Nov 21, 2011

நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்!!!

எகிப்தில் மாற்று ஆட்சிமுறைக்கான ஒரு மாற்றத்தை மக்கள் கேட்டனர் ஆனால் நடந்தது என்ன? ஒரு அநீதமான் ஆட்சி போய் மற்றொரு அநீதமான ஆட்சி வந்துவிட்டதை கண்டு முஸ்லிம் உம்மத் மீண்டும் கொந்தளிப்ப.நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்....

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கையில் வந்தது. இதற்கிடையில் இந்தமாத இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்ட மறுசீரமைப்பு மற்றும் ராணுவ ஆட்சி போன்றவற்றிர்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இது கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில் சுமார் 1லட்சத் துக்கும் மேல் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கி தொடர்ந்து போராடினர். இதற்கு ராணுவ ஆட்சியாளர் கள் அனுமதிக்க வில்லை. கூடாரத்தை அகற்றி விட்டு தக்ரீர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் எஸ்சாம் ஷராப் உத்தரவிட்டார். ஆனால், இதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து நேற்று இரவு தக்ரீர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடா ரங்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்குமீண்டும் கலவரம் வெடித்தது. அதில் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இப்போராட்டம் கெய்ரோவை தொடர்ந்து தற்போது அலெக்சாண்டி ரியா, சூயஷ் நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.

No comments:

Post a Comment