Showing posts with label அல்-அக்ஸா. Show all posts
Showing posts with label அல்-அக்ஸா. Show all posts

Feb 3, 2018

அப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்

இழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து


பாலஸ்தீன மத்தியக் குழுவின் கூட்டம் 15/1/2018, திங்களன்று முடிவுற்றது, அதன் இறுதி தீர்மானமானது சர்வதேச சட்டம் மற்றும் அமைதிக்கான அரபு நாடுகளின் முயற்சியின் அடிப்படையில் 1967ல் வரையப்பட்ட எல்லைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் பாலஸ்தீன அரசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அதன் தலைநகரம் கிழக்கு ஜெரூசலேமாக இருக்க வேண்டும் எனவும் சர்வதேச தலைமையில் அமைதிக்காக வேண்டி உண்மையாக நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள வேண்டும் என கோரியது. அது ஓஸ்லோ உடன்படிக்கையின் காலம் முடிந்துவிட்டது எனக் கருதி பி.எல்.ஓ மூலமாக இந்த யூத அரசாங்கத்தின் (சட்டவிரோத) அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ரத்து செய்யவும் மற்றும் இந்த ஆக்கிரமப்பாளருடனான பொருளாதார சார்பு நிலையை துண்டித்து விடவும் பரிந்துரை செய்தது.


பாலஸ்தீனத்திலுள்ள ஹிஸ்புத்தஹ்ரீரில் உள்ள நாங்கள் பாலஸ்தீன அரசின் தலைவர் என்ன பேசினாரோ அதனையும் பாலஸ்தீனத்தையும், அதன் மக்களையும் அதன் கண்ணியத்தையும் இழக்க வைத்த இந்த துரோகமிழைக்கும் அணுகுமுறையை பாலஸ்தீன அரசும் அதன் நிறுவனங்களும் தொடர்ந்து கடைபிடிக்கும் போக்கை வலியுறுத்தும் இந்த மசோதாவையும் கண்டிக்கிறோம். இந்த தீர்மானமானது பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தை உம்மத் மீதும் பாலஸ்தீன மக்களின் மீதும் பகைமையை கொண்டுள்ள பெரும் சக்திகளிடம் பிணையாக ஆக்கியுள்ளது. இந்த யூத அரசை (சட்டவிரோத) அங்கு நிர்மாணித்து, நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி மற்றும் அநீதமான சர்வதேச தீர்மானங்கள் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கு ஆதரவளித்து வந்தது இந்த சக்திகள் தான். அதேசமயம் பாலஸ்தீன அரசாங்கம் பாலஸ்தீனத்தின் விடுதலை குறித்தான கோரிக்கையை முழுமையாக கைவிட்டுவிட்டு உம்மத்தையும் அதன் ராணுவங்களையும் அவ்வாறே செய்யுமாறு கோருகிறது.


இவ்விஷயத்தில் கீழ்வருனவற்றை நாம் வலியுறுத்துகிறோம்:


ஜெரூசலேத்தின் விஷயத்தில் அமெரிக்கா தனது தீர்மானத்தை நிறைவேற்றி ஓங்கி அறைந்து மற்றும் இந்த நூற்றாண்டின் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்கு பின்னர் பாலஸ்தீன அரசாங்கத்தின் தீர்மானங்கள் அவர்கள் அமெரிக்க எதிர்ப்பு வாக்கு வன்மையிலிருந்து விலகிச் சென்றுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தீர்மானங்கள் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு அடிபணிந்துள்ளதாக இருக்கின்றது, அது இந்த அரசு ஓஸ்லோவை புதைப்பதிலிருந்தும் யூத அரசாங்கத்தை (சட்டவிரோத) அங்கீகரிக்க மறுத்த நிலையிலிருந்தும் பின்வாங்கச் செய்தது, மற்றும் ஓஸ்லோ நிருவப்பட்ட இடைநிலை கால அவகாசம் முடிவுற்றதை மட்டுமே அறிவித்தது மற்றும் இந்நிறுவனத்திடம் அதன் அங்கீகாரத்தை நிறுத்திவைக்குமாறு பரிந்துரைத்தது. இந்த தீர்மானங்களானது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாலஸ்தீன மக்கள் மீது விரோதத்தை கொண்டிருக்கும் நாடுகள் ஏற்படுத்திய அமைதிக்கான தீர்மானங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் மாநாடுகளை பின்பற்றியதாக இருந்தது. இந்த அமைதி நடவடிக்கை மற்றும் துரோகமிழைக்கும் ஒப்பந்தங்களானது பாலஸ்தீன மக்களுக்கு பேரழிவையும் குற்றங்களையும் இழைப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது அது மேற்கு ஜெரூசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை முழுவதுமாக யூதர்களுக்கு உரியதாக ஆக்கியுள்ளது அதேவேளையில் மீதமுள்ளவை (நிலப்பரப்பு) குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்றும் அது பாலஸ்தீன அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் யூத அரசுடைய (சட்டவிரோத) பாதுகாவலராக ஆக்கியுள்ளது; எவ்விதமான பாதுகாவலர் என்றால் இந்த ஆக்கிரமிப்பின் பாதுகாப்பு, நிதி, பொருளாதார மற்றும் அரசியல் பலுவை சுமந்ததாகவும் பாலஸ்தீன அரசாங்கத்தின் தலைவர்கள் இதை அங்கீகரித்ததன் மூலம் இந்த ஆக்கிரமிப்பை வரலாற்றின் மலிவான ஆக்கிரமிப்பாக ஆக்கியுள்ளது, தினசரி உயர்ந்து வரும் வரிகளுக்கு பாலஸ்தீன மக்கள் தங்களுடைய உதிரங்களை கொண்டும் தங்களுடைய குழந்தைகளின் வாழ்வாதாரத்தை விலையாகவும் கொடுத்து வருகின்றனர்….


இருநாடு உருவாக்கம் எனும் தீர்வை கடைபிடிப்பது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கும் அவர்களுடைய உதிரங்களுக்கும் தியாகங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும். இத்தீர்வானது ஆக்கிரமிப்பாளருக்கு ஜெரூசலேத்தின் பெரும்பகுதி உட்பட 80% நிலப்பரப்பை வழங்கி பலப்படுத்துவதாகவும், பாலஸ்தீன அரசாங்கத்துக்கு “கிழக்கு ஜெரூசலேம்” என்று அவர்களால் அழைக்கப்படுவது உட்பட சிரிய அளவிலான 20% நிலப்பரப்பை வழங்குவதாக இருக்கின்றது”; சந்தேகமில்லாமல் அவர்கள் தீர்மானித்திருப்பது தீங்கை விளைவிக்கக்கூடியதை தான்! பாலஸ்தீன அரசாங்கமும், மத்தியக் குழுவும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும் அதன் பிரிவுகளும் விடுதலை அடைவது (பாலஸ்தீனத்தின்) எனும் கருத்தை முழுமையாக கைவிட்டுள்ளன மற்றும் அதன் அகராதி மற்றும் சொல்லகராதியிலிருந்து நீக்கியுள்ளன. அது விடுதலை அடைவதற்கான ஒரே வழியை அதாவது உம்மத்துடைய இராணுவங்களை அணிதிரட்டி அதன் அனைத்து சக்தி மற்றும் திறன்களை இந்த யூத அரசை வேரோடு அழிப்பதற்காக வேண்டி தீர்க்கமான போர் ஒன்றை புரிவதை நோக்கி இயக்க வேண்டும் என்பதை அகற்றியுள்ளது. மாறாக அது குற்றம் புரிந்த நாடுகளின் நரிகள் அதற்கு சர்வதேச அளவிலான பாதுகாப்பைத் தரவேண்டும் என கோரிக்கையை கொண்டுள்ளது; ஆக, பாலஸ்தீனம் மீதான யூத ஆக்கிரமிப்புக்கு கூடுதலாக சர்வதேச ஆக்கிரமிப்பு ஒன்றையும் சேர்த்துள்ளது. சந்தேகமே இல்லாமல் அவர்கள் தீங்கை தான் தீர்மானித்திருக்கிறார்கள்! இஸ்லாமிய உமமத்தின் உதிரமானது அதன் நரம்புகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது என்பதை பாலஸ்தீன அரசாங்கம், அமெரக்கா, ஐரோப்பா மற்றும் யூத அரசாங்கம் (சட்டவிரோத) ஆகியோருக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.


நீங்கள் சார்ந்திருக்கும் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய கீழ்படுதலையும் மற்றும் உங்கள் மீதான அவர்களது விசுவாசத்தையும் துடைத்தெரியும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உம்மத் அல்லாஹ்வின் ஆணையைக் கொண்டு வெகுவிரைவில் இவர்களை தூக்கியெறிந்து நபித்துவ வழிமுறையின் அடிப்படையிலான கிலாஃபா ராஷிதாவை நிறுவும்; அது இவர்களை வேரோடு தூக்கி எறிந்து ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் அனைத்து முஸ்லிம் தேசம் என முழுவதையும் விடுவித்து மற்றும் அமெரிக்காவையும் மேற்கத்திய நாடுகளையும் அவர்களுடைய உறைவிடத்திற்கு துரத்திவிடும் மற்றும் துரோகமிழைத்த அனைவருக்கும் தண்டனை வழங்கும்.


அந்நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போருக்கு அந்நாள் வெகு அருகில் உள்ளது.


“நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் : 65:3)

Sep 16, 2015

அல்-அக்ஸா மசூதியில் நுழைய தொடரும் மோதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள்

கடந்த மூன்று நாட்கயாக பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்த வருகிறது.

ஹராம் ஷெரீப் (நோபல் சரணாலயம்) பகுதியில் இஸ்ரேலிய புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தது முஸ்லிம்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை இதனால் மோதல் தொடங்கியது.



Israeli police officers detain a Palestinian protester in Jerusalem's Old City. [Ammar Awad/Reuters]


Palestinians run away during clashes with Israeli riot police after they are prevented from entering the Al-Aqsa Mosque compound. [Atef Safadi/EPA]


A Palestinian woman in Gaza City holds a copy of the Quran during a rally to protest against Israeli police raids on Jerusalem's Al-Aqsa Mosque. [Suhaib Salem/Reuters]


Palestinian youths push a rubbish bin during clashes between Palestinian stone-throwers and Israeli forces in the East Jerusalem neighbourhood of Issawiya. [Ammar Awad/Reuters]


Palestinians sweep up rock debris in Al-Aqsa Mosque after clashes with Israeli police. The compound is known to Muslims as the Noble Sanctuary and to Jews as the Temple Mount in Jerusalem's Old City. [Ammar Awad/Reuters]


Israeli police scuffle with Palestinians who were prevented from entering the Al-Aqsa Mosque compound in the Old City of Jerusalem, during the Jewish New Year.[Atef Safadi/EPA]


Israeli police raided the plaza outside Jerusalem's Al-Aqsa Mosque on Sunday in what they said was a bid to head off Palestinian attempts to disrupt visits by Jews and foreign tourists on the eve of the Jewish New Year. [Mussa Qawasma/Reuters]


Palestinian women confront Israeli troops stationed outside the mosque [Baz Ratner/Reuters]



The US state department on Monday voiced concern about violence at the compound surrounding the mosque.[Baz Ratn/Reuters]

http://www.aljazeera.com/