அரசுஇல்லையெனில் அது வீழ்ச்சியுற்றே தீரவேண்டும், இவ்வாறே இறைதூதர்(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவில் இஸ்லாமிய அரசை நிறுவிய காலத்திலிருந்தேஇஸ்லாம் எனும் சித்தாந்தம் இருந்து வருகிறது.

இருபதாம் நூற்றாண்டின்துவக்கத்தில் அதன் அரசான உஸ்மானிய கிலாபத் எதிரிகளால் வீழ்த்தப்படும்வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான்இருந்தது,சோசலிசம் என்னும் பொதுவுடமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின்இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெற்ற போது செல்வாக்கு பெற்றது,ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி,பி,1917ஆம் ஆண்டு அதன் அரசுஅமைக்கப் பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது, இந்தஅரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்டது.

1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேசஅரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது, சோவியத் அரசு வீழ்ச்சியுற்றதும்அதன் மக்கள் பொதுஉடமை சித்தாந்தத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள்,முடிவாக மார்க்ஸின் பொதுஉடமை சித்தாந்தம் சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது, முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும்முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இப்போதுஉலகில் இல்லை என்ற காரணம்தான்.
.
உலகளாவிய அளவில் இன்று இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன, ஒன்றுஇஸ்லாம் மற்றொன்று முதலாளித்துவ கோட்பாடு என்ற காபிடலிஸம் இந்த கோட்ôபடு சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற காரணத்தால் ஒரு புதியஉலக நாடுகள் அமைப்பு இப்போது உருவாகி வருகிறது, இந்த கண்ணோட்டத்துடன்பார்க்கும்போது புதிய உலக அமைப்பு The New World Oder என்ற கருத்துசரியானதே. ஆகவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் புதிய உலக அமைப்புஉருவாகிவிட்டது என்று அறிவித்தது இயல்பான ஒன்றுதான், ஏனெனில்அமெரிக்காதான் முதலாளித்துவ நாடுகளின் தலைவராக இருந்து கொண்டு அந்தசித்தாந்தத்தை பரப்புவதற்கும் அதை நிலைநிறுத்துவதற்கும் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.

ஒரு காலனி ஆதிக்க நாடாக நடவடிக்கை மேற்கொண்ட போதே உலகில் அதுஇந்த கோட்பாட்டை பரப்பும் வேலையை ஆரம்பித்துவிட்டது, ஏனெனில் காலனிஆதிக்கம் என்பது அதன் பழைய மற்றும் புதிய வடிவத்தில் முதலாளித்துவசித்தாந்தத்தை பரப்புவதற்குரிய ஒரு வழிமுறையாகும், எனினும் இன்றையசூழ்நிலை என்னவென்றால் இந்த கோட்பாடு சர்வதேச அரங்கில் செல்வாக்குபெற்றிருப்பதால் அதனைப் பரப்பவும் அதனை உலகநாடுகளில்நடைமுறைப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது, இதே வழிமுறையின்படிதனது தோழமை நாடுகளின் உதவியோடு இந்தக் கோட்பாட்டின்கொள்கையாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது, இப்போது அமெரிக்காஇந்த கோட்பாட்டை அனைத்துலக மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளாகஆக்குவதை விரும்புகிறது, இதன் அடிப்படையில் மக்கள் இந்த கோட்பாட்டைஆட்சிமுறையாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதனை நடைமுறைப்படுத்துவதைமட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதன் சட்டங்களையும் அடிப்படைகளையும்.அளவுகோள்களையும். நம்பிக்கைகளையும் மற்றும் அதன் அனைத்து நெறிமுறைகளையும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க உலக மக்கள் அனைவரையும் வற்புறுத்துகிறது.

இந்த கோட்பாட்டை சர்வதேச உறவுகளிலும் மரபுகளிலும் சட்டங்களிலும்அடிப்படையாக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது, ஐக்கிய நாடுகள் சபைஎன்ற சர்வதேச அமைப்பை உருவாக்கி. அதன் அஸ்திவாரமாக முதலாளித்துவகோட்பாட்டின் கொள்கைகளை அமைத்த நாட்களிலிருந்தே இந்த முயற்சிகள்தொடர்ந்து நடந்து வருகின்றன, என்றாலும் சோவியத் யூனியன் கீழ்திசை நாடுகளில்செல்வாக்குடன் இருந்த கால கட்டத்தில் அது பொதுஉடமை கோட்பாட்டை சர்வதேசஅரங்கில் செயல்படுத்திய காரணத்தால் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு வெற்றிகிட்டவில்லை, இந்த காலகட்டத்தில் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தால்அடிமைத்தனத்திலும் வறுமையிலும் சீரழிந்த நாடுகளின் துன்ப நிலையினைபயன்படுத்தி மாஸ்கோ அமெரிக்காவின் ஆதிக்கமும் முதலாளித்துவ கோட்பாட்டின்உத்வேகமும் உயர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது, காலனி ஆதிக்கத்தின்பேராசை. அச்சுறுத்தல். அநீதி. சுயநலம் ஆகிய அதன் கோர முகங்களை மக்களுக்குஎடுத்துக்கூறி மாஸ்கோ பிரச்சாரம் செய்து வந்தது, இதற்காக அது உலகம்முழுவதிலும் ஒரு கடுமையான பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டது, அந்தபிரச்சாரத்தில் காலனி ஆதிக்கத்தின் உண்மையான கொடி இயல்புகளை வெட்டவெளிச்சமாக்கி வந்தது, முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் ஒரு நாணயத்தின்இரண்டு பக்கங்கள்தான் என்பதையும். உண்மையில் விடுதலை என்பது பொதுஉடமை புரட்சியின் மூலமாகத்தான் கிடைக்கும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது,இந்த பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி பெற்றது, இதனால் ஈர்க்கப்பட்டபலநாடுகள் பொதுஉடமை கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தன, காலனிஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டைகோஷமிட ஆரம்பித்தன.

இந்நிலையில் முதலாளித்துவ சித்தாந்தத்தை அதன் அடிப்படை கொள்கையாககொண்டுள்ள மேற்கத்திய வல்லரசுகளுக்கு காலனி ஆதிக்கம் என்ற பழயமுகம்ஆபத்தானது என்பதை அமெரிக்கா உணர்ந்தது, ஆகவே அது தந்திரமாகசெயலாற்ற ஆரம்பித்தது, பொது உடமை கோட்பாட்டின் பக்கம் சாயும்நாடுகளையும் அதன் மக்களையும் கவர்வதற்கு அவைகளுக்கு பொருளாதாரஉதவிகள் செய்வது என்று அமெரிக்கா தீர்மானித்தது, பழய காலனி ஆதிக்கத்தின்துயரங்களிலிருந்து அவைகளை மீட்பது போல பாசாங்கு செய்தது, பல பொருளாதாரசலுகைகளுக்கிடையில் அவைகளின் விடுதலை அம்சங்களில் மறைமுகமாக பலகட்டுப்பாடுகளை கொண்டுவந்தது, புதிய வடிவில் காலனி ஆதிக்கத்தைமறைமுகமாக திணிக்கும் விஷமத் தனத்தை அமெரிக்கா மேற்கண்டது,பொருளாதாரம். அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் ராணுவஒப்பந்தம். இருதரப்பு உறவு. இருதரப்பு பாதுகாப்பு. ஒப்பந்தம் பொருளாதாரம்மற்றும் நிதியுதவி திட்டம். கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய நடவடிக்கைகள் மூலமும்தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, இவ்வாறுதான் சுதந்திரம் மற்றும்விடுதலை போன்ற பகட்டான முகமூடிகளை அணிந்து கொண்டு பல நாடுகளில்புதிய காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா கொண்டு வந்தது, இந்நிலையில்கி,பி,1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று சிற்றுண்ட பிறகு.பொதுஉடமை கோட்பாடு அதன் சர்வதேச செல்வாக்கையும் ஆதிக்கத்தையும்இழந்துவிட்டபோது. சர்வதேச எல்லைகள் அமெரிக்காவிற்கு திறந்து விடப்பட்டது,இப்போது அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் அதன் முதலாளித்துவ சித்தாந்தத்தைபிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்கு சரியானபோட்டியில்லாமல் போய் விட்டது.

ஐக்கிய நாடுகள் சபை கி,பி,1940வரை சோவியத் ரஷ்யாவின் விட்டோஅதிகாரத்தின் காரணமாக எந்தவித அதிகாரமும் இல்லாத ஏட்டுச்சுரக்காய்வடிவமாகவே இருந்து வந்தது, அதன் நடவடிக்கையெல்லாம் சில சொற்பொழிவுகள்சில சம்பிரதாய நடவடிக்கைகள் என்பதற்குள் சுருண்டு கிடந்தது, ஆனால் இன்றுஅது மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகவும். அதிகாரம் பெற்ற அமைப்பாகவும்இருக்கிறது, அது இப்போது ஒரு பக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைநிலைநிறுத்தும் முக்கிய கருவியாகவும் மறுபக்கம் சர்வதேச அளவில்அமெரிக்காவிற்கு உதவி செய்யும் அமைப்பாகவும். முதலாளித்துவ மரபுகளைவலுப்படுத்துவதற்கு அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் தோழனாகவும் இயங்கிவருகிறது.

முதலாளித்துவ கோட்பாடடை உலக மக்கள் அனைவரும் ஒரு வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்டநடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவுஎதிர்ப்புகள் காணப்படவில்லை, ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாடடைஅமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அவர்கள்வழிநடக்கும் கனடா. ஆஸ்திரேலியா. நியுஸிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசைநாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பொதுஉடமை கோட்பாட்டைதுறந்து விட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கை யாகமாற்றிக்கொண்ட நாடுகளும் இதில் அடங்கும், எனினும் சீனா. வடகொரியா.வியட்நாம். கியூபா போன்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டை இன்னும்கோஷமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, உண்மையில் அவைகள் இந்தகோட்பாட்டை நம்புவது இல்லை, சிறிது சிறிதாக அவைகள் வெளிப்படையானஅறிவிப்பு இல்லாமல் இந்த கோட்பாட்டை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன,மற்ற நாடுகளான லத்தீன் அமெரிக்கா. தூரகிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசியநாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்குஎந்தவித சித்தாந்தமும் கலாச்சாரமும் இல்லை, ஆகவே கொள்கை ரீதியாகமுதலாளித்துவ கோட்பாட்டிற்கு எதிர்ப்பு வருவதற்கு அங்கு வாய்ப்புகள் இல்லை,ஆகவே சித்தாந்த ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டைஏற்றுக் கொள்ளாத நாடுகளாக இருந்து வருகின்றன.

இந்த சமூகம் தன்வசம்இஸ்லாம் என்ற சித்தாந்தத்தை வைத்துக் கொண்டுள்ளது, எனினும் இந்தசித்தாந்தத்தின் கொள்கைகள் அடிப்படையில் அந்த சமூகம் வாழ்வதுமில்லை,சர்வதேச அரங்கில் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தி உலகுக்கு அதை எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்வதுமில்லை, ஆகவே இயக்க வேண்டும் என்றஅமெரிக்காவின் அபிலாசை இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் கடுமையாகஎதிர்க்கப்படுகிறது,இப்போதுள்ள இஸ்லாமிய நாடுகளில் அதன் அரசுகள் இஸ்லாத்தைநடைமுறைபடுத்துவதாக கூறிக் கொண்டாலும் அவைகள் உண்மையில் அவ்வாறுசெய்வது இல்லை, மாறாக முதலாளித்துவ கோட்பாட்டின் கொள்கைகளை அதன்மாறுபட்ட வடிவத்தில் அவைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன, இஸ்லாமியசமூகம் கிலாöபத் அழிக்கப்பட்ட போதிலும் அழிந்து விடவில்லை, இந்த சமூகம்அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தனது மறுமலர்ச்சி பாதையை கண்டுபிடித்துஅதில் நடைபோட ஆரம்பித்திருக்கிறது, ஆம்! கடந்த 1950 ஆண்டின் துவக்கத்தில்கிலாபத்தை நிறுவும் அரும்பணியினை இந்த சமூகம் இனம் கண்டு கொண்டது,இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே தனது வாழ்வை வடிவமைத்துக்கொண்டது, கிலாöபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு குöப்பார்கள் அதில் பலபிரிவினைகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியிருந்த போதிலும் அந்தசமூகம் தன்னால்தான் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறது.

அதனுடைய ஆட்சியாளர்கள் குöப்பார்களின் கங்காணிகளாக இருந்த போதிலும்அவர்கள் மேற்கத்திய குöப்பார்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படுத்திய குப்ர்ஆட்சியை நிலை நிறுவுவதற்கு பாடுபட்டபோதிலும். இந்த சமூகம் இஸ்லாத்தின்மறுமலர்ச்சியை நோக்கி உறுதியாகவே நடைபோடுகிறது, இந்த இஸ்லாமியநாடுகளின் முஸ்லிம் ஆட்சியாளர்கள் குöப்பார்களின் நலன்கள்பாதுகாப்பவர்களாகவும். அவர்களின் செல்வாக்கை பலப்படுத்துகிறவர்களாகவும்தங்களது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கத்திய எஜமானர்களின்கட்டளைப்படியும் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைத்துக்கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த சமூகத்தின் மறுமலர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை, ஆனால்இந்த மாபெரும் பணியினை தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு உழைக்கும்முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளையும். கொடுமைகளையும். அச்சுறுத்தல்களையும் மேற்கத்தியர்களின் அடிவருடிகளான இந்த முஸ்லிம்ஆட்சியாளர்கள் ஏவி விடுவதால் மறுமலர்ச்சி மிதமாகவே நடந்து கொண்டிருக்கிறது,குöப்பார்களின் திட்டப்படி செயல்பட்டு முஸ்லிம்களின் மீது தாக்குதலையும். கடும்தண்டனையையும் தம் சொந்த மக்காள் மீது குöப்பார்களின் அடிமை தனத்தின்அடையாளமான நுகத்தடியையும் சுமத்துவதற்கு இந்த ஆட்சியாளர்கள் சித்தமாகஇருக்கிறார்கள்.

இருந்த போதிலும் அமெரிக்காவின் தலைமையிலுள்ள மேற்கத்தியகுöப்பார்கள் இந்த சமூகத்தின் மறுமலர்ச்óசிக் குறித்து அச்சம் அடைந்தேஇருக்கிறார்கள், தனது மறுமலர்ச்சிக்குப் பிறகு அது முழுபலத்துடன் எழுந்துநிற்கும். மற்ற சமூகங்களிலிருந்து முற்றிலும் தனித்தன்மை உடையதாக ஒரேசமூகமாக கிலாöபத் என்ற ஒரே தலைமையோடு கூடிய அல்லாஹ்(சுபு)வின்ஆட்சியை இந்த புவியில் நிறுவும், பிறகு மேற்கத்திய குöப்பார்களினால் ஏற்பட்டசீரழிவிலிருந்தும். குழப்பத்திலிருந்தும். ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உலக மக்களைகாப்பதற்காக இஸ்லாமிய செய்தி எனும் சங்க நாதத்தை முழு உலகிற்கும் எடுத்துச்செல்லும் சந்தர்ப்ப வாதமும். சுயநலமும் பேராசையும் கொண்ட மேற்கத்தியகுöப்பார்களின் ஆதிக்கத்தால் உலகின் அமைதி சீர்குழைந்தது, பாதுகாப்பற்ற ஒருவனாந்திரத்தைப் போன்று இந்த உலகம் ஆகிவிட்டது.

அவர்களது சுயநலதிட்டங்களினால் மனித சமூகத்திற்கு அல்லாஹ்(சுபு) அருட்கொடையாக அளித்தவிஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பலன் தராது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டன,ஆகவே கடந்தகால சரித்திரத்தின் காட்சிகளை மனக்கண்ணில் நினைவு கூர்ந்தவண்ணம் இந்த குöப்பார்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள், நாடோடிகூட்டங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்றுகொண்டிருந்த அரபு இன மக்களை.இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும். தனித்தன்மை உடையசமூகமாகவும். உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துச் சென்றவர்களாகவும்உருவாக்கியது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களாகிய அந்த முஸ்லிம்கள் சொற்ப காலத்தில் உலகதலைவர்களாக உருப்பெற்றார்கள், அந்த பெருமக்களின் தலைமைத் துவம் பலநூற்றாண்டுகளை கடந்து நின்றது, அவர்களது ஆட்சிக்காலத்தில் நீதியும்.நேர்மையும். பாதுகாப்பும். உயர் பண்புகளும் உலகில் செழித்து வளர்ந்தது.

ஆகவே முஸ்லிம் சமூகம் மறுபிரவேசம் செய்து கிலாöபத்தை நிறுவி.தங்களுடைய நலன்களை அவர்கள் நாட்டிலும் உலகின் மற்ற இடங்களிலும்அழித்துவிடும் என்று குöப்பார்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்,இவ்வுண்மையை அமெரிக்காவும். ஐரோப்பாவும் உணர்ந்துள்ள நிலையில்இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக அவர்களது திட்டமிட்ட நடவடிக்கைகளையும்பிரச்சாரங்களையும் உலகம் முழுவதும் முடுக்கிவிட்டிருக்கின்றார்கள்.

இந்தத் திட்டங்களின் பின்னனியில் வேறு நோக்கங்களும் அடங்கியிருக்கின்றன,அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களுக்கே உரிய பாரம்பரிய பேராசையில்இஸ்லாமிய நாடுகளின் செல்வ வளங்களில் இச்சை கொள்கின்றன, அதன் பூகோளரீதியான மற்றும் போர் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களின் மீதும். அதன் கனிமவளங்களின் மீதும். தங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு அந்த நாடுகள் சிறந்தசந்தையாக இருக்கும் காரணத்தாலும். தங்களுடைய ஆலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுநினைப்பதாலும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களுடைய வாழ்க்கைக்கு மிகஅவசியமான அதனுடைய எண்ணெய் வளங்களுக்காகவும் அந்த நிலங்களைஆக்கிரமிப்பு செய்ய பேராவல் கொள்கின்றன.

அவர்களது முக்கியமான நோக்கம்இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை தடுத்து நிறுத்துவதுதான், எனினும் முஸ்லிம் சமூகம்மறுமலர்ச்சி பெற்று உலக மக்கள் அனைவரிடமும் இஸ்லாமிய செய்திசென்றடைந்தால். அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த அழிவு அவர்களைஅடைந்தே தீரும்,

sources warmcall.blogspot.com

No comments:

Post a Comment