Jun 15, 2016

வங்கம் தந்த பாடம்......!!

 
இஸ்லாத்தின் முதன்மை விரோதி “ஏகாதிபத்தியமே”. அது இயல்பான விரோதியும் கூட. ஏகாதிபத்தியத்தின் அடிப்படை பண்புகள் மூன்று.


1. வட்டியை மையமாகக் கொண்டியங்குதல்.

2. நாடுகளை கைப்பற்றல்.

3. அங்குள்ள வளங்களை சுரண்டி தனது தேசத்திற்கு கொண்டு செல்லுதல்.


இந்த மூன்றையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது. அதனால் தான் ஏகாதிபத்தியம் இஸ்லாத்தின் விரோதியாகி போகிறது. . இஸ்லாத்தை வலுவிழக்க செய்ய வேண்டும் என்றால் அது கூறும் சட்டங்களை இல்லாதொழித்து மனிதனால் இயற்றப்பட்ட மேன் மேட் லோவினை அமுல்படுத்த வேண்டும் என்ற பொறி முறையில் அது உறுதியாக இருக்கிறது. ஏகாதிபத்தியங்களின் தெற்காசிய சுரண்டல் வர்த்தகத்தின் இன்றைய இலக்கு பங்களாதேஷ்.


நேற்றைய நீக்ரொய்ட் அடிமை சந்தையை பங்களாதேஷ் முஸ்லிம்களின் வறுமை மீண்டும் உருவாக்கியுள்ளது காலணித்துவவாதிகளிற்கு. உற்பத்தி தொழிற்சாலைகளிற்கான மலிவான தொழிலாளர் பட்டாளம், மற்றும் உற்பத்தியினால் ஏற்படும் கழிவுகள், சூழல் மாசடைவுகளை தங்கள் தேசத்தில் தவிர்த்து கொள்ளல் என்று அவை வங்கம் முழுதும் விரிந்து வருகின்றன. ஒரு முஸ்லிம் மற்றொருவனிற்கு அடிமைத்தனமாக செயற்பவதை இஸ்லாம் தடைசெய்கிறது.


இதனை இல்லாமல் செய்ய, ஹுக்குமே இலாஹியத்தை பங்களாதேஷில் உருவாக்க முயலும் அதன் இஸ்லாமிய தலைவர்களை இலக்கு வைத்துள்ளது ஏகாதிபத்தியம். அதன் 06-வது பலிக்கடாவாக நேற்று ஒருவரை மீண்டும் இழந்து விட்டது அந்த தேசம்.


ஹஸீனா அரசின் பின்னால் இஸ்லாம் வங்கத்தில் இருந்து துடைத்தெறியப்படல் வேண்டும் என்ற தெளிவான கருத்தில் இருக்கிறது ஏகாதிபத்திய தேசங்கள். அதற்கு முதற்படியாக இஸ்லாமிய ஆட்சியல், அதன் அதிகாரத்திற்கான கோட்பாட்டியல், இஸ்லாமிய அஷ்-ஷரிய்யா சட்டங்களை அமுல் செய்ய முயலும் சிந்தனைகள் என்பவற்றை அடியோடொழிக்க முயல்கிறது இந்த ஏகாதிபத்தியங்கள்.


எகிப்து பாணியில் ஆட்சியாளர்களிற்கு இஸ்லாம் மீதான வெறுப்பை உருவாக்கி மதச்சார்பற்ற தன்மை மீதான பற்றை உருவாக்கும் நிகழ்ச்சி நிரல் ஊடாக இஸ்லாத்தின் அதிகாரத்தை நோக்கிய பாதைக்கு வியர்வை சிந்தும் மனிதர்களை இரத்தம் சிந்த வைக்கின்றன இந்த ஏகாதிபத்தியங்கள்.

Sources From Khaibar Thalam

 

No comments:

Post a Comment