Jul 19, 2014

முதலாளித்துவப் பொய்களில் முஸ்லீம் உம்மா !!!


அவல அரங்கேற்றத்திற்கு நியாயக் கவிபாடும் 
உன் ஊடகத் தாலாட்டில் உலகம் பூரிக்க 
நான் பொய்ப்பிக்கப் பட்டு விட்டேன் !

ஓலங்களை இராகமாயும் குருதியை பாணமாயும்
அழகாய் நீ மாற்றிப் பருக்கிய போது உன் 
ஏகாதிபத்திய மாயத் தொட்டிலில் 
பூகோளமே உறங்கி விட்டதே !

உன் கசாப்புக் கடைக்கு எம்மை அடிமாடுகளாக்கி விட்டு
முதலைக் கண்ணீரோடு நீ பூசும் சமாதானச் சாயம்
உன் வழமையான வியாபாரம் தான் !

சதிகளின் மீது நீ சரித்திரம் எழுதுவது எமக்கு
முதற் தடவை அல்லதான் ! அதை
விதியாக்கிக் கொள்ளும் முட்டாள் தனத்தில்
நாமிருக்கும் வரை உன் பாடு கொண்டாட்டம் தான் !

No comments:

Post a Comment