Aug 26, 2013

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா?

இன்று எகிப்தில் ஆயிரக்கணக்காண உயிர்கள் பலியிடப்படும் துர்பாக்கிய நிலைக்கு எகிப்தினது அரசியல் வழிகாட்டல் வித்திட்டுள்ளது.

அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கை மேலோங்கிய நிலையில் இவர்களது வழிகாட்டலின் கீழ் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாத்வீக வழிப் போராட்டம் எனும் தோறணையில் பலியிடப்படும் பரிதாபகரமான சூழலிற்கு இன்று இஹ்வானுல் முஸ்லிமின் அமைப்பு வழிகாட்டுகிறது.

சாத்வீகவழிப்போராட்டம் நபி வழியில் இஸ்லாமிய அரசை நிறுவிடும் வழிமுறையா? சீராவில் அத்தகைய முன்மாதிரி உள்ளதா?

அல்சிசி எனும் கொடுங்கோலன் இஸ்வான்களை ஆறுமாத காலத்துக்குள் கருவறுத்துவிடுவேன் எனும் சூளுரைக்கும் இத்தருணத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிசியின் பின்னணியில் தொழிற்படும்போது சாத்வீகவழியில் மீள இஸ்லாம் மலருமா?

ஏற்கனவே அமெரிக்காவும் அதன் அடிவருடிகளான சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகளும் இஸ்ரேலும் சேர்ந்து இஸ்லாம் ஜனநாயகம் எனும் ஆட்சிமுறைக் கருவியினூடாக அமுல்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான சதித்திட்டத்தை தீட்டி ஆட்சியை கவிழ்த்திருக்கும் போது மீள முர்சியை பதவியில் அமர்த்துவதனால் இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்த விட்டுவிடுவார்களா?

அல்ஜீரியாவில் இதேபோன்றதொரு பாடத்தை படித்துவிட்டு மீள ஜனநாயகம் எனும் கருவியினூடாகவே இஸ்லாத்தை அமுல்படுத்துவோம் என்பதில் எந்தளவு சாத்தியம் உள்ளது என்பது பற்றி உணரமாட்டார்களா எமது இஹ்வானிய சகோதரர்கள்?

இவர்கள் மாற்றீட்டு அரசியல் பற்றி சிந்திக்க மாட்டார்களா? இராணுவ நுஸ்றா இல்லாத நிலையில் இஸ்லாத்தை பகுதியாகவும் தேசத்தின் எல்லைக்குள் அமுல்படுத்தவும் எதிரிகளிடம் இருந்து அரசை பாதுகாக்கவும் இராணுவ நுஸ்றா வேண்டும் என்பதனை உணரமாட்டார்களா?

அல்லாஹ் இவர்களுக்கு இந்த உண்மையை புரியவைக்க வேண்டும் என பிரார்த்திப்போம்! நபிவழியில் கிலாபா நிறுவிட, பாடுபட பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment