May 17, 2014

இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....

இஸ்லாமிய உம்மத்களின் (இந்திய முஸ்லிம்களின்) சக்தி,உணர்ச்சி ,உணர்வு ,உழைப்பு எல்லாம் பாராளுமன்ற ஜனநாயக குப்ர் ஆட்சியமைப்பு தேர்தலில் வீண் விரயமாய் போனது....
இஸ்லாமிய சமுதாயம் முன்னுக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு ஒவ்வரு இஸ்லாமிய இயக்கங்களும் ,கட்சிகளும், அமைப்புகளும் , தத்தமது சிந்தனையின் பால் ஆளுக்கொரு வழிமுறையை கொண்டு முழுவதுமாக தோல்வியை தழுவியது ...ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்ற கோசத்தை வைத்து சமாதானம் அடைய வேண்டாம் ...காரணம் முஸ்லிம்களின் பிரதிநிகளாக தங்களை காட்டிகொண்ட அத்தனை இயக்கங்களும் ஒரே அணியில் இருந்தும் பலனில்லை.
இது எதை காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும் ....
இஸ்லாமிய உம்மத் எதை நோக்கி பயணிக்க வேண்டுமோ அதை விட்டு விட்டு வேறொரு சிந்தனையின் பால் வழி தவறிப்போய் என்னசெய்வதேண்டு தெரியாமல் சிக்கி தவிக்கிறது ...
இஸ்லாமிய உம்மத் தற்போது சிந்திக்க வேண்டிய தருணமிது ....
1. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அதனது அகீதாவை வாழ்க்கை திட்டமாக எடுத்து செயல்பட நபி ஸல் சுன்னாவின் பிரகாரம் தனது சிந்தனையில் துல்லியமும் தெளிவும் வேண்டும்.
2. தங்களது சிந்தனையில் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற சரியான வழிமுறை அறிய வேண்டும்.
3. சிந்தனை எந்த ஒரு தனிநபரையும் சார்ந்து இருக்க கூடாது .
4. இஸ்லாமிய வாழ்க்கை திட்டத்தை அமுல்படுத்த நினைக்கும் ஒவ்வருவரிடமும் சரியான பிணைப்பு இருக்க வேண்டும்....
இப்படி சரியான திட்டமிடுதல் ஒரு அமைப்பிடம் இருக்குமெனில் இஸ்லாம் மறுமலர்ச்சி அடையும் அல்லாஹ்வின் உதவியோடு.....
மிக சமீபத்தில் ....

No comments:

Post a Comment