Oct 28, 2013

முஹர்ரமும், நவயுக பிர்அவ்ன்களும்! பகுதி - 1

இந்த முஹர்ரம் மாதத்திலே அருள்பாளிக்கப்பட்ட ஆசுரா தினம் எம்மை விட்டு நகர்ந்து சென்றுள்ளது. முஹர்ரம் மாதம் என்பது அல்லாஹ்வினது புனித மாதமாகவும், முஸ்லிம்களினது மிக முக்கிய மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியில் முதலாவது மாதமாகவும், அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது.அல்லாஹ் அத்தவ்பா 36ம் வசனத்தில் கூறுகிறான் “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒரு வருடத்திற்குப்) பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவையாகும். (இவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செயல்படுவதற்குரிய) அதுதான் நேரான மார்கமாகும். எனவே அவற்றில் (நீங்கள் வரம்புமீறி) உங்களுக்கு நீங்களே நீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.”


இந்த குர்ஆனிய ஆயத்தில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள்” என்ற சொற்றொடருக்கு இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் விளக்கம் அளிக்கையில் “நீங்கள் வரம்பு மீறாதீர்கள் ” என்ற சொற்றொடர் அனைத்து பன்னிரெண்டு மாதங்களை சுட்டிக்காட்டிய பின், அவற்றிலிருந்து நான்கு மாதங்கள் விசேடமாக புனிதமானவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கூறப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாதங்களிலும் செய்யப்படுகின்ற தவறுகள் மிகவும் பாரிய தவறுகளாகவும், அவற்றில் செய்யப்படுகின்ற நன்மைகள் நிறைந்த பலனை தரக்கூடியவை எனவும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நான்கு மாதங்களும் எவை என்பது குறித்து புஹாரியின் 2958ம் ஹதீஸில் பதிவாகியுள்ளது.ரஸ_ல்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ பக்றா (றழி) அறிவிக்கிறார்கள்“வருடம் என்பது பன்னிரெண்டு மாதங்களையுடையது. அவற்றில் நான்கு புனிதமானவை. துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் எனும் தொடர்ச்சியாக வருகின்ற மாதங்களும், ஜூம்மதுல் ஆகிருக்கும் ஸஃபானுக்கும் இடையே வருகின்ற ரஜப் மாதமுமாகும்.”
இவற்றிலிருந்து அல்லாஹ்வும், ரஸ_ல் (ஸல்) அவர்களும் இந்த மாதங்களுக்கு விஷேட முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளாரகள் என்பது புலப்படுகிறது.

இந்த மாதத்தின் சிறப்புக் குறித்து ரஸ_ல் (ஸல்) அவர்கள் கூறும் போது “ரமழானுக்கு அடுத்தபடியாக, நோன்பு நோட்பதிலே சிறப்பான மாதம் அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரமாகும்” என்றார்கள். (முஸ்லிம்-1982)
மேலும் இமாம் அஹ்மத் ஒரு ஹதீஸினை பதிந்துள்ளார்கள் “இந்த நாளில் (முஹர்ரம்)தான் ஜூது மலையில் நு}ஹ்(அலை)அவர்களின் கப்பல் ஒதுங்கியது. ஆகவே நு}ஹ்(அலை) அவர்கள் இந்நாளில் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காக நோன்பு நோற்றார்கள்.

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிப்பதாக இமாம் புஹாரி அறிவிக்கின்றார்கள்
“துதர் முஹம்மத்(ஸல்)அவர்கள் மதீனாவுக்கு வந்த சமயத்தில், ஆசுராவினது தினத்தில் யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதை அவதானித்தார்கள். அவர்கள் “இது என்ன” என வினவினார்கள். அதற்கு அவர்கள் “இது புனித நாளாகும். இந்நாளிலேதான் அல்லாஹ் இஸ்ரவேலர்களின் சந்ததியினரை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்தான். ஆகவே மூஸா(அலை) அவர்கள் இந்நாளில் நோன்பு நோற்றார்கள் என்றார்கள்” அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் “மூஸாவினிடத்தில் உங்களைவிட எங்களுக்கு உரிமை அதிகமுள்ளது” எனக் கூறி முஹம்மத்(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். முஸ்லிம்களையும் அந்நாளில் நோன்பு நோட்கும்படி கூறினார்கள். (புஹாரி-1865)

மேலே சுட்டிக்காட்டப்பட்ட திருகுர்ஆன், மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் பிறை 9,10ம் தினங்களில் நோன்பு நோற்று மூஸா(அலை) அவர்களையும், பிர்அவ்னின் காலகட்டத்தையும் ஞாபகப்படுத்தி வருவது நாமறிந்ததே. அதே போன்று திருமறை, பிர்அவ்ன் எவ்வாறு தனது மக்களை தன்னை “ரப்” ஆக ஏற்றுக்கொள்ளும்படியும், தனக்கு அடிபணியும்படியும் நிர்ப்பந்தித்து வந்தான் என்பதையும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது. மேலும் அவனது மிகப்பெரிய அறியாமையின் வெளிப்பாடாக தானே வாழ்வையும், சாவையும் நிர்வகிப்பவன் என்ற கருத்தை அவன் எவ்வாறு வெளிப்படுத்தி வந்தான் என்பதும் எமக்கு வரலாறு புலம்படத் தெரிவிக்கிறது.

தனது கருத்தை உறுதிப்படுத்துவதற்காக இரண்டு அடிமைகளை ஒன்று கூட்டி, அதில் ஒருவனை கொல்லும்படி கட்டளையிட்டான். மற்றைய அடிமையை விடுவித்தான். இத்தகைய ஒரு செயலை செய்ததன் ஊடாக தானே ஒரு மனிதனின் உயிரை பறிப்பவனும், வழங்குபவனும் ஆவேன் என வாதிட்டான்.எனினும் அல்லாஹ்வின் துதர் மூஸா(அலை) அவர்கள் மிகவும் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு அவனது அறியாமைக்கு பதில் அளித்தார்கள். அல்லாஹ் தினமும் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்து மேற்கில் மறையச் செய்கிறான். நீ சொல்லுவது உண்மையானால் இந்த தினத்திற்கு மறுநாள் சூரியனை மேற்கிலே உதிக்கச் செய்து, கிழக்கிலே மறையச் செய்ய முடியுமா? என வினவினார்கள். இந்த வினா அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் அது அவனது அறியாமையை அவனுக்கு புலப்படுத்திய போதும், அவனிடமிருந்த அகம்பாவமும், பெருமையும் அவனை துய்மையான தௌஹீதை ஏற்க தடையாக இருந்து விட்டது.

இதுபோன்றே எப்பொழுதெல்லாம் சத்தியம், அசத்தியத்தை எதிர்கொள்கிறதோ அப்போதெல்லாம் அசத்தியம் சத்தியத்தியத்தின் முன்னால் மண்டியிடுகிறது. எனினும் அசத்தியவாதிகள் அவர்களது கர்வத்தின் காரணமாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

No comments:

Post a Comment