Aug 30, 2013

எகிப்திய மக்கள் சிரிய மக்கள் புரட்சியில் இருந்து பாடம் பெறவேண்டும்!


1. சிரிய மக்கள் மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்! அதே போன்று எகிப்தியர்கள் இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அல்ஜீரியாவிலும் பலஸ்தீனிலும் இருமுறை தோல்விகண்ட மேற்கினது கருவியாகிய ஜனநாயகம் எனும் கருவியை தூக்கி வீசவேண்டும். அதற்கான கோஷத்தை கைவிடவேண்டும்.

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டும் என்று சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதேபோன்று “சிசி” யும் அவனது அடிவருடிகளும் இல்லாமல் போகவேண்டும் என்பதற்கு எகிப்தியர்கள் போராடவேண்டும்.

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதுவே எகிப்திய மக்களது மூலமந்திரமாக வீரவசனமாக மாறவேண்டும்.

ஷாமில் இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி சிரிய மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் எகிப்தில் இன்று முன்னெடுக்கப்படும் சாத்வீக வழிமுறையில் இவற்றை சாதிப்பது எந்தளவுக்கு சாத்தியம்? இத்தகைய சாத்வீகவழிப்போராட்டம் எமது வீர வரலாற்றில் எத்தகைய பங்கை செய்துள்ளது என்பதனை சிந்தித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து ஹக்கை நிலைநாட்ட எகிப்திய போராடவேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை அமுல்படுத்தும் போக்கையும் கோரிக்கையையும் கைவிடவேண்டும். அதுவே இஸ்லாத்திற்கு பலம் சேர்கும். முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment