Jun 17, 2016

இஸ்ரேல்_உருவாக்கப்பட்ட_வரலாறு‬ தொடர்‬:-02

பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் யூதர்கள் எவரும் நுழைய கூடாது என ரோமானியர்கள் தடைவிதித்திருந்தனர். இவ்வாறாக பலஸ்தீனில் ஒரு யூதர்கள் கூட இல்லை என்ற நிலை காணப்பட்டது.
மேற்கூறப்பட்ட வரலாற்றிலிருந்து பின்வரும் முடிவுகளை நாம் எடுக்கலாம்
1. பலஸ்தீன் எங்களது பூர்வீக நிலம் என யூதர்கள் கூறுவது முற்றிலும் பொய்
2. இனப்படுகொலை செய்து அங்கு வசித்துவந்த பூர்வீக குடிகளை அழித்துவிட்டே அவர்கள் அங்கு குடியேறினர்.
3. வட பலஸ்தீன் பகுதியில் அதிகபட்சம் ஐந்து நூற்றாண்டுகளே வாழ்ந்தனர்.
4. தென்பலஸ்தீனில் அதிகமாக எட்டு நூற்றாண்டுகளே யூதர்கள் வாழ்ந்தார்கள்
5. அரபுக்கள் வட பலஸ்தீன் பகுதியில் 25 நூற்றாண்டுகளும் தென் பலஸ்தீன் பகுதியில் 20 நூற்றாண்டுகளும் வசித்து வந்தனர்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க இன்று யூதர்கள் என்ன கூறுகிறார்கள்??
பலஸ்தீன் எங்களது மூதாதையர் வாயிலாக எங்களுக்கு கிடைத்த பூமியாகும். இறைவன் எங்களுக்கு வாக்களித்த பூமியாகும். எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியை எப்படியாவது வலுக்கட்டாயமாக அடைந்தே தீருவோம். அதாவது அங்கே யார் வாழ்ந்தாலும் அவர்களை இனத்தோடு அழித்துவிட்டு அப்பிரதேசத்தை அடைந்தே தீருவோம். அதற்கான உரிமை எங்களிடம் இருக்கின்றது. என கூறுகின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் ஒரு பிரார்த்தனையை செய்து வருகின்றார்கள். ""பைத்துல் முகத்திஸ் எங்களது கைகளில் வந்து சேர வேண்டும் அங்கே கைஹலுஸ் ஸுலைமானை நாங்கள் நிறுவ வேண்டும் "" என்பதே அந்த பிரார்த்தனை.
அதுமட்டுமல்ல யூதர்களின் வீடுகளில் நடைபெருகின்ற சடங்குகளில் தவறாமல் ஒரு நாடகம் சித்தரிக்கப்பட்டு நடிக்கப்படுகிறது. எகிப்திலிருந்து நாம் எவ்வாறு வெளியாகினோம். பலஸ்தீன் பகுதியில் எவ்வாறு குடியேறினோம். பபிலோனியர்கள் எவ்வாறு துரத்தியடித்தனர். பலஸ்தீன் பிரதேசத்தில் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டோம். என்பன எல்லாம் அந்நாடகத்தில் சித்தரிக்கப்படுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு யூத குழந்தையின் மனதிலும் யூத தேசம் உன்னுடையது அதை அடைவதே உன் வாழ்வின் இலட்சியம் அங்கு கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவதே உன் இலக்கு எனும் நச்சுக்கருத்து விதைக்கப்படுகின்றது.
கி.பி.12ம் நூற்றாண்டு புகழ் பெற்ற யூத தத்துவ ஞானியான "மூசா இப்னு மைமூனிடஸ்" தன்னுடைய யூத நூலான " The code of jews law" எனும் நூலில் தெளிவாக எழுதியுள்ளதாவது:- " பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் கைஹலுஸ் ஸுலைமானியை நிறுவுவது யூதனாக பிறந்த ஒவ்வொரு நபரினதும் வாழ்க்கை குறிக்கோளாகும்."
இதற்காகவே Free Mason Movement அமைப்பினை உருவாக்கி உலகலாவிய ரீதியில் கைஹலுஸ் ஸுலைமானை நிறுவுவது தொடர்பான கருத்தலைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று அடிக்கடி பைத்துல் முகத்திஸ் வளாகத்தில் தீப்பற்றி எரிவதும் அங்காங்கே தீப்பற்றி எரிவதும் அவ்வளாகத்தை இலக்காக கொண்டு பல தாக்குதல்கள் நடைபெறுவதும் இவர்களின் திட்டத்தின் செயற்பாடுகளே.
ஆக யூதர்கள் அவர்களது முயற்சியில் வெற்றி பெறவே முயற்சி செய்வார்கள்.
இன்சா அல்லாஹ்.....
தொடரும் .......

No comments:

Post a Comment