May 2, 2013

இந்தியா ,பாகிஸ்தான் , பங்களாதேஷ் காட்டும் அரசியல் முதலாளித்துவ பொய் முகங்களா!?( 02)

( சற்று இந்த அல் குர் ஆன் வசனங்களை படித்து, பின் தொடரவும்.)

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;இணைவைப்பாளர்கள் (அதனை) வெறுத்த போதிலும் ,(உலகில்) உள்ள எல்லா
மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்யவே " ( TMQ 9 : 33 )

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;இணைவைப்பாளர்கள் (அதனை) வெறுத்த போதிலும் ,(உலகில்) உள்ள எல்லா
மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்யவே " ( TMQ61 : 09 )

"அவனே தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் ,சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான் ;,(உலகில்) உள்ள எல்லாமார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச்
செய்யவே " இன்னும் இதட்கு சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானாவன் ( TMQ 48: 28 )

பாகிஸ்தான் அரசியலில் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு பற்றி இந்திய அரசியலை விமர்சிக்கும் இந்திய முஸ்லீம் புத்தி ஜீவிகள் இஸ்லாமிய அரசியலின் பார்வையில் பாகிஸ்தானின் அரசியல் இந்தியாவின் அரசியலோடு எங்காவது முரண்படுகிறதா? எனும்
அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது இதுதான் பாகிஸ்தானின் அரசியல் சில மேல் பூச்சு இஸ்லாமிய அடையாளங்களோடு நடைமுறைப் படுத்தப்படும் தெளிவான
'குப்ரிய' அரசியல்! இந்திய அரசியல் தன்னை தெளிவான 'குப்ரிய' அடையாளங்களோடு வெளிப்படுத்தும் தெளிவான 'குப்ரிய' அரசியல்! அதாவது தெளிவான இஸ்லாம் என்பது இந்த இரண்டு நாட்டுக்கும் பொது எதிரி !!?

பாகிஸ்தான் முஸ்லீம் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு இஸ்லாம் இருப்பதாக யாரும் கருதினால் அது அப்பட்டமான பகல் கனவு ! (பங்களாதேஷ் , உட்பட முழு முஸ்லீம் பெரும்பான்மையும் இத்தகு கீழ்த்தர குப்ரிய வழிமுறையில் பங்காளிகளே!) சரீயாவை கொண்டு வர 51% விகிதாசாரம் கேட்கும் இலட்சணத்தில் இருந்து மதச் சார்பின்மை மதமாகி இஸ்லாம் இங்கும் பூரண வாழ்வியலாக அமூலாக முடியாமல் (90 % முஸ்லீம்கள் இருந்தும்) தவித்துக் கொண்டிருப்பதையும் இன விகிதாசார அடிப்படையில் பிரித்தானிய காலானித்துவத்தால் பிரிக்கப்பட்டு அவர்களது பொம்மை ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்படும் நவ காலானித்துவ சிறைகளில் வளம் கொழிக்கும் ஒரு சிறந்த நிலமே பாகிஸ்தான்;என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

(தொடரும் )

No comments:

Post a Comment