முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.
எனவே உம்மத் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான தேசியவாதம் களையப்பட்டு உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை ஊட்டப்படவேண்டும்!
மேற்கினது பிரித்தாளும் ஆட்சிமுறையினது கருவியான மனிதன் சட்டத்தை ஆக்கும் ஜனனாயகப் பாராளுமன்ற முறைமூலமான ஆட்சிமுறை மாறி கிலாபா ஆட்சி வரவேண்டும்!
அதுவே 57 நாட்டு முஸ்லிம் தலைமைகளை ஒரு தலைமையாக்கும்! அதன் மூலமே உம்மத் கடந்த 1300 வருடமாக பாதுகாக்கப்பட்டது! குர்ஆன் சுன்னா சகல துறைகளிலும் அமுலாக்கப்பட்டது.
பல்வேறு பிரிவுகளான பிரிந்துள்ள உம்மத் கலீபாவின் தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதுடன் அவருக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு ஏவப்பட்டுள்ளோம்!
நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்தவுள்ள கிலாபா மீள வருவதற்கான காலகட்டத்தை அண்மித்துள்ள நாம் அதுபற்றிய சிந்தனை மற்றும் பார்வை குறித்து எமது சமூகத்திற்கு அறிவூட்ட கடமைப்பட்டுள்ளோம்!
No comments:
Post a Comment