Sep 15, 2013

நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் எமது முதல் பணி நபி (ஸல்) மக்காவில் நிறைவேற்றிய பணி.

அது ஒரு அரசியல்பணி. ஆனால் ஆட்சி அதிகாரம் மூலம் நிறுவும் பணியல்ல.

மதீனாவில் அதிகாரம் கிடைத்த பின்பு ஒரு அரசு என்ற அடிப்படையில் இஸ்லாத்தை முழுமையான உள்நாட்டினுள் அமுல்படுத்தியதுடன் வெளிநாட்டுக்கம் தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அரசு எடுத்துச்சென்றது. அது முஸ்லிம்களதும் இஸ்லாத்தினதும் நலன்களை காப்பாற்றியது.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எவ்வாறான ஒரு ஜாஹிலிய சமூக அமைப்பையும் அரசில் தலைவர்களையும் எதிர்கொண்டு இஸ்லாத்தை மக்கள் மயப்படுத்தி மக்கள் மனங்களில் மேலோங்கச் செய்தார்களோ அதேபோன்று இன்றுள்ள நவீன ஜாஹிலிய சிந்தனைகளையும், வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கேள்விக்குட்படுத்தி மாற்றீடாக இஸ்லாத்தை முன்வைக்கும் அரசியல் பணியை அனைத்து உலமாக்களும் செய்ய முற்படுவதுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இதில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகைய அரசியல் பணியை செய்வதன் மூலமாக இலங்கை மக்கள் மனங்களில் இஸ்லாம் ஒரு மாற்றீட்டு வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்தப்படமுடியும்.

அத்துடன் நாளைய இஸ்லாமிய உலக ஒழுங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தேசங்களை இணைத்து நபி வழியில் உருவாகும் போது சிறுபான்மையாக வாழும் எமது நலன்கள் நிச்சயம் காக்கப்படும்; எங்களது கண்ணியம் பேணப்பட்டும்; குர்ஆன் சுன்னாவின்படி சகல துறைகளிலும் நாம் வாழுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் எமக்கு இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்தி தரும்.

Mohideen Ahamed Lebbe via Facebook

No comments:

Post a Comment