Feb 7, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 12)

' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

உலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது . செர்பியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்துப் போக வேண்டியுள்ளது . ஆனால் 'கபிடளிசத்தின் ' 'ப்ரோபிட் அண்ட் பெனிபிட் ' தரத்தில் 'ஜஸ்ட் பிரக்டிகள் ஜோக்ஸ் ' வகையை சேர்ந்த இந்த சம்பவம் உலகம் எங்கே உள்ளது ? என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாகும் .

சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார்.இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார்.ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடைநடுவே அவர் தனது கால்களை அகற்றிக் காட்டியுள்ளார். இதன் போது அப்பெண் உள்ளாடை எதனையும் அணியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரதமர் இவிகா டாசிச் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்ச்சியானது உண்மையான அரசியல் நிகழ்ச்சியொன்றல்ல எனவும் மாறாக இது தொலைக்காட்சிகளில் நபரொருவரை அவர் அறியா வண்ணம் குழப்பத்தில் ஆழ்த்தும் Practical Joke/ Prank வகையைச் சேர்ந்த வேடிக்கை நிகழ்ச்சியொன்றெனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்நிகழ்ச்சிக்கு சேர்பிய பிரதமர் அலுவலகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் தொகுப்பாளர் பிளே போய் சஞ்சிகையில் தோன்றிய மொடல் அழகியென்றும் தெரியவந்துள்ளது.

வீரகேசரி feb 7. 2013

ஒரு பெண் ஒரு ஆணின் பார்வையில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பதை இந்த மீடியாக்கள் மிக அழகாகவே காட்டி நிற்கின்றன ! ஒரு பெண் பாலியல் ரீதியாகவோ வேறு எதோ ஒரு வகையிலோ வன்முறைக்கு ஆளாவதை பற்றி கவலையோடு கூக்குரலிடும் இந்த மீடியாக்களின் நோக்கமும் பணத்தால், பணமிட்டு , பணத்திற்காக என்ற கேவலமான இயங்கியலை சுற்றியே பிண்ணப் பட்டுள்ளது . என்பதை உணர்த்த இந்த சம்பவம் நல்ல ஆதாரமாகும் . 

கிளர்ச்சியை தூண்டும் கவர்ச்சித் தூண்டிலில் பெண்ணை இரையாக்கி பாலியல் இரைதேடும் இயல்பான ஆணின் முன் வீசி எறிந்தால் !! விளைவு என்னவாகும் ? சுத்தமான ஒரு சில மீடியாக்கள் தவிர அநேக மீடியாக்கள் செய்வது இந்த 'பெண் போட்டு பிரபல்யம் பிடிக்கும் ' தரக்குறைவான தந்திரமே ! பின்னர்' ஐயோ ! பத்திக்கிச்சு !' என அரசியல் தரத்தில் குற்றம் சுற்றம் பேசுவதுமாகும் . சமூக ஒழுக்கத்தை சாக்கடையாக்கும் முதலாளித்துவ முதலைகளின் சிந்தனைப் பீரங்கிகள் தான் இந்த மீடியாக்கள் என்றால் அது தவறான கணிப்பல்ல .

பெண்ணுரிமை ,பெண் சுதந்திரம் , பெண் கல்வி , என போராட்டம் நடத்தும் உத்தமர்கள் இந்த 'கற்ப் பொழுக்கம் ' பற்றியும் ஒரு போராட்டம் நடத்திக் காட்டலாமே ? 'கணவன் மட்டும் காணும் அழகை கடைகளில் போட்டுக் காட்டும் எல்லோரையும் ஒரு கை பார்க்க பெண்கள் சமூகமே நீ ரெடியா ? ஸ் ..ஸ் .. ஊடக சுதந்திரம் அவர்களின் கேடயமாக அப்போதும் நீங்கள் அடக்கத்தான் படுவீர்கள் . மலாலாவை தாலிபான் சுட்டால் மட்டும் தான் நீங்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்!அபீஹம்சாவை அமெரிக்க சிப்பாய்கள் சிதைத்துக் கொன்றபோது கூட நீங்கள் மௌனம் காக்கத்தான் வைக்கப்பட்டீர்கள். உங்களது போராட்டத்தின் நியாயத்தையும் உங்களால் தீர்மானிக்க முடியாது ! ' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

No comments:

Post a Comment