முஸ்லிம்கள் மறுபடியும் தாருள் இஸ்லாத்தின் கீழ் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்குத் திரும்பி ஷரிஆவின் அடிப்படையில் தங்கள் வாழ்வியல் விவகாரங்கள் அனைத்தையும் தீர்மாணிக்க வேண்டும்.
இஸ்லாமிய அரசான கிலாபத்தின் நிழலில் ஹலால் ஹறாமை தங்கள்வாழ்க்கையின் அனைத்துச் செயற்பாடுகளினது அளவுகோலாக எடுத்துக் கொள்ளும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தை கொண்ட இஸ்லாமிய சமூகமாக வாழ வேண்டும்.
அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் (ஸல்) சுன்னாவின்படியும் தங்களை ஆட்சிசெய்து இஸ்லாத்தின் செய்தியை “தஃவா மூலமும் ஜிஹாத் மூலமும்” உலம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் “பைஅத் கொடுத்து” முஸ்லிம்கள் ஒரு “கலீபாவனை நியமனம்” செய்வதன் மூலம் அமைக்கப்படும் “கிலாபா அரசினது” முக்கியத்துவம் பற்றியும் அது இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள நிலையில் அனுபவித்துவரும் கஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் இழிவுகளை கருத்திற்கொண்டும் அதனை நபி வழியில் மீள் உருவாக்கம் செய்ய பாடுபடவேண்டும்.
முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாபத்தின் மீள் எழுச்சிக்குத் தடையான அடிப்படைத் தடைக்கற்களான இன்றைய “மேற்கினது அடிவருடிகளான முஸ்லிம் ஆட்சியாளர்களையும்”, அவர்கள் முஸ்லிம் உம்மத்தை தேசத்தின் எல்லைக்குள் பிரித்தாளும் “தேசியவாதச் சிந்தனையின் பாரதூரமான விளைவையும்” உணர்வதுடன் இன்று உம்மத்தின் “முஸ்லிம் இராணுவம்” மேற்கினதுநலன்களுக்கு எமது முஸ்லிம் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் துரதிஸ்டமான நிலையில் இருந்து மீட்டு, நன்கு திட்டமிடப்பட்ட தஃவாக்களின் மூலம் அவர்களது நுஸ்றாவை பெற்று இஸ்லாமிய அரசினது நலன்கள் காக்கப்படவும், முஸ்லிம்களும் இஸ்லாமும் பாதுகாக்கப்படவும் உரிய தாவாவின் அவசியம் பற்றி உணர்ந்து செயற்படவேண்டும்.
இதுவே முஸ்லிம்களது கண்ணியம் காக்கப்பட, குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமுலாக்கப்பட வழிவகுப்பதுடன் குப்பார்களும் இவ்வுலகில் நலன்பெற வழிவகுக்கும். ஏனெனில் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட் வாழ்க்கை முறை தீனுல் இஸ்லாமாகும்:
இந்த பேருண்மைகளை உணர்ந்து இஸ்லாத்திற்கு பலம்சேர்போம்! இஸ்லாத்தை ஆளுகை நிலைக்கு கொண்டுவர பாடுபடுவோம்!
இவ்வுயரிய நோக்கங்களை வாழ்வின் இலக்காக கொண்டு எமது வாழ்வை ஒழுங்குபடுத்தி தஃவாவை முற்படுத்துவோம்.
No comments:
Post a Comment