Sep 10, 2013

இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்படுவதற்கு…

இஸ்லாத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஆட்சிசெய்யப்படுவதற்கு குப்பார்களது கருவியாகிய ஜனநாயகம் எனும் ஆட்சியமைப்புக் கருவ பயன்படுத்தப்படுகிறது. இது அடிப்படையில் இஸ்லாத்திற்கு முறணானது.

தேர்தல் என்பது ஒரு ஆட்சியாளரை தெரிவுசெய்யும் ஒரு வழிமுறை. ஆனால் மக்கள் ஆணையை பெற்ற ஆட்சியாளர் இறையாண்மையை கையில் எடுக்க முடியாது. அது அல்லாஹ்வுக்குரியது.

அவர் அடிப்படையில் குர்சுன்னாவின் அடிப்படையில் மக்களை ஆட்சிசெய்ய வேண்டும். அவர் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹறாமாக்கவோ ஹறாமாக்கியதை ஹலாலாக்கவோ புதிதாக சட்டம் இயற்றவோ அதிகாரம் படைத்தவர் அல்ல.

இந்த அடிப்படையினை நாம் எடுத்துநோக்கும் போது ஜனநாயக முறையில் இஸ்லாம் ஒரு போதும் ஆளப்பட முடியாது. காரணம் ஜனநாயகத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் மக்களுக்குரியது எனும் அடிப்படைக் கோட்பாட்டைக் கொண்டது.

“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் திர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாத வரையில் அவர்கள் நம்மை ஈமான் கொண்டவர்கள் ஆகமாட்டதர்கள்” (அல்குர்ஆன் 4:65)

“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”
(அல்குர்ஆன் 33:36)

அதே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட விடயம்.

தம்மை ஆளும் பிரதிநிதியாக ஒரு கலீஃபாவை நியமிப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

கலீபாவின் ஒருமை குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன.ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

“இரண்டு கலீஃபாக்களுக்கு பைஅத்(சத்தியப்பிரமாணம்) கொடுக்கப்பட்டால், அவர்களில் இரண்டாமவரை கொன்றுவிடுங்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

அடிப்படையில் இஸ்லாமிய அரசு என்பது நான்கு அடிப்படைகளைக் கொண்டிருக்கும்.
1. இறைமையும் சட்டமியற்றுதலும் இறைவனுக்குரியது
2. அதிகாரம் என்பது முஸ்லிம் உம்மாவிற்குரியது
3. ஒரே ஒரு கலீஃபாதான்.
4. இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் உரிமை கலீஃபாவுக்கு மட்டுமே உண்டு.

இஸ்லாமிய ஆட்சி பற்றிய அடிப்படைத் தெளிவைப் பெறுவோம்! இஸ்லாம் எழுச்சிபெற ஆக்கபல தாவாக்களை முன்னெடுப்போம்.

by Mohideen Ahamed Lebbe via Facebook

No comments:

Post a Comment