Jul 21, 2014

முக்கியச்செய்திகள் :



காஸா மீதான சியோனிஸ ஆக்கிரமிப்புத் தாக்குதல் ஆரம்பித்து இதுவரை...!

425 பேர் ஷஹீதாஹியுள்ளனர்.
அதில் 112 குழந்தைகள், 40 பெண்கள், 25 முதியவர்கள் அடங்குவர்.

4000 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

அதே வேளை குறைந்தது 15 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ...

போராளிகளின் கணிப்பின் படி 30 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

75 பேர்வரை காயப்பட்டுள்ளனர்.

ஷுஜாஇய்யாக் குடியிருப்பு மீது இஸ்ரேலிய படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலில் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அது சர்வதேச கவனத்தை தற்போது காஸா மீது திருப்பியுள்ள நிலையில் அதற்கெதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபடி உள்ளன.

தொலைக்காட்சியில் தோன்றி இஸ்ரேல் சார்பாக பேசுபவர்களின் நிலையை கவனிக்கும் போது ஆற்றாமையும் தோல்வியை மறைக்கும் முனைப்பும் தெளிவாக தெரிகிறது.

இனிமேல் இந்த இழப்புகள் இறுதியாக இருக்கட்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் இராணுவ , அரசியல் மற்றும் ஊடக ரீதியாக எடுக்கும் நகர்வுகள் காஸாவின் வானில் இஸ்ரேலின் ஒளிக் குண்டுகளுக்கும் மேலால் நம்பிக்கை நட்சத்திரமாக கண்சிமிட்டுகின்றன

Source&Press -Fairoos
Abusheik Muhammed

No comments:

Post a Comment