Aug 26, 2013

இஸ்லாமிய எழுச்சியில் எகிப்தினது வகிபங்கும் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் கற்கவேண்டிய படிப்பினைகளும்....?

எகிப்து முஸ்லிம் நாடுகளில் ஒரு பலம்வாய்ந்த கேந்திர முக்கியத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இதன் மற்றுமொரு முக்கியத்துவம் தான் அது மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ்கால்வாயை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளமை. மாத்திரமன்றி இஸ்ரேலுக்கான முழு விநியோகமும் எகிப்தினது சுரங்கப்பாதையினூடாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாட்டைச் சூழவுள்ள நாடுகளும் பல்வேறு வளங்ளைக் கொண்டிருப்பதுடன் இஸ்லாமிய எழுச்சியில் மறுமலர்ச்சியில் கனிசமான பங்களிப்பை வழங்கத் தேவையான வசதிகளை கொண்ட நாடுகளாகும்.

எகிப்து வீரவரலாற்றை கொண்ட ஒரு நாடாகும். ஐன்ஜாலூத்தில் வைத்து மொங்கோலியர்களை கறுவருத்து இஸ்லாத்திற்கு பலம் சேர்த்தவர்கள் இந்த நாட்டு மக்கள். இன்று மிக்பெரிய இராணுவ பலத்தை கொண்ட முஸ்லிம் நாடுகளில் எகிப்து முக்கிய இடத்தை வகிக்கிறது.

இஸ்லாமிய எழுச்சியில் அதன் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்த மிகவும் பழமைவாய்ந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தை கொண்ட நாடு. இங்கிருந்து இஸ்லாமிய எழுச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய ஹசன் அல்பன்னா மற்றும் செயித் குத்ப் போன்ற நவீன இஸ்லாமிய அறிஞர்களை வழங்கி இஸ்லாம் அரசியல் மற்றும் ஆத்மீக செயற்பாடுகளில் சமபங்கை வழங்கவேண்டும் எனும் சிந்தனையை விதைத்து இஸ்லாம் இன்று மீள் எழுச்சி பெறுவதில் பங்களிப்பை வளங்கியுள்ளது.

ஆனால் உதுமானிய கிலாபா வீழ்ச்சியின் பின்னர் பல்வேறு நாடுகளினது காலனித்துவத்திற்கு உட்பட்டதாலும் அதன் ஆட்சியாளர்கள் சர்வாதிகளாகவும் குப்ருடைய சிந்தனையை அடிப்படையை கொண்டு ஆட்சி செய்ததன் விளைவாகவும் இன்று மதஒதுக்கல் சிந்தனையை கொண்ட மக்களும் கொப்டிக் கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மீள அரசியல் வடிவில் உருவெடுத்து வாழ்வின் விவகாரங்களை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒழுங்கு படுத்துவதில் பாரிய தடையாக உள்ளனர்.

இவர்கள் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்கு ஆட்பட்டிருப்பதுடன் இவர்களை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் மேற்கினதும் அமெரிக்காவினதும் அடிவருடிகளாக அவர்களது அரசியல் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக காணப்பட்டதன் விளைவாக இன்று எகிப்தில் கலாநிதி முர்சியினது சரீஆ அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டுவிட்டால் தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் என்பதற்காக பாரிய சதிப்புரட்சி செயடதார்கள். இதற்கு சவூதி, கட்டார் மற்றும் குவைத் போன்ற நாடுகள் துணைபுரிந்து இன்று குப்பாரகளது நலன்கள் மேலோங்கவும் முஸ்லிம்களது உயிர்கள் பறிக்கப்படவும் வழிவகுத்துள்ளார்கள்.

அத்துடன் இன்று எகிப்தை பொறுப்பேற்றுள்ள சிசி 6 மாத காலத்தில் 3 மில்லியன் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சேர்ந்தவர்களை கறுவறுத்துவிடுவேன் எனவும் சூழுரைக்கும் அபாயகரமான நிலையில் எகிப்துள்ளது. இவன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஹீரோவாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளான்.

இதற்கு சவூதி குவைத் கட்டார் போன்ற நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கும் துர்பாக்கிய நிலையில் எமது முஸ்லிம் உலகு உள்ளது. குப்பார்களுடன் கூட்டுசேர்ரும் முஸலிம்களைப் பார்த்து அல்குர்ஆன் மிகவும் காரசாரமாக கண்டிக்கிறது. அவர்களை குப்பார்களது தரத்தில் வைத்து நோக்கிறது என்ற அடிப்படையையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இத்தகைய ஆபத்துக்களை சுமந்த எகிப்திய மக்களுக்கு பாரிய தஃவாப்பணியுள்ளது. இவர்களை வழிநடாத்தும் இஸ்லாமிய தலைமைத்துவங்கள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவும் போது கவனத்திற்கொண்ட “இராணுவ நுஸ்றாபற்றி” சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நிறுவியதன் பின்னர் “குப்பார்களுடன் எவ்வாறான உறவை நபி (ஸல்) மேற்கொண்டு இஸ்லாத்தை முழுமையாக அமுல்படுத்தினார்கள்” என்பது பற்றி சிந்தித்து அதனை முழுமையாக அமுல்படுத்தும் “கிலாபா பற்றிய கோசத்தை” முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இஸ்லாமிய அமைப்புகளினால் “மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியமைப்பினால் இஸ்லாம் முற்றாக அமுல்படுத்தப் படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்துள்ளது” என்ற சிந்தனையை விதைத்து மக்கள் “ஜனநாயகம் எனும் மேற்கினது ஆட்சிமுறைக் கருவியினூடாக இஸ்லாம் அமுல்படுத்தப்பட முடியாது” என்ற செய்திகுறித்து மக்களை விழிப்படைய செய்ய வேண்டும். நம்பிக்கையூட்ட வேண்டும்.

எகிப்தில் கிலாபா நிறுவப்படத் தேவையான நுஸ்றாவை கோரி இராணுவத்தை இஸ்லாம் அமுலாக்கப்படுவதிலும் பொது எதிரியினது அனைத்து இராணுவ முன்னெடுப்புகளை எதிர்கொள்வதிலும் பயன்படுத்த கோரும் ஹிஸ்புத் தஹ்ரீரின் மாற்றீட்டு வழிமுறைபற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான வெகுஜன அபிப்பிராயத்தை திரட்டுவதிலும் மக்கள் நம்பிக்கையூட்டப்படுவதிலும் பாரிய தஃவா முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு எகிப்தில் நாளை ஒரு கிலாபா உருவாக்கப்படுமானால் முஸ்லிம் நாடுகளில் உள்ள இராணுவம் நுஸ்றாவை வழங்குவதற்கும் இவர்களது கரம் பலப்படுத்தப்படுவதற்குமான அரசியல் முன்னெடுப்பு தஃவாக்கள் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும்.

கிலாபா அரசின் கீழ் வாழும் அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இன்றி நீதமாக நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையை கடந்த வரலாற்றுச் சான்றுகிளில் இருந்து வழங்கி மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு “கிலாபா அரசில்” நம்பிக்கையூட்டி அதன் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்ய ஆக்கபல தஃவா முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

https://www.facebook.com/mohideen.lebbe

No comments:

Post a Comment