Oct 16, 2013

இஸ்லாத்தின் பார்வையில் மக்களாட்சி!


முதலாளித்துவக்கொள்கையின் ஆட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்.

மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும்.

மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

மக்களாட்சிமுறை இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும், அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும்.

அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. ஷாPஆவிடமே அனைத்து அதிகாரமும் இருப்பதால் அதன் வழி மட்டுமே செல்ல இயலும்.

சட்டமியற்றுபவன் அல்லாஹ் மட்டுமே. அதனால் முஸ்லிம் உம்மா தானாக சட்டமியற்ற இயலாது.

முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை.

அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும்.

ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும், ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்சியாளர் சத்தியப்பிரமாணம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே ஆட்சியாளர் என்பது அல்லாஹ்வின் சட்டமனைத்தையும் நடைமுறைபடுத்துபவரே!

ஏனெனில் சட்டமனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே அருளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல.

மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு கடுமையாக கண்டிக்கிறது!

"ஆகவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்கள் மத்தியில் ஆட்சி செய்வீராக மேலும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்ற வேண்டாம்." (அல்குர்ஆன் 5:48)

"அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே ஆட்சி செய்வீராக. மேலும் அல்லாஹ் உமக்கு அருளிய சிலவற்றில் அவர்கள் உம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால் நீர் எச்சரிக்கையுடன் இருப்பீராக" (அல்குர்ஆன் 5:49)

"எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்" (அல்குர்ஆன் 5:44)

எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சி செய்யத்தேவையான ஆட்சிமுறையாகிய கிலாபா ஆட்சிமுறைபற்றி அதீத கவனம் செலுத்தவேண்டியது இன்றைய முஸ்லிம் உம்மத்தின் மிகப்பாரிய பணியாகும்.

இதற்குத் தேவையான நுஸறாவை எமது முஸ்லிம் இராணுவத்திடம் கோரவேண்டும்.

மேற்கினது ஆட்சியமைப்பாகிய ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை பகுதியாக அமுல்படுத்த முற்படும் போக்கை கைவிடவேண்டும்.

தேசியவாதச் சிந்தனையை களைந்து உம்மத் எனும் சிந்தனையை வலுப்படுத்த வேண்டும்.

மீண்டும் நபி வழியில் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவை நிறுவ பாடுபடவேண்டும். அதற்காக உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வாஜிபாகும்

No comments:

Post a Comment