Jun 1, 2014

அல்லாஹ் அவனது தீனை புத்தாக்கம் செய்யும் காலம் அண்மித்துவிட்டது..?


சமூகங்களின் எழுச்சி,வீழ்ச்சி என்பன எதேச்சையான நிகழ்வு அல்ல.மாறாக அவை மிக நுணுக்கமான இறைநியதிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே,எந்த ஒரு சமுகம் எழுச்சிக்கான விதிகளை கவனத்தில் கொண்டு செயட்படுகிறதோ அந்த சமுகம் எழுச்சியின் உச்சத்தை எட்டிவிடும்.

அதே போன்று எந்தவொரு சமுகம் வீழ்ச்சிக்கான் விதிகளை பெற்றிடுமோ அப்போது அந்த சமுகத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும். இத்தகையா விதிகளில் எவ்வித பாரபட்ச்ச்சமும் கிடையாது. கிரேக்க,ரோம,பாரசீக நாகரீகங்கள் ஆடம்பரத்தில் மூழ்கியபோது அவை வீழ்ச்சியை சந்தித்தன.

ஏன் இஸ்லாமிய ஸ்பெயின் இறை வழிகாட்டலை விட்டு தடம்புரண்டபோது அதன் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.

இறை நிராகரிப்பின் உத்தியோகப்பூர்வ இலட்சணமாய் வலம்வந்த சோவியட் ஒன்றியம் அடைந்த வீழ்ச்சி நாம் நம் வாழ்வில் கண்ட ஒரு நாகரீக வீழ்ச்சியாகும். 

இதோ மற்றொரு நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறி தென்படத்துவங்கியுள்ளது.

இந்த வகையில் அமெரிக்காவின் பொருளாதார பின்னடைவின் முக்கிய 7 குறிகாட்டிகள் வருமாறு.

1. மொத்த உலக உற்பத்தியில் அமெரிக்காவின் பங்கில் விழ்ச்சி.
2. அரசு வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை.
3. உள்நாட்டு பொருளாதரத்தில் விழ்ச்சி
4. வேலையின்மையும் வறுமையும்
5. பெரும் கடன் சுமை
6. ஆடம்பர நுகர்வு
7. பிற நாடுகளில் தலையீடு மீதான செலவு.


இந்த காரணிகள் திரட்சி அடைகையில் அமெரிக்க விழ்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்.

எந்த பேரரசுக்கும் ஒரு முடிவுகாலம் உள்ளது.அந்த தவனைக்காலம் அமெரிக்காவை நோக்கி மிக வேகமாக நெருங்கிக்கொண்டுள்ளது.

அடுத்ததாக எழுச்சிபெறவுள்ளது இஸ்லாம்! அதுவே இன்றுள்ள உலக ஒழுங்கை மாற்றும் ஒரே ஒரு சக்தி! 
சோவியத் யூனியனின் தலைமையிலான கொமியூனிச வீழ்ச்சி முஸ்லிம்களது எழுச்சியால் உருவானது. அதேபோன்று இன்றுள்ள முதலாளித்துவத் தலைமையினது வீழ்ச்சி இன்றுள்ள முஸ்லிம் நாடுகளில் மீள்உருவாக்கப்படவுள்ள கிலாபா அரசினால் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனை தவிர்க்க முடியாது. அது நபி (ஸல்) அவர்களின் வஹி என்பதனை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிம் நாடுகளில் உள்ள சர்வாதிகாரிகள் தூகக்கப்படும் போது கிலாபா ராஷிதா மீள்உருவாகும் எனும் நபி மொழி எமக்குள்ள ஒரே ஆறுதலும் தெம்பும் என்பதனை நாம் உணர்வோம். அத்துடன் அல்லாஹ் அவனது தீனுல் இஸ்லாத்தை ஒவ்வொரு நூற்றாண்டிலும் புத்தாக்கம் செய்வான் எனும் நபிமொழியும் எமக்கு மேலும் பலம் சேர்பதாக அமைகிறது.

அந்தவகையில் முதலாளித்து தலைமையினது வீழ்ச்சியும் அவர்களது உலக ஒழுங்கு இஸ்லாத்தினால் மாற்றீடு செய்யப்படும் காலமும் வெகு தொலைவில் இல்லை! குப்பார்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் அவனது ஒளியை பூரணப்படுத்தியே தீருவான். அது அல்லாஹ்வின் வாக்குதியும் கூட. அல்லாஹ் அவனது தீனை புத்தாக்கம் செய்யும் காலம் அண்மித்துவிட்டது!

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.

(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.” (61:8-9)


அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் உலகில் மிகைப்பதற்கு எமது பங்களிப்பு பற்றி சிந்திக்கும் முக்கிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் நாம் உணர்வோம்!

No comments:

Post a Comment