Jul 16, 2014

இவரும் எச்சரிக்கிறார்!!!!


by-ஆர் எஸ்-துர்கிய பிரதமர் அர்துகான் இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்தவிடின் துர்க்கியூடனான உறவுகள் மிக கடுமையாக இருக்கும் எனவும்
விளைவுகள் பாரதூரமாக அமையும் எனவும் கூரினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கயில் சர்வதேச சமூகம் மற்றும்
ஐ.நா சபை உடனடியாக நடைபெறும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும்
என்றும் கூரினார்.

யுத்த நிறுத்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஒவ்வொருமுறையும் மீறுவதாகவும், சமாதானம் குறித்து அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினர். தொடர்ந்தேர்ச்சியான அத்துமீறல்களும் நியாயமற்ற
நடவடிக்கைகளும். துர்கியுடனான உறவில் விரிசலையே ஏட்படுத்தும்
என்றும் அவர் எச்சரித்தார்.

துர்க்கி பலஸ்தீனுடன் மிக நெருங்கிய நல்லுறவு வைத்திருக்கும் நாடாகும்.
கடந்த வெள்ளியன்று துர்கியின் பல பிரதேசங்களிலும் இஸ்ரேலின்
படுகொலைக்கு எதிரான பாரிய ஆர்பாட்டங்கள் நிகழ்தன
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் நேற்று கூறுகையில் இஸ்ரேல்
உடனடியாக காஸா மீதான ஏவுகணை தாக்குதலை நிறுத்த
வேண்டும் என்றும், தரை மார்க்கமான எந்ததாக்குதலையும் நடத்த கூடாது என்றும் எச்சரித்துள்ளார். காஸா பகுதியில் அதிகரித்து வரும் மனித
படுகொலைகள் குறித்து நேற்று வெளியிட்ட எழுத்து மூல அறிக்கையின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் அவரது அறிக்கையில் இஸ்ரேல் 2012 யுத்த நிறுத்த
நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும், காஸாவுக்கான மனிதாபிமான
உதவிகளை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், பாலஸ்தீனுடன் ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தித்க்கு வரவேண்டும் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment