Jul 19, 2014

வீரத்தின் வார்த்தைகள் புரியாதா !? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு )


"என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை ; என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் 'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ;
கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட முடியும் ."
இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் !
ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் .
அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்' வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில் காட்டேரிநாசர் கூட்டத்தை முஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்) . அதனால் இவருக்கு சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் .
அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு.
அதில் 'சூரா அல் புரூஜ் ' குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப் போன்றவர்களுக்கு
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹி' யாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் ? கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் ' பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார்.
இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் !
பரவாயில்லை நாளை 'குத்சை'முஸ்லீம்களின் இரத்தச் சகதியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் எனும் கள்ளப்பிறப்பு உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ?என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment