Apr 7, 2014

இஸ்லாமிய இயக்கங்கள் எங்கே செல்கின்றன !!?

அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) கூறியுள்ளார்கள் .

"நிச்சயமாக எனது சமூகத்தின் மீது நான் பயப்படுவதெல்லாம் வழி கெடுக்கும் தலைவர்களைப் பற்றியேயாகும்."
அபூதாவூத்4252

சம்பிரதாய பூர்வமான சில ஏற்பாடுகளோடு சூழலின் ஆதிக்க அதிகாரத்தை அங்கீகரித்த ஒரு வாழ்வின் மீது முஸ்லீம் உம்மத் இன்று பழக்கப்பட்டுள்ளது . அதாவது முஸ்லீம் உம்மாவின் தெளிவான இஸ்லாத்தின் அடிப்படையிலான அரசியல் பார்வை முற்றாக கைவிடப்பட்டு குப்ரோடு ஒன்றிய வாழ்வுக்கான அரசியல் களம் இஸ்லாமிய இயக்கங்களால் முன் மொழியப்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமாகியுள்ளது .

இப்போது நடைமுறை ரீதியாக குப்ரின் விருப்பு வெறுப்புகளை ,ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு தக்கன பிழைத்தல் வாழ்வை நோக்கி இஸ்லாத்தின் பெயரோடு முஸ்லீம் உம்மத்தை அழைப்பது மட்டும்தான் 'தவ்வா ' என்பதாக மூத்த 'தாயிகள் 'வெளிப்படையாக பேசி நிற்கின்றனர் .இந்த சரணடைவு பாதை தான் காலத்தின் தேவையாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது .

இங்கு 'ஹராத்தோடு' கலந்த விடயங்கள் 'ஹலால் 'என்ற பெயரில் மிகச் சுலபமாக ஜீரணிக்கப்படும்! சில பாரிய ஹராம்களின் பாரதூரங்கள் ஏதோ சிறு பாவம் போல சித்தரிக்கப்படுவதும் இன்று அன்றாட நிகழ்வு . மிக அண்மையில் ஒரு பொலிஸ்மா அதிபர் ஒரு பிரசித்தமான இயக்கத்தின் 'இஜ்திமாவிட்கு' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் . அவர் அங்கு பௌத்த சிந்தனையை சிறப்பாக 'பிரித்' ஓதி! பேசிவிட்டு விட்டு போயுள்ளார் ! கேட்டால் மத நல்லிணக்கம் என அதற்கு ஒரு நியாயம் சொல்கிறார்கள் !!!இதை 'சிர்க்கோடு ' நல்லிணக்கம் என அழகாக மொழி பெயர்க்கலாமே!!!

இன்னொரு பிரசித்தமான இயக்கம் ஜெனீவாவுக்கு எதிராக ,இலங்கை அரசுக்கு ஆதரவாக பகிரங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் !! இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்ந்த எத்தனையோ அநீதிகளுக்கு முன் பெயரளவு பெறுமானத்தோடு அடக்கி வாசித்த அரசியலை . ஜெனீவாவுக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது யாரை திருப்திப் படுத்தவாம் !? இதை சரியாக புரிந்து கொண்டால் 'பிர் அவ்னுக்கு' பிடில் வாசிக்கும் இவர்களது அரசியல் தரம் புரிந்து போகும் .

தவ்ஹீதை கப்ரு வணக்கத்தில் கண்டு பிடித்த இவர்களுக்கு ,தமது தூய அகீதாவுக்கு மண்ணள்ளிப் போடும் இத்தகு மடத்தனம் புரியாதது அதிசயமே .சிர்க்கை,பித் அத்தை நுணுக்கமாக கண்டுபிடிக்கும் இந்த இயக்கங்களுக்கு இஸ்லாமிய அரசியல் அகீதாவுக்கே ஆப்படிக்கும் 'ரித்தத்' வழிமுறையான குப்ரிய பொலிடிக்ஸ் உடன் உறவு கொள்வதில் தெளிவில்லாதது ஆச்சரியமே!

ஒரு முஸ்லிமினது அனைத்து செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது இஸ்லாமிய ஷரீஆவாகும். அவன் தான் விரும்பியபடி வாழமுடியாது. மனித சட்டங்களை ஏற்று வாழ முற்படவும் முடியவே முடியாது . இஸ்லாத்தோடு வாழ்வு ,அல்லது இஸ்லாத்துக்காக தன்னை மரணம் வரை அர்ப்பணித்து போராடுதல் . இது தவிர ஒரு இடைக்காலம் இல்லவே இல்லை .

அல்லாஹ்வுடைய ஏவல் விலக்கல்களை தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழக் கடமைப்பட்டுள்ளான். அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றி வாழமுடியாது. இது குறித்து அல்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது.

“நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்" (20: 123-124)

http://khandaqkalam.blogspot.ae/2014/03/blog-post_29.html#more

No comments:

Post a Comment