Jul 5, 2014

மியன்மாரின் முஸ்லிம்கள் - “மண்டலாய் பற்றிய சில கண்ணீர்கள் வரிகள்”

by:Abu Sayyaf
ர்மாவின் முஸ்லிம்கள் மீதான படுகொலை பற்றி அறியாதவர்கள் இல்லை. இது நடந்து இரண்டு வருடங்களின் பின் மீண்டும் ரமழானில் அவர்கள் மீதான பௌத்த வெறியர்களின் அராஜகங்கள் ஆரம்பமாகியுள்ளன. ரோஹீங்கியா இன பங்களாதேசிய வந்தேறு குடிகளை மட்டுமே தாக்கினார்கள். மற்றைய இடங்களில் உள்ள பர்மிய முஸ்லிம்கள் வளமாகவே வாழ்கின்றனர் என்ற கருத்தியலின் பொய் முகம் இப்போது தெளிவாகவே வெளியாகியுள்ளது. மியன்மாரின் இரண்டாவது பெரிய நகர் மண்டலாயில் மீண்டும் இனவன்முறைகள் ஆரம்பமானவை ஒன்றை தெளிவாக சொல்கின்றன. சத்திய கலிமாவை சொன்ன முஸ்லிம்களை நாம் கொல்வோம் என முழங்கும் குப்பாரிய தளத்தில் இருந்து ஒலிக்கும் செய்தியே அது. தாத்தாரிய வெறித்தனம் பர்மிய சுவாசமாக வெளியாகிறது. 

ஒரு இலகுவான கோசம் மொத்த தேசத்தையுமே இனவாத கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. “முஸ்லிம் தீவிரவாதிகள் பொளத்த மியன்மாரை அச்சுறுத்துகிறார்கள். அதனால் அவர்களை கொன்றொழிப்பதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் அவர்கள் பயங்கரவாதிகள்.” இதனை பௌத்த துறவி விராதுவும் அவனது சகபாடிகளும் “969” என்ற பெனரின் கீழ் கனகச்சிதமாக பிரச்சாரப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். 

மியன்மாரிய இராணுவ ஜுண்டா அரசின் பொலிஸார் மண்டலாயின் முஸ்லிம் குடியிருப்புக்களை சுற்றி வளைத்து ஊரடங்கு உத்தரவை பிரகடனம் செய்த போது நூற்றுக்கணக்கான பௌத்த பயங்கரவாதிகள் கைகளில் வாள்கள், கூரிய கத்திகள், பொல்லுகள், இரும்புச் சட்டங்கள், மூங்கில் குழாய்கள் சகிதம் உட்புகுந்து சகட்டு மேனிக்கு முஸ்லிம்கள் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். தாராளமான கொள்ளையை பொலீஸ் நிம்மதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. 

நேற்றைய தினமும் மீண்டும் ஒரு சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் மீதான பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டுள்ளது. முன்னைய சுற்றி வளைப்பின் போது இரண்டு முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். 40 இற்கும் அதிகமானவர்கள் பாரிய காயங்களிற்கு உள்ளான நிலையில் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டார்கள்.  நிலைமைகளின் அகோரத்தை தாங்க முடியாத சாதாரண முஸ்லிம்கள் தங்கள் குடும்பம் சகிதம் மண்டலாயின் வீதிகளால் தலைதெறிக்க தறிகெட்டு ஒடிய காட்சி மிகவும் கவலை தருவதாக அமைந்துள்ளது. 

முஸ்லிம்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள், அவிழ்த்துவிடப்படும் அராஜகங்கள் மூலமாக கட்டாய வெளியேற்றம் ஒன்றை செயற்கையாக உண்டு பண்ணுவதே இந்த பௌத்த பயங்கரவாத அமைப்புக்களின் உயர் நோக்கம். வெளியேறும் முஸ்லிம்கள் பலவந்தமாக இந்த பயங்கரவாதிகளினால் ஏலவே தீர்மானிக்கப்பட்ட மனிதர்கள் வாழத்தகுதியற்ற இடங்களில் கட்டாய குடியிருப்புக்களில் அமர்த்தப்பட்டு அவர்களை சுற்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிற்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ரோஹீங்கிய முஸ்லிம்களிற்கு என்ன நேர்ந்து முடிந்ததோ அதுவே இப்போது மண்டலாய் முஸ்லிம்களிற்கும் நிகழ ஆரம்பித்தள்ளது. 

முன்னைய கலவரங்களில் இடம்பெயர்ந்த 140,000 முஸ்லிம்கள் இப்போது மியன்மார் அரசு சொல்லிக்கொள்ளும் “புணர்வாழ்வு மையங்கள்” எனும் மனித சிறைக்கூடங்களைில் வதை மிருகங்களாக வாழ்ந்து வருகின்றனர். மண்டலாய் முஸ்லிம்களையும் அதே நிலைக்கு தள்ள பௌத்த இனவாத கும்பல் வேகமாக செயற்படுகிறது. கலவரங்களை வேகமாக பரவ வைப்பதிலேயே அவர்களின் இலக்கின் வெற்றி தங்கியுள்ளது. அதற்கான அனைத்து அடித்தள வேலைகளையும் இந்த 969 அமைப்பினர் அரச இயந்திரத்தின் துணையுடன் செய்து வருகின்றனர். 

வெள்ளிக்கிழமை மண்டலாயின் வீதிகளில் மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று இடம்பெற்றது. அதில் பௌத்த கொடிகளை அசைத்தவாறு 300 பயங்கரவாதிகள், “முஸ்லிம்களை மண்டலாயை விட்டு வெளியேறுமாறும் இல்லையேல் கொடூரமாக கொலை செய்யப்படுவீர்கள்” என்றும் கூறியபடி நகரை வலம் வந்தனர். இதனை சட்டம் ஓழுங்கை அமுல்படுத்தும் மியன்மாரிய அரசின் காவல் துறை பூரணமாக அனுமதித்தது. 

பொளத்த சடங்கு ஒன்றை செய்வதாக கூறி மியன்மாரின் தேசிய கீதம் பாடியவாறு வந்த இனவாத கும்பல் ஒரு முஸ்லிம் பெண்மணியின் தேநீர் கடையின் முன் நின்று அந்த பெண் ஒரு பௌத்த இளைஞனை பாலியல் பலாத்காரம் செய்ததாக கோசித்தது. பின்னர் முஸ்லிம்களை கொல்லுங்கள் என்று முழங்கியவாறு கலவரங்களை ஆரம்பித்தது. கலவரங்காரர்கள் ஆரம்பத்தில் பௌத்த ஊர்வலக்காரர்கள் போன்று நடந்து சென்ற போதும் கூட அவர்களின் கரங்களில் பல ஆயுதங்கள் இருந்ததை பொலீஸ் பார்த்துக்கொண்டு வாழாவிருந்தது. 

இனவாதிகள் முஸ்லிம்கள் மீது கலவரங்களை ஆரம்பித்த போது சில இடங்களில் முஸ்லிம்கள் அவர்களை துவம்சம் செய்தனர். எங்கெல்லாம் பௌத்த இனவாதிகள் பின்னடைவுகளை சந்தித்தார்களோ அங்கெல்லாம் உடனடியாக விரைந்த பொலீஸார் முட்கம்பி வேலிகளை நிறுவி முஸ்லிம்களின் தாக்குதலை மட்டுப்படுத்தி மீண்டும் பௌத்த கலவரக்காரர்களிற்கு இன்னொரு கோரத்தாக்குதலிற்கான அவகாசம் அளித்தனர். 

அரக்கனில் ரோஹீங்கிய்யா முஸ்லிம் ஓடினார்கள். எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் மண்டலாயில் முஸ்லிம்கள் தம்மை தற்காக்க விளைந்தனர். அவர்கள் ரோஹீங்கிய முஸ்லிம்களிற்கு என்ன நடந்தது என்ற பாடத்தை நன்றாகவே கற்றதன் எதிர் விளைவு அது. மறுதினம் காலை மியன்மாரிய பொலீஸார் முஸ்லிம்களின் வீடுகளில் அதிகாலையில் சோதனை நடாத்தினர். கிறீஸ் கத்திகள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து முஸ்லிம்களை கலகக்காரர்கள் என்று கைது செய்தனர். தாங்கள் 19 கலகக்காரர்களை கைது செய்ததாக பொலீஸ் பேச்சாளர் அறிவித்தார். முஸ்லிம்கள் வீடுகளில் வளர்த்த வளர்ப்பு மிருகங்களை சட்டவிரோத அறுப்பிற்காக (ஸ்லோட்டரிங்) வைத்திருந்ததாக கூறி பொலீஸ் அவர்களையும் கைது செய்து தன் சட்டத்தின் நம்பகத்தன்மையை நிலைநாட்டியதாக பறைசாற்றியது. 

No comments:

Post a Comment