Showing posts with label Islamic Khilafah. Show all posts
Showing posts with label Islamic Khilafah. Show all posts

Jul 5, 2014

இஸ்லாமிய ஆட்சி என்பது....?



1.வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

2.இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது.

3.அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும்.

4.அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும்.

5.மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது கிடையாது.

6. நான்கு வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை. ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

7. அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

8. அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் உரிய முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும்.

9. இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது. நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

10. நாடுகளை அடித்துப்பிடித்து அதன் பாதுகாப்பு உள்ளேயும் வெளியேயும் உறுதிசெய்யப்டாத நிலையில் முழு உம்மத்திற்கும் கொடுக்கும் தலைமைத்துவம் இல்லை. அதன் அதிகாரமும் பாதுகாப்பும் முழுமையா அதன் ஆட்சிப்பரப்பு எல்லைக்குள் இருப்பதுடன் கலீபா வெளிப்படையாக இருந்து மக்களது விவகாரங்களை முழுமையாக கவனிப்பார். சரீஆவை முழுமையாக அதன் ஆட்சிக்குட்டபட்ட பகுதியினுள் அமுல்படுத்தி தஃவா ஜிஹாத் மூலம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தையும் பலத்தையும் பெற்றிருப்பார்.

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு அதுவாகும். இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும். இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும். (அவ்ஸ் ஹஸ்றஜ் எனும் முஸ்லிம் இராணுவம் நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்த பைஆ மூலம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நிறுவிய இஸ்லாமிய அரசு போன்று நிறுவப்பட வேண்டும். மதீன மக்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு பையஅத் செய்து அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நிலையில் முழுமையான அதிகாரத்தை அதன் எல்லையில் கொண்டிருந்தார்களோ அவ்வாறு அமைய வேண்டும்.)

அவ்வாறு நிறுவப்பட்டால்
1.அவ்வரசு இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும்.
2.முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும்.
3.பொது எதிரியை எதிர்கொள்ளும்.
4.தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும்.
5.வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

Jun 3, 2014

பொதுமக்கள் மீது போலீஸ்கார்கள் நடத்தப்படும் அடக்குமுறை

29.12.12, Bangladesh Hasina government ordered the police to fire rubber bullets from which one person was injured in his chest and it arrested dozens of Muslims, to disperse the several hundred participants who attended a rally today organized by Hizb-ut Tahrir outside the National Press Club, Dhaka. The party organized the rally to express the people's rejection of Hasina-Khaleda, the agents of US-India and the democratic system which manufactures such agents. The participants chanted the slogans, "Hasina-Khaleda is Rejected," "Agents are Rejected," "Democracy is Rejected," and "The People Demand the Khilafah." Hearing these slogans from the people of the country the foundation of the ruling kufr regime was shaken and it resorted to brutal force as a means for its protection. This is exactly like its masters US-Britain-India who unleash violence against innocent, unarmed civilians for achieving their evil aims across the world. The kufr regime has come to realize that despite their oppression, the call for Khilafah has reached people's hearts and minds to an irreversible point and it
is acting desperately to silence the people. We, in Hizb-ut Tahrir, make it clear that the regime will not succeed, rather the people's resolve will be strengthened and they will increase their efforts to bring this regime's downfall with the Help of Allah (SWT). And the Khilafah state will be re-established soon and it will punish the guardians of this regime with an exemplary punishment.

"Those (i.e. believers) unto whom the people (hypocrites) said, "Verily the people (pagans) have gathered against you (a great army), therefore, fear them." But it (only) increased them in Faith, and they said: "Allah (Alone) is Sufficient for us, and He is the Best Disposer of affairs (for us)." [Surah Ali-Imran: 173]



பங்களாதேஷ்வில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்

பொதுமக்கள் மீது போலீஸ்கார்கள் நடத்தப்படும் அடக்குமுறை


May 28, 2014

நாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...


இந்த முஸ்லீம் உம்மத்தின் வாழ்வின் மீது அநீதப் பூட்டுப் போட்டு அதன் சொந்த முற்றங்களில் அவலங்களால் நிரப்பி ஆனந்தப் படும் அல்லாஹ்வின் எதிரிகளே !?

அயோக்கியத்தை நியாயமாக்கி நீ அடிவருடித்தனத்தை சுயநல இலாப
பிச்சை காட்டி எமக்குள் விதைத்தாய் ! அந்த கோடரிக் காம்புகள்
தேசிய விலங்கிட்டு சகோதரத்துவத்தை ஒருபக்கம் கேள்விக்குறி ஆக்கின !

'ஹரத்தின்' எல்லைக்குள் 'ஹராம்' வந்தாலும் பரவாயில்லை ! என பரம்பரை முடிகாக்க வெள்ளைத்தோல் கொள்ளையருக்கு இஸ்லாத்தின் தூய
நிலங்களில் சல்லாபிக்க மடம் கட்டிப்போட்டு அவன் சாவகாசமாய் பவனி வர கழுதையாய் உழைக்கும் கண்றாவி மன்னர்கள் மறுபக்கம் ! சதிகளும், சாக்கடையில் புரள்வதில் சந்தோசமும் இருண்ட வாழ்வின் மீது சந்தர்ப்ப
நியாயங்களால் வார்த்தை ஒளி கொடுக்கும் 'செக்கியூலர் இஸ்லாமிச' செம்மல்கள் வேறு மல்லாக்காய் பறக்கும் வெள்ளைக் காக்கை காட்டுவோம் !! என்ற குருட்டு நம்பிக்கையில் இன்னொரு புறம் !!

ஆனால் அந்த முஹம்மதின் (ஸல் ) படை மட்டும் ஓயாத அலைகளாய் சத்திய
விடியல்களை படைக்க குருதியின் விலை கொடுத்து சுன்னாவின்
வழி உறுதியோடு உழைக்கிறார்கள் ! சஹாதத்தின் வேட்கையில்மரண பயம் வெருண்டோட அல்லாஹ்வை இன் முகத்தோடு சந்திக்க 'தாகூத்' மீது
இடியாய் இறங்குகிறார்கள் !

இன்ஷா அல்லாஹ் நம்புங்கள இறையாட்சி மீண்டும் பிறக்கும் மனித அடிமை விலங்கு தெறிக்கும்

அல்லாஹு அக்பர் ..
அல்லாஹு அக்பர்..அல்லாஹு அக்பர்

May 23, 2014

இஸ்லாமியரின் லட்சியம் ....

காரைக்கால் இஸ்லாமிய தாவா சென்டரில் இன்றைய ஜும்மா உரையிலிருந்து சில வரிகள். ..
உரை :
முஹைதீன் பக்ரி
தலைப்பு :இஸ்லாமியரின் லட்சியம் ....


ஒரு முஸ்லிம் தான் வாயால் முன்மொழிந்து தனது செயலால் கலிமாத்து தய்யிபாவை (லாயிலாஹா இல்லல்லாஹ்) பேணி அதை உலகம் முழுக்க பிரகடனபடுத்தவும் ,குரானையும் சுன்னாவையும் இஸ்லாமிய உம்மத்த்களின் வாழ்க்கை நெறியாக மாற்றவும்,இவ்வுலகில் உள்ள முதலாளித்துவம்,
கம்யூனிசம் போன்ற தீனை விட இஸ்லாமிய தீனை நிலைநாட்டவும் , இஸ்லாத்தை மனிதகுல மக்களுக்கு வாழ்க்கை திட்டமாக மாற்றவும் ,மீண்டும் இஸ்லாம் ஒரு தலைமையின் கீழ் வாழவும் அதற்காக தாவா என்ற அழைப்பு பணி செய்வது தான் ஒரு முஸ்லிமின் லட்சியமாக இருக்க வேண்டுமே ஒழிய ஜனநாயகத்திற்காகவும் கம்யுனிசட்திர்காகவும் தனது செயல்பாடுகளை ஒரு முஸ்லிம் ஒரு காலும் செய்ய அனுமதி இல்லை ...இதை எந்த சூழ்நிலை வந்தாலும் எந்த குப்பார் நம்மை ஆலவந்தாளும் நாம் அல்லாஹ்வின் பாதுகாவலை கொண்டு இஸ்லாமிய இகாமத்து தீனை மீண்டும் நிலை நாட்டும் "முயற்ச்சியை " செய்தே ஆக வேண்டும் ....
அல்லாஹ் போதுமானவன் ....

Sep 24, 2013

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?



ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில் கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது. ஹஜ் கடமையை நிறைவேற்ற விசா இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றுவந்த அந்த காலகட்டங்களில், இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்கும் கலீஃபாவையோ அல்லது கலீஃபாவின் பிரதிநிதியையோ சந்தித்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

இஸ்லாமிய அரசிலிருந்து துண்டாடப்பட்டு சவூதி அரேபியா என்ற நாடு பிரிட்டனின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிறகு ஹஜ்ஜை சவூது குடும்பத்திலிருந்து முடிசூடும் சவூதி அரேபிய ஆட்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதற்காக சவூதி ராஜா தன்னை இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் என்று பெருமையாக கூறிக்கொள்கிறார். அமெரிக்காவின் ஏஜெண்டான சவூதி ராஜா வீழ்வது உறுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.மேலும் முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசு இந்த பூமியில் மீண்டும் வருவது உறுதி என்பதாக ஏராளமான நபிமொழிகள் சான்று பகர்கின்றன.எனவே ஹஜ்ஜை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளாக இருந்தது போன்று மீண்டும் உலக முஸ்லிம்களின் அமீரின்கீழ் வந்துவிடும். இந்நிலையில் இஸ்லாமிய அரசு எவ்வாறு ஹஜ்ஜை வழிநடத்தும் என்பதை சுருக்கமாக காண்போம்.

இஸ்லாத்தின் ஐந்தாவது தூணான ஹஜ்ஜை அதிகமான மக்கள் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தரவேண்டியது இஸ்லாமிய அரசின் கடமையாகும். இப்போது சவூதி ஏற்படுத்தியுள்ள ஹாஜிகளிடமிருந்து வருமானம் சம்பாதிக்கும் வழிமுறைகள் மற்றும் விசா நடைமுறைகள் நீக்கப்பட்டு, ஹாஜிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துத்தந்து ஹஜ்ஜை எளிமைப்படுதுவதே இஸ்லாமிய அரசின் நோக்கமாகும்.

ஹரமில் தற்போது 35 - 40 லட்சம் மக்களை மட்டுமே கொள்ளும் அளவிற்கு இட வசதி உள்ளது. முஸ்லிம் உம்மத்தின் எண்ணிக்கையையும் வருங்கால எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக இந்த இடவசதியை மேம்படுத்துவது இஸ்லாமிய அரசின் முதல் சவாலாக இருக்கும். எனவே அதற்கேற்றவாறு மஸ்ஜிதுல் ஹராமின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியமாகும்.

சவூதி ராஜாவாக இருந்த ஃபஹத் 1982 ல் ஹரம் ஷெரீஃபை விரிவுபடுத்தினார்; அது மன்னர் ஃபஹதின் விரிவு என அறியப்படுகிறது. தற்போதுள்ள ராஜாவான அப்துல்லாஹ்வும் மற்றொரு விரிவாக்க திட்டத்தை அறிவித்துள்ளார். அது 2020 ஆம் ஆண்டில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னர் ஃபஹத் விரிவாக்கத் திட்டதின்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றி நிறைய நிலங்கள் தேவைப்பட்டது. எனவே ஆயிரக்கனக்கான வீடுகள் (சிறப்பு மிகுந்தவை உட்பட) அழிக்கப்பட்டன. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவற்றில் பெரும்பகுதி முஸ்லிம் அல்லாத ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் ஹரம் ஷெரீஃபில் நுழைய அனுமதி இல்லாதவர்களுக்கு ஹரமை சுற்றி ஹோட்டல்களை அமைக்க சவூதி அரேபிய ராஜா வழி ஏற்படுத்திக் கொடுத்தார். ரேடிசன், ஷெரட்டன், இண்டர்காண்டிநென்டல் போன்ற நிறுவனங்களுக்கு ஹரமை சுற்றி பெரும் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. புனித நிலங்களை அசுத்தமானவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து சவூதி ராஜா புளகாங்கிதம் அடைந்தார். எனினும் ஹஜ் வகுப்புகளை தேர்ச்சியுடன் நடத்தும் சவூதி அறிஞர்கள் மவுனம் காத்தனர். சமீபத்தில் அமெரிக்காவின் பாரிஸ் ஹில்டன் தன்னுடைய கிளையை மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள வணிக வளாகத்தில் திறந்துவைத்தபோது உலக முஸ்லிம்கள் வருந்தினர்..

இத்தகைய விரிவாக்கத் திட்டம் சவூதி அரேபிய ராஜாவிற்கு அரசியல் மைல்கல்லாகியது போன்றே அவருடைய குடும்பத்தினருக்கும் மக்காவில் ரியல் எஸ்டேட் மூலம் சொத்துக்கள் கொழிக்க உதவியது தற்போதைய சவூதி அரேபிய ராஜாவின் திட்டப்படி, உட்புற மற்றும் வெளிப்புற தொழுகை இடங்களை சேர்த்து 3,56,800 ச.மீ (88.2 ஏக்கர்) 40 லட்சம் ஹாஜிகளை உட்கொள்ளவே போதுமானது. மஸ்ஜிதுல் ஹராமின் வடமேற்கில் 15 லட்சம் ச.மீ அளவில் பிரம்மாண்டமான ஷாமியா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அல் ஷாமியா, கரோல், அல் கரரா வ அல்கா போன்ற திட்டடங்களின் மூலம் 30 லட்சம் ச.மீ வரை நிலங்கள் நீட்டப்பட்டு பல உணவகங்கள், கடைவீதி , பணம் புழங்கும் சந்தை மற்றும் குடியிருப்புகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் வர இருக்கின்ற இஸ்லாமிய அரசு, அதிக எண்ணிக்கையில் வரும் ஹாஜிகளை உட்கொள்ளும் அளவிற்கு ஹரமை சுற்றி திறந்த வெளியை அதிகரிக்க முற்படும். கோடைக்கால வெயிலின் வெட்கையை தணிக்க மதீனாவில் அமைந்துள்ளதைப் போன்ற காற்று வசதி ஏற்பாடுகளையும் இயந்திர குடைகளையும் பயன்படுத்தலாம். இதுவே இஸ்லாமிய அரசின் முதற்திட்டமாக அமையும்; இதைத்தொடர்ந்து மற்ற வசதிகள் செய்துதரப்பட்டு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும். ஹரமிற்கு அருகிலுள்ள இடங்களை மட்டும் பளிங்கு தரை கொண்ட தொழுமிடமாக மாற்றினால் 45 லட்சம் முஸ்லிம்களை உட்கொள்ளும். இதையே இரண்டடுக்கு கொண்ட இடமாக மாற்றினால் இரட்டிப்பு எண்ணிக்கையில் மக்களை உட்கொள்ளும்.

ஆனால் தற்போது அல் ஷாமியா உருவாக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2,50,000 மக்களுக்கு தேவையான உணவகங்கள், தங்குமிடம் மற்றும் 4 லட்சம் பேர் தொழுமிடம் மட்டுமே அமைக்க இயலும்.ஜபல் உமர் திட்டத்திற்காக ஹரமின் தென்மேற்கு பகுதியுலுள்ள 600க்கும் மேற்பட்ட நிலங்கள் கைப்பற்றப்பட்டு (24,480 ச.மீ) அதில் 935 அறைகள் கொண்ட 5 நட்சத்திர உணவகமும், 1255 அறைகளைக் கொண்ட 3 நட்சத்திர உணவகங்களாகவும் கட்டப்படவுள்ளது. மேலும் 1 லட்சம் பேர் உட்கொள்ளும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்களும், 520 உணவகங்களும், 4360 கடைகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 1 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கும் வகையில் 6 மாடி கட்டிடம் கட்டும் திட்டமும் உள்ளது.

ஜபல் உமர் திட்டம் முன்னர் குறிபிட்டது போல் நிழற்குடைகளையும், காற்று வசதிகளையும் கொண்ட தரை அமைக்கும் திட்டமெனில், அது 7.5 லட்சம் ஹாஜிகளை தொழுகைக்கு உட்கொள்ளும் இடமாக அமையும். மற்றொரு திட்டமான ஜமல் கந்தமாவின்படி 6 லட்சம் ச.மீ நில பரப்பு கலப்பு இடங்களான உணவகங்கள் , கட்டிடங்கள் மற்றும் சந்தைகளாக உருவாகிக்கொண்டிருக்கிறது.இதை தொழுகை இடமாக மாற்றினால் 20 லட்சம் முஸ்லிம்களுக்கு இடமளிக்கும். மேற்கூறிய அணைத்து திட்டங்களும் ஹரமை சுற்றியுள்ள இடங்களைக்கொண்டு உருவாக்கப்படுகிறது, எனவே இவை அனைத்தையும் ஹரமுடன் எளிமையாக இணைத்துவிடலாம்.

ஏறக்குறைய அனைத்து திட்டங்களுக்கும் பெறப்பப்பட்ட இடங்கள் சிறு ஈட்டுத் தொகைக்கு அல்லது நஷ்ட ஈடு கூட இல்லாமல் சவூதி அரசால் பெறப்பட்டவையாகும். இன்னும் சில இடங்கள் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த கால அவகாசம் கொடுத்து காலி செய்யப்பட்டன.

46,000 ச.மீ கொண்ட மற்றொரு திட்டமான ஜபல் காபா. அப்ரஜ் அல் பய்த் கோபுரம் கட்ட புல்புல் மலையிலுள்ள அஜ்யத் கோட்டை அழிக்கப்பட்டது. இந்த கோபுரமும் மற்ற கோபுர வடிவங்களும் கஃபாவின் புனிதத்தை மீறிய செயலாகும். ஒருபுறம் விமானங்கள் ஹரமிற்கு மேல் பறந்து செல்லக்ககூடது என்பதும் மறுபுறம் ஹரமை விட கோபுரங்கள் உயர்ந்து நிற்பதும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது.

மார்க்க சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஏழு மஸ்ஜிதுகளில் அபுபக்கர்(ரலி), சல்மான் பார்சி(ரலி), உமர்(ரலி), அலி(ரலி), பாத்திமா(ரலி) ஆகியோர் பெயரிலிருந்த ஐந்து மஸ்ஜிதுகள் சவுதி அரேபிய அரசால் அழிக்கப்பட்டுள்ளன. நபி صلى الله عليه وسلم அவர்களின் மனைவியர்களில் ஒருவரான கதிஜா(ரலி) அவர்களின் வீடு பொது கழிப்பிட வசதிக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்களின் உற்ற தோழரான அபூபக்கர்(ரலி) அவர்களின் வீடு தற்போது ஹில்டன் உணவகத்திற்காகாகவும், அலி உரைத்தின் வீடும் அபு குபைஸ் பள்ளியும் தற்போதுள்ள அரசு மாளிகைக்காகவும், நபி صلى الله عليه وسلم அவர்கள் பிறந்த இடம் நூலகத்திற்காகவும் இடிக்கப்பட்டது. தற்போதுள்ள அப்ரஜ் அல் பைத் கோபுரம் உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த அஜ்யத் கோட்டையை இடித்தும் கட்டப்பட்டவையாகும்.

இன்னும் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சவூதி மன்னர்களால் காரணமின்றி அழிக்கப்பட்டுள்ளன. தற்போது நபி صلى الله عليه وسلمஅவர்களின் காலத்து வரலாற்று இடங்களில் இருபதிற்கும் குறைவானவையே மிஞ்சியுள்ளன.

தற்போது மஸ்ஜிதுல் ஹராமை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் விடுவிக்கப்பட்டு மார்பிள் கல் பொறிக்கப்பட்ட திறந்த வெளியாக மாற்றப்பட்டால் குறைந்தது ஒரு கோடி நபர்களுக்கு இடமளிக்கும்.அபு குபைஸ் மலையில் 1 லட்சம் ச.மீ பரப்பளவில் உள்ள சவூதி ராஜ மாளிகையை இடித்தால் இன்னும் இடவசதி கிடைக்கும்.

மஸ்ஜிதுல் ஹராமிற்கும் சில அமைப்பு மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக , மதாஃப் (தவாஃப் பகுதி ) விரிவாக்கப்படவேண்டும் வேண்டும். உதுமானிய கிலாஃபா காலத்தை சார்ந்த தடுப்பை அகற்றுவதன் மூலமாக தவாஃப் பகுதி மேலும் விரிவடையும்.

குழைந்தகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் நகரும் நடைபாதைகளை மேல் மாடிகளில் இஸ்லாமிய அரசு அமைத்துக்கொடுக்கும். இது ஹாஜிகளுக்கு உதவுவது மட்டுமல்லாது சக்கர நாற்காலியின் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றுப்பெறும்.நகரும் நடைபாதையை பயன்படுத்துவதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியப்படுகிறது.

طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்துகஃபாவை தவாஃப் செய்தார்கள்.. அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

(இப்னு அப்பாஸ்(ரலி) , புகாரி)

அதைப்போலவே நகரும் நடைபாதையை சஃப்வா மர்வாவிற்கு மத்தியிலும் அமைக்கலாம்.இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் இரண்டாவது சவால், மக்கவாசிகளுக்கும் ஹாஜிகளுக்கும் தங்குவதற்கு வீடு அமைத்து தருவதாகும். மக்காவைச்சுற்றி பல மலைகள் உள்ளன. இந்த மலைகளை அகற்றுவதின் மூலம் பெரும் பிரச்சனை தீரும்.முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இஸ்லாமிய அரசுடைய நவீன திட்டங்களை மென்மேலும் அதிகரிக்கவேண்டியிருக்கும்.. அத்தருணத்தில் அரசு மக்காவை சுற்றி செயற்கை நகரங்களை உருவாக்கி ஹாஜிகளையும் ஊர்வாசிகளையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். எனினும் அது விரைவில் நடக்க கூடிய நிகழ்வு அன்று; மாறாக முழு உலகமும் இஸ்லாத்தை தழுவும் போது இந்நிகழ்வு நடைபெறும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக தமீம் அத்தாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :-

لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ، وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ، بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ، عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ، وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ

“ இரவு பகல் சென்றடையும் பிரதேசங்களையெல்லாம் இம்மார்க்கம் நிச்சயம் சென்றடையும். மதர், வபர் ஆகிய எந்தப் பிரதேசத்தையும் இறைவன் விட்டு வைக்க மாட்டான். அவற்றிலும் இந்த தீனை அல்லாஹ் நுழைவிப்பான். கண்ணியமுடையவன் கண்ணியம் பெறுவான். இழிவானவன் இழிவடைவான். இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தவதன் மூலம் ஒருவனுக்குக் கண்ணியமும் குஃப்ரை இழிவடையச் செய்வதன் மூலம் அடுத்தவனுக்கு இழிவும் ஏற்படும்.” (முஸ்னத் அஹ்மத், ஹாகிம்)

இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின்படி இந்த ஹதீஸ் ஸஹீஹானது என இமாம் ஹாகிம் குறிப்பிடுகிறார்கள. இரவு பகல் சென்றடையும் பிரதேசங்கள் என்பது முழு உலகிலும் இஸ்லாம் பரவுவதைக் குறிக்கும்.

இஸ்லாமிய அரசுக்கு மூன்றாவது பெரிய சவாலாக அமைவது போக்குவரத்தாகும். தற்போதுள்ள அனைத்து போக்குவரத்து அமைப்பும், பொது போக்குவரத்து அமைப்பும் (MRTS ) அவசியம் மேம்படுத்தப்படவேண்டும். MRTS புனித பகுதிகளில் (மக்கா, மினா , முஸ்தலிஃபா, அரஃபா ) போன்ற இடங்களில் முதலாவதாக அமைக்கப்பட்டு பின்பு பிற புனித ஸ்தலங்களுக்கும் விரிவாக்கப்படும்.

MRTS ன் வடிவம் மற்றும் கட்டமைப்பு பூமியின் அடியில் பல இணைப்புக்களைக் கொண்டதாக அமையும். இவை கூட்ட நெரிசல்களைக் குறைத்து இலகுவாக செல்ல கட்டப்படுவதாக அமையும். மலேசியா, டெல்லி, லண்டன் போன்ற இடங்களில் உள்ள MRTS இயங்கும் முறையை அறிந்து நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் இரயிலில் ஏறும் எண்ணிக்கையை பொறுத்து, பெரும் அசம்பாவிதங்களும், கூட்ட நெரிசல்களால் ஏற்படும் விபத்துகளும் இல்லாத வகையில் இரயில்களின் எண்ணிக்கை அமைய வேண்டும்,

கடந்த வருடம் அரஃபாவில் மெட்ரோ இரயில் நிலையங்களில் பல மக்கள் இறந்தனர். அதற்கு காரணம் அங்கு 4000 நபர்கள் ஏறிச்செல்லக்கூடிய 21 ரயில்கள் மட்டுமே உள்ளது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் கூட்ட நெரிசல் அதிகரித்து மூச்சு திணறலிலும் மிதிப்பட்டும் ஹாஜிகள் உயிரிழந்தனர். இஸ்லாமிய அரசு முஸ்லிம்களின் உயிர்களை சோதனைக்கு உள்ளாக்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே ஹாஜிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் பொதுபோக்குவரத்தைப் பொறுத்தவரையில் நகரத்திற்குள் மிகவும் பிரச்சனைக்குரியதாகும். தற்போது தெருக்கள் குறுகியதாகவும் சரியான பராமரிப்பின்றியும் இருக்கின்றது. தனி நபர் வாகனங்கள் ஹரம் மற்றும் அரஃபா போன்ற இடங்களில் அனுமதிக்கப்படமாட்டாது, மாறாக இத்தகைய இடங்களில் அரசு வாகனங்கள் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் .

மினா, முஜ்தலிஃபா மற்றும் அரஃபாவில் உள்ள சவால்களை பொறுத்தவரையில் இந்நகரங்கள் மக்காவை விட சிறியதாகவும் மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. மலைகள் தகர்க்கப்பட்டு பெரும் கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மினாவில் தங்குவது தான் சுன்னத்தாகும். அதற்காக திறந்த வெளி கூடாரங்களில்தான் தங்கவேண்டும் என்றில்லை. சவுதி அரசு இந்நடவடிக்கையை மேற்கொள்ளாததற்கு காரணம் முதலீட்டிற்கு ஏற்ற வருமானம் வராது என்பதாகும். இஸ்லாமிய அரசின் வரவு என்பது முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜை இலகுவாக்குதலால் கிடைக்கும் நற்கூலியாகும்.

தற்போது இம்மூன்று நகரங்களில் உள்ள பிரச்சனை போக்குவரத்தும் இடவசதியுமாகும் . MRTS சேவை போக்குவரத்து பிரச்சனையையும், அடுக்கு மாடி கட்டிடங்கள் இடப்பற்றாக் குறையையும் தீர்க்கும். தற்போதுள்ள ஜமராத் திட்டம் சிறப்பாகவும் நிறைய ஹாஜிகளை உட்கொள்ளும் வகையில் உள்ளது.

உணவு மற்றும் தண்ணீர் வசதியை ஹாஜிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தல் இஸ்லாமிய அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். உப்புத் தண்ணீர் சுத்தகரிக்கும் ஆலை ஜித்தாவில் நிறுவப்பட்டும், நகரத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மற்ற புனித ஸ்தலங்களிலும் ஜம் ஜம் நீர் கிடைத்திட வழி வகையை அரசு மேற்கொள்ளும். உணவு தரத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவில் கலப்படம் மற்றும் அதிக பணம் வசூலித்தல் போன்றவை தடுக்கப்படும்.

மக்காவில் ஹாஜிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதுபோன்றே மதீனாவிலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய இஸ்லாமிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இஸ்லாமிய அரசான கிலாஃபா நபிصلى الله عليه وسلم அவர்களின் வழியில் ஏற்பட அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.

Sep 1, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் !(பகுதி 03)

ஆப்கான் சோவியத் யுத்தம் சூடு பிடித்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில் அமெரிக்கா தனது அசிங்கம் மிக்க சுயநலக் கரம் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு சார்பாக நேரடியாகவே பங்களிப்பு செய்திருந்தது போலக் காட்ட தனது மீடியாக்களை பல்வேறு வழிகளில் பாவிக்கத் தொடங்கியது .

ஆப்கன் யுத்தத்துக்கு நிதி சேர்க்கும் சாட்டில் மாபியாத் தனமாக ஹெராயின் ,கொகாயின் வியாபாரத்தை வேறு ஆப்கான் போடர்களில் படர விட்டிருந்த அமெரிக்கா , தான் எப்படியான ஆயுத உதவி செய்தேன் என்பதைக் காட்ட 'ஹோலிவூட் ' பாணியில் சொன்ன கதைதான் FIRST BLOOD (PART 3) அல்லது RAMBO (PART 3) திரைப்படம் ஆகும் .

'சில்வஸ்டர் ஸ்டலோன் ' என்ற பிரபல்யத்தைப் ஹீரோவாக போட்டு 1988 களில் இந்தத் திரைப்படம் வெளிவந்த போது ஆப்கான் முஜாஹிதீன்கள் தலைநகரான காபூலை நெருங்கி இருந்தார்கள் . அப்போது ஆப்கான் ஜனாதிபதியாக இருந்த 'நஜீபுல்லா ' தன் மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பித்திருந்தார் . ஆப்கான் இராணுவத்தின் தளபதியாக இருந்த 'அப்துர் ரசீத் தோஸ்தம் ' மதில் மேல் உள்ள பூனை போல இருந்தார் .

எப்போதும் அமெரிக்கா தனது 'இமேஜை' தக்க வைக்கவும் ,தோல்விகளை மறைக்கவும் , தனது எதிரிகளை கிண்டல் அடிக்கவும் தனது அச்சங்களை வெளிப்படுத்தவும் 'ஹோலி வூட் ' எனும் மீடியா நாசகாரியை பாவிப்பது வழமை . அந்த வகையில் வியட்நாம் தோல்வி தொடர்பில் 'TOUR OF DUTY' போன்ற திரைப் படங்களின் வரிசையில் RAMBO (PART 3) ஆப்கானில் தனது பிரசன்னத்தை காட்டி முஜாஹிதீன்களின் தியாகத்தை பக்குவமாக கொச்சைப் படுத்தியது .

அமெரிக்க சார்பாக ஒரு ஆயுத விநியோக நடவடிக்கையில் சோவியத் படையிடம் கைதான ஒரு அதிகாரியை மீட்கும் 'வன் மேன் ' ஆர்மியாக 'சில்வஸ்டர் ஸ்டலோன் ' ஆப்கான் நுழைந்து இக்கட்டில் மாட்டியிருக்கும் ஆப்கான் மக்களை காக்கும் மனிதாபிமான சப் மிசனிலும் சிறப்பாக பணியாற்றி சோவியத் பட்டளியன்களை துவம்சம் செய்வது தான் கதை .

இதில் நிஜத்தில் வெற்றி அடைந்து கொண்டிருக்கும் முஜாஹிதீன்களை எதோ நவீன யுத்த மரபு தெரியாத காட்டன் தரத்தில் காட்டி 10 வருட தியாகத்தை 2 மணிநேரத்தில் சிதைத்து விட்டுப் போனது .
அத்தோடு தனது இரட்சிப்பு இல்லாமல் சோவியத் ரஷ்யர்களை தோற்கடித்து இருக்கவும் முடியாது என்ற செய்தியையும் சொல்லிப் போனது . இன்னும் சில பதிவுகளோடு இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திக்கிறேன்.

மத்திய கிழக்கில் நவ காலனித்துவம் சொல்லும் புதுக்கதை என்ன !?




சிரியா தாக்கப்படுமானால் ரஷ்யா சவுதி அரேபியாவை தாக்கும் !! - விளாடிமிர் புட்டின் அசோல்டிங் ஓடரில் கையொப்பமிட்டார்!!

“இதன் பெயர் எண்ணைய் யுத்தம். மத்திய கிழக்கின் ரஷ்யாவின் பெறுமதிமிக்க ஒரே ஒரு தளத்தையும் அழித்து அதன் பின் மத்திய கிழக்கு நாடுகளை தன் அடிமை தேசமாக மாற்றி பூகோள பெற்றோலிய அதிகாரத்தை தக்க வைக்கும் முதலாளித்து தேங்களின் பொறியில் இருந்து விடுபட ரஷ்யா தாயராகிறது. அதனை செய்ய சிரியாவை காப்பாற்றல் என புருடா விடுகிறது”

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து Russian Federation for the Armed Forces-இற்கு ஒரு அவசர மெமரண்டம் அனுப்பப்பட்டுள்ளது. “முழு நேர தாக்குதலிற்கான படைகளை தயார்படுத்தும் கட்டளை” அதில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் சிரியா மீது தாக்குதல் தொடுக்குமானால் சவுதி அரேபியா மீது ரஷ்யாவின் தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கம். இதனை யூரோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிரியா மீதான தாக்குதலிற்கு சவுதி அரேபியா எவ்விதத்திலும் உதவ கூடாது என்று கடந்த ஆகஸ்டில் சவுதி அரேபிய இளவரசர் Bandar bin Sultan-னிடம் அதிபர் புட்டின் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் சவுதி ஆட்சியாளர்கள் அதற்கு நேர் முரணான அமெரிக்க சார்பு கொள்கைகளிற்கு துணை நின்றதுடன் நேரடியாகவே பணம், ஆயுத உதவி என சிரிய போராளிகளிற்கு வழங்க ஆரம்பித்தது. சிரியா மீதான தாக்குதலில் மேற்கு நாடுகளிற்கு தனது பரிபூரணை ஒத்துழைப்பை வழங்க அண்மையில் சவுதி அரேபிய அரசு உடன்பட்டிருந்தது. அதன் விளைவே "command battle" எனும் சவுதி மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமாகும்.

Bandar bin Sultan ரஷ்ய அதிபருடன் பேசும் பொழுது பஸர் அல்-அஸாதின் ஆட்சி தூக்கி வீசப்பட்டாலோ அல்லது சிரியா மீதான தாக்குதல் ஏற்பட்டாலோ, சிரியாவில் உள்ள ரஷ்ய கடற்தளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அது தொடர்ந்தும் இயங்கும்படியான சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் இப்போது அமெரிக்க முதன்மை தாக்குதல் திட்டத்தில் அனைத்து சிரிய துறைமுகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபிய அரசு சிரியா மீதான ஆதரவை ரஷ்யா விளக்கிகொள்ளுமாக இருந்தால் எண்ணை சந்தையில் உலகாதிக்கம் மிக்க நாடாக ரஷ்யாவை மாற்ற தாம் துணை நிற்பதுடன் ரஷ்யாவுடன் பாரிய எரிவாயு ஒப்பந்தத்தையும் செய்ய தயார் என மெல்ல டீல் பேசியிருந்தது. அதற்கு ரஷ்ய அதிபர் புட்டின் “தாம் ஒரு போதும் சிரியாவை கைவிட முடியாது” என ஆணித்தரமாக தெரிவித்து இருந்தார். இந்த தகவலை லண்டன் டெய்லி கிராப்ஃ பத்திரிகை தெரிவித்திருந்தது.

இதற்கமைவாக லண்டன் இன்டிபென்டன்ட் பத்திரிகை ரஷ்ய வெளியுறவுதுறை செயளரின் பேச்சை ஆதாரம் காட்டியுள்ளது. Alexander Lukashevich சிரியா மீதான தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிடுகையில் சிரியா மீதான அமெரிக்காவின் சீரியல் தாக்குதல்களின் விளைவாக மத்தியகிழக்கும் வடஆபிரிக்காவும் தாக்குதல்களிற்கு உள்ளாகும். இது மூன்றாம் உலகப் போரிற்கான ஆரம்பமாக அமையும் என எச்சரித்திருந்தார்.

“பிளேன் சிரியா”-வில் பஸர் அல்-அஸாதின் இராணுவ கட்டமைப்பை தகர்ப்பது மட்டும் அமெரிக்காவின் நோக்கமல்ல. டமஸ்கஸ் வரை நெருங்கி வந்து சண்டையிடும் இஸ்லாமிய ஆதரவு அமைப்பை அழிப்பதும் அதன் நோக்கம். இறுதி இலக்காக ரஷ்யாவின் மத்தியகிழக்கிற்கான தளத்தை இல்லாமல் செய்வதே அதன் ஏகபோக எண்ணெய் சுரண்டலிற்கு வழியமைக்கும்.

முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.!!

குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

சிரியாவில் அசாத் பலவீனப்பட்டுவிட்டதை அடுத்து முஜாஹிதீன்களது கை மேலோங்கிவிடக் கூடாது என்ற நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகள் சிரியாவில் இரசாயன ஆயுதம் பாவிக்கப்பட்டதை கருத்திற்கொண்டு மனிதாபிமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் எமது முஸ்லிம் நாடுகள் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்து குப்பார்களது காலனித்துவக் கொடியின்கீழ் இந்த பொய்யான காரணங்களுக்கு உடந்தையாக முஜாஹிதீன்களுக்கு எதிராக கூட்டுச் சேர்வது மிகப்பெரிய அநியாயமாகும்.

சிரியா மீதான இந்த இராணுவ முன்னெடுப்புக்கு முன்பு கட்டார், சவூதி போன்ற நாடுகள் இந்த காலனித்துவ சக்திகளது ஜெனரல்களுடன் அம்மானில் கூடியெடுத்த முடிவைத் தொடர்ந்தே இந்த இராணுவ முன்னெடுப்பு நகர்கிறது.

அத்துடன் யூ.என் அனுமதியின்றி தேவையான முழுமையான இராணுவப் பங்களிப்பை இந்த குப்பார்களுடன் சேர்ந்து சிரியாவிற்கு எதிரான இராணுவ முன்னெடுப்பில் வழங்குவதாக “துருக்கி” வாக்களித்துள்ளது. இது சிரிய முஜாஹிதீன்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் மாத்திரமன்றி அவர்கள் இஸ்லாத்தை ஷரீஆவை நிறுவும் போராட்டத்தை பலவீனப்படுத்தி குப்ருடைய ஆட்சி மீண்டும் தொடர வழிவகுக்கும் ஒரு ஈனச் செயலாகும்.

இவ்வாறு குப்பார்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களது கொடியின் கீழ் யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து குர்ஆனும் ஹதீசும் மிக வன்மையான கண்டிக்கிறது.

“(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர். (தௌபா 9:8)”

“முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?” (4: 144)

“எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.” (5: 52)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'முஷ்ரிகீன்களது நெருப்பில் ஒளியைத்தேடாதீர்கள்.'

அதேநேரம் இஸ்லாத்தை நிலைநட்டுவதில் உதவி தேவைப்பட்டால் முஸ்லிம்களுக்கு உதவி வழங்குமாறு அல்குர்ஆன் ஏவுகிறது.

“எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும்.” (8: 72)

சிரியாவின் மீதான அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்களும் அதன் உண்மையான முகங்களும்!

அமெரிக்கா கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

ஆனால், அமெரிக்கா இன்று “அல்கௌதா” எனும் இடத்தில் இரசாயன ஆயுதத் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகவே சுமார் 1400 பேர் கொல்லப்பட்டதனால் அசாத் “சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாக” கூறிக்கொண்டு சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பை மேற்கொள்வதில் எந்த நியாயங்களும் வெளிப்படை உண்மைகளும் இல்லை என்பதனை நாம் உணரலாம்.

அமெரிக்காவினது சிரியாவின் மீதான இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்கள் பின்வருமாறு:

1.கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

2.எகிப்தில் ஜனநாயக அடிப்படையில் தெரிவசெய்யப்பட்ட முர்சியை பதவி கவிழப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கிவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை அல்-சிசி எனும் அரக்கன் கொன்று குவிக்க வழிசமைத்ததுடன் அங்கு மக்கள் புல்டோசர் கொண்டு நசுக்கப்படும் போது அவர்களுக்கு மனிதாபிமானமோ மனித உரிமையோ தென்படவில்லை.

3.இராக்கிய அமெரிக்க படையெடுப்புக்கு முதலில் 'ஹலாப்ஜா' எனும் இடத்தில் சதாம் ஹூசைன் குர்திசிய மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதத்தை பிரயோகித்தும் அமெரிக்கா சதாம் ஹூசைன் பலவீனப்பட்டு விட்டவுடன் அதை பின்பு காரணமாகக் காட்டி ஈராக்கின் மீது மிகமோசமான ஒரு இராணுவ முன்னெடுப்பை தற்துணிவுடன் மேற்கொண்டது மாத்திரமன்றி 'பலுஜா' நகரில் யுரேனிய அனுக்கழிவுகளில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்த மக்களை கறுவறுத்த வரலாற்றுச் சாதனையை கொண்டுள்ளது.

4.அதேநேரம் இஸ்ரேல் 2009 இல் காசா மக்களுக்கு எதிராக 'வைட்பொஸ்பரசு' எனும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியபோது அதனை கண்டுகொள்ளவில்லை.

அவ்வாறாயின் ஏன் அமெரிக்கா இன்று சிரிய மக்கள் விடயத்தில் அதீத அக்கறை எடுத்த நிலையில் ஒரு இராணுவ முன்னெடுப்பை காலனித்துவ கூட்டு சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் களமிறங்கியுள்ளது?

இந்த அமெரிக்க தலைமையிலனா காலனித்து சக்திகளின் இந்த நகர்வின் அடிப்படைக் காரணம் இன்று அசாத் நலிவடைந்து விட்டான். அவனது பெரும் தொகையான ஆயுதங்களை முஜாஹிதீன்கள் தம்வசப்படுத்தி விட்டார்கள். இவர்கள் கிலாபா ஆட்சியை நிறுவப் போராடுகிறார்கள் என்ற நோக்கம் ஒரு புறமிருக்க அவர்களது தலையீட்டின் முலம் முஜாஹிதீன்களை பலமிழக்கச் செய்து அங்கு மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பட்ட ஜனநாயக ஆட்சியை நிறுவி கிலாபா மீள் உருவாக்கத்தை அவர்கள் தடுக்கவேண்டும்.

அதன் மூலமாகத்தான் அவர்கள் முஸ்லிம் நாடுகளில் தங்கள் கரத்தை பலப்படுத்தி தொடர்ந்தும் வளங்களை உறிஞ்சவும் தங்களது நுகர்வுச் சந்தையாக முஸ்லிம் நாடுகளை தக்கவைக்கவும் முடியும் என்பதனை நன்குணர்ந்து எடுக்கும் அரசியல் மற்றும் இராணுவ நகர்வாக இஸ்லாத்திற்கு எதிரான யுத்தப்பிரகடனமாக ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் மனித நேய?


அமெரிக்காவின் மனித நேய ? குண்டுகளின் கோர தாண்டவம் இது ஈராக்கின் குழந்தைகள்

இவர்கள் சிரியா செல்லவேண்டியது தேவையா ?








Aug 31, 2013

மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்குமா?




அமெரிக்கா தலைமையிலான பேரரசின் கீழ் நிறுவப்பட்டு தொழிற்படும் மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகள் மீறப்படும்போது அது குறித்து ஆக்கபூர்வமாக இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா?

ஈராக்கில் ஆப்கானில் காசாவில் மாலியில் பர்மாவில் சிரியாவில் எகிப்தில் என்று மனித உரிமைகள் அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகளால் அல்லது ஏகாதிபத்திய அமெரிக்காவினால் மீறப்படும் போது அவர்கள் எத்தகைய மனித உரிமைகளை பாதுகாத்துள்ளார்கள் என்பது குறித்து முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

நிச்சயமான குப்பார்கள் முஸ்லிம்களது விவகாரத்தில் கருணைகாட்ட மாட்டார்கள். இது வரலாற்று உண்மை.

இது இவ்வாறு இருக்கும் போது இன்னும் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்தப் போலியான சர்வதேச அரசியல் நலன்களின் பின்னனியில் தொழிற்படும் ஒரு சர்வதேச அமைப்பிடம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடுவதால் இந்த மனித உரிமைகள் அமைப்பு ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லாது முதலாளித்துவ நலன்களுக்கு எதிராகவே எந்நவிதமான அதிரடி நடவடிக்கைகளை முஸ்லிம்களது விடயத்தில் எடுத்து நீதியை நிலைநிறுத்துமா?

இல்லவே இல்லை. இன்று ஷரீஆச் சட்டம் எந்த முஸ்லிம் நாட்டில் பகுதியாக அமுலாக்கப்பட்டாலும் மனித உரிமைகள் அமைப்பு மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கி இஸ்லாத்தை கற்காலத்திற்கு கொண்டு சென்று காட்டுமிராண்டித் தனமான சிந்தனைகளையும் சட்டங்களையும் கொண்ட மார்க்கமாக சித்தரிக்க முற்படும் போக்கை மிகத் தீவிரமாக முன்னெடுத்து மனித மனங்களை இஸ்லாத்திற்க எதிராக திருப்புவதில் பாரிய பங்களிப்பை வழங்கும்.

அப்படியானால் ஒரு முஸ்லிம் யாரிடம் இந்த மனித உரிமை மீறல்களை முறையிடுவது?

எமது 1300 வருட வரலாற்றில் முஸ்லிம்களது உரிமைகள் மாத்திரமன்றி இஸ்லாத்தின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த குப்பார்களது உரிமைகளையும் எவ்வாறு அந்த கிலாபா அரசுகள் பேணியது என்பதனை நாம் உணர்ந்து இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள கிலாபா அரசை மீள நிறுவுவதன் மூலமே முஸ்லிம்களது உரிமைகள் பாதுகாக்கப்படமுடியும் என்ற அடிப்படை உண்மையை நாம் கருத்திற்கொள்ள வேண்டும்

இன்றைய அமெரிக்க யூத இராணுவ முன்னெடுப்புகளில் எமது முஸ்லிம் இராணுவங்கள் கற்றவேண்டிய பாடங்கள்!


இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களதும் கேடயமாக இருந்தது முஸ்லிம்களது இராணுவம். அது ஒரு தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றில் மேற்கொண்டதன் பயனாகவே மதீனாவில் நிறுவிய இஸ்லாம் மிகப்பெரும் இரு பேரரசுகளான ரோம் மற்றும் பாரசீகத்தை தோற்கடிக்கும் சக்தியை பெற்று இஸ்லாத்தை நிலைநிறுத்துவதில் பாரிய பங்களிப்பை வழங்கியது என்பது எமது வீரவரலாறு.

ஆனால் இன்று எமது உம்மத்தினது இராணுவம் 4.7 மில்லியனாக அமெரிக்க ரஷ்ய மற்றும் இந்திய இராணுவங்களின் தொகையிலும் அதிகமாக இருந்தும் எத்தகைய பங்களிப்பைச் செய்கிறது? அது இஸ்லாத்தின் எழுச்சியிலும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதிலும் இன்று நாம் இழந்துள்ள கிலாபத அரசை நிறுவுவதிலும் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

நிச்சயமாக, இன்றைய எமது முஸ்லிம் இராணுவம் தமது தேசிய எல்லைக்கு அப்பால் இணைந்து தமது அமானிதமான இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்து இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுவுவதில் பங்களிப்பு செய்யும் அதி உன்னத காலத்தில் உள்ளது.

இன்றுள்ள துர்பாக்கியமான நிலை யாதெனில் இன்றுள்ள முஸ்லிம் தலைமைகளால் தங்களது சொந்த நலனுக்காகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் தொழிற்பட்டு இன்று முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய முஸ்லிம் இராணுவங்கள் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களையும் கொன்று குவிக்கும் கொடூர நிலைக்கு அவர்களது போக்கை மாற்றி வைத்துள்ளார்கள்.

இந்த இழிநிலையில் இருந்து எமது சகோதர இராணுவத்தினை மீட்டெடுப்பதற்கு நாம் பொறுப்புடனும் பக்குவமாகவும் தஃவத் கொடுத்து அவர்களை இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலன்களின் பக்கம் மீட்கவேண்டும்.

அத்துடன் இஸ்லாம் மீண்டும் ஒரு வல்லரசாக மாற்றப்படுவதிலும் குர்ஆன் சுன்னா வாழ்வின் அனைத்து துறைகளில் அமுலாக்கப்படுவதிலும் பாரிய பங்களிப்பை கோரி அவர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகளிக்கு பாரிய பொறுப்புள்ளது.

சிந்திப்போம்! எமது முஸ்லிம் இராணுவ துஸ்பிரயோகத்தைக களைய ஆக்கபூர்வமான தஃவா முன்னெடுப்புக்களை முஸ்லிம் நாடுகளில் வழங்க உழைப்போம்! இஸ்லாம் ஒரு சுபபவராக இன்றைய முதலாளித்து தலைமைத்துவத்தின் மாற்றீடாக உலக மக்களது மீட்சியாக மலர உழைப்போம்!

அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு


அமெரிக்க ரஷய அரசியல் மற்றும் இராணுவ முன்னெடுப்பு…. சிரியாவில் கிலாபா நிறுவப்பட்டுவிடும் எனும் அச்சமே காரணமாகும்!

இன்று சிரியாவில் ரஷ்யா தலைமையிலான கொமியூனிச சிந்தனையிலான வல்லரசும் அமெரிக்கா தலைமையிலான முதலாளித்துவ வல்லரசும் களமிறங்கி இஸ்லாத்தின் எழுச்சியை அது ஒரு கிலாபா அரசாக கட்டியெழுப்பப்படுவதனை தடுக்கும் விதமான தமது போர்ப்படைகளை தயார்செய்துவரும் நிலையில் ஒரு முஸ்லிம் சிரியாகுறித்த எத்தகைய நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்?

இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தம் “சியா-சுன்னி” யுத்த மல்ல. அது ஒரு “சித்தாந்தங்களுக்கு இடையிலான யுத்தம்”.

சிரியமக்கள் கொமியூனிசமும் இஸ்லாமும் கலந்த “பாதிசமோ” அல்லது “முதலாளித்துவ மதஒதக்கல் சிந்தனையுள்ள ஜனநாயகமோ” வேண்டாம் என்று புறந்தள்ளி இஸ்லாமிய அரசாகிய “கிலாபா அரசு” வேண்டும் என்கின்ற யுத்தம்.

அசாத் தோற்கடிக்கப்பட்டு முஜாஹிதீன்களது கைக்கு சிரியா சென்றுவிட்டால் அங்கு கிலாபாவிற்கான பைஆ நடைபெற்றுவிடும் என்று இரு தரப்பு பேரரசுகளும் அஞ்சுகின்றன.

சிரியாவில் கிலாபா மீள் எழுச்சி பெற்றால் முஸ்லிம்களது கடமைகளும் பொறுப்புக்களும் அந்த அரசை பாதுகாப்பதிலும் அதற்கு பைஆ கொடுத்து அதனை நிலைநிறுத்துவதில் மாறிவிடும்.

அப்படியானால் அங்கிருந்து “கலீபாவினால் ஒரு அழைப்பு ஜிஹாதுக்கு முஸ்லிம் நாடுகளை நோக்கி விடுக்கப்படும் அழைப்பும்”, “இஸ்ரேல் மீதான யுத்தப்பிரகடணமும்” நாளைய அமெரிக்க யூத நலன்களையும் முதலாளித்து உலகையும் கணிசமாக பாதிக்கும்.

ஏனெனில் இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்க 57 இருந்து கொண்டு மேற்கிற்கு தாரைவாக்கும் போக்கு கேள்விக்குட்படுத்தப்பட்டு மக்கள் அவ்வாட்சியாளர்களை புறந்தள்ளி கிலாபாவுடன் தமது நிலங்களை இணைக்கும் பாரிய போராட்டப்பணியை மேற்கொண்டால் மேற்கினால் தொடர்ந்தும் முஸ்லிம் நாடுகளில் உள்ள “வளங்களை சுரண்டமுடியாது” மாத்திரமன்றி அவர்களது “சந்தைகளையும் இழக்க நேரிடும்”.

இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிறுபவப்பட்டால் அதன் முதல் நாளில் உளவு பார்க்கும் அனைத்து வெளிநாட்டு முகவர்கள் நிலையங்களும் மூடப்பட்டுவிடும். முதல் நாளில் இருந்தே வட்டியில்லா வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இது பெருமளவில் அமெரிக்க-யூத முதலைகளை பாதிக்கும். இன்தப் போக்கை “தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கும் ஒரு சூழ்சியான அரசியல் இராணுவ முன்னெடுப்பாகவே” இன்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அரசியல் நகர்வுகளை சிரியா விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் நோக்கவேண்டும்.

இந்த விடயத்தில் சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு பாரிய பொறுப்புள்ளது. அந்த நாட்டு மக்கள் சிரியாவினது முஜாஹிதீன்களது எழுச்சியில் பாரிய பங்களிப்பை வழங்கி எதிரிகளை விரட்டியடிக்கும் பாரிய பணி அவர்கள் மீது இன்று சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்லாம் வரவேண்டும் என நினைக்கும் இஹ்வானிய சகோதரத்துவ அமைப்புக்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை பொறுப்புடன் முன்னெடுத்து, “மூன்றுமுறை பின்னடைவை சந்திந்துள்ள ஜனநாயவழிமுறையிலான ஆட்சி மூலம் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியும் என்ற சிந்தனைப்போக்கை கைவிட்டு” கிலாபா ராஷிதாவை நிறுவ “மக்கள் அபிப்பிராயத்தை திரட்டுவதிலும்” “இராணுவ நுஸ்றாவை கோருவதிலும்” முன்வரவேண்டும்.

இஸ்லாம் மீள் எழுச்சிபெறவேண்டிய உன்னதமான வேளையில் நாம் பிரிந்துவிடாது சிரியாவினது கிலாபா நகர்வில் பாரிய பங்குபற்றி சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

Aug 30, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைந்துள்ள உண்மைகள் ! (பகுதி 02)

அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல் கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க முயன்று பார்த்தது . முடிந்ததா ?

'தாகூத்களுக்கு' அடிமைப்படுவதை விட சஹாதத் மேலானது என அந்த சமூகம் தெளிவாகவே முடிவெடுத்தது . ஆரம்பத் தோல்விகளில் அது அனுபவத்தைக் கண்டது . எதிரியை அளவிட்டது . USSR எனும் சுப்பர் பவரின் இராணுவ ,அதி நவீன ஆயுத வலிமை இங்கு சுவன ஆசையின் முன் செல்லாக் காசாக மாறியது . ஆப்கான் முஸ்லீம் உம்மத் கிடைத்ததைக் கொண்டே போராட்டத்தை தொடங்கியது .

இந்த தூய போராட்டம் தொடரும் வழியில் முழு உலகில் இருந்தும் ஜிஹாதிய ஆர்வளர்கள், இமாம்கள் என ஒன்று குவிக்கப் பட்ட ஒரு களமாகவே ஆப்கன் மாறிப்போனது .ஒரே கல்லில் பல மாங்காய் கள் விழுத்த இந்த ' ஜிஹாதை'அமெரிக்க பயன்படுத்தியது . 'அது ஏன் எப்படி ?.
காரணங்கள் இதுதான் .

1. பனிப்போரின் வலுச் சமநிலையை உடைத்து சோவியத் யூனியனின் அரசியல் இராணுவ பலத்தை கேள்விக்குறி ஆக்குவதன் ஊடாக தனது ஆதிக்க சக்தியை வலுப்படுத்துவது .

2. குறிப்பாக சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஜிஹாதிய ஆர்வளர்கள் ,இமாம்களை ஆப்கானை நோக்கி நகர்த்துவதன் ஊடாக மத்திய கிழக்கின் தனது பிராந்திய ஆதிக்கத்துக்கும் , அதன் ஆட்சியாளர்களுக்கும் (குறிப்பாக சவூதியின் மன்னராட்சிக்கு ) எதிரான சவால்களை தவிர்ப்பது .

3. சவூதி அரேபியாவுடன் , அமெரிக்கா இராணுவ பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இலகுவாக செய்து கொண்டது .(அதன் மூலம் பழைய இருப்பில் இருந்த ஆயுதங்களின் தொகுதிகள் ஆப்கானுக்கு வழங்கவென சவூதி அரேபியாவிற்கு விற்கப்பட்டது .)

4. குறித்த இந்த இலக்குகளை தனது நேரடித் தலையீடோ ,செலவோ இன்றி முஸ்லீம் உம்மத்தின் உயிர் ,உடமைகளை பலியிட்டு செய்ய வைத்தது .

(சவூதியின் முதவாக்கள் ஆப்கான் ஜிஹாத் விடயத்தில் அது ஜிஹாத் தான் என்றும் அதில் மரணிப்பவர்கள் 'ஷஹீத் ' எனவும் 'பொசிடிவ் ரிபோர்ட் ' கொடுத்தனர் . ஆனால் சிரிய விவகாரத்தில் மௌனம் !, எகிப்து விவகாரத்தில் அந்த கிங் கோப்ராக்கள் நெகடிவ் ரோல் ! முஸ்லீம் உம்மத்தே இது உனது சிந்தனைக்கு !)

இப்படி பல இலாப அறுவடைகளை ஆப்கான் , USSR யுத்தத்தை வைத்து அமெரிக்கா செய்துள்ளது .என்பது வியப்பான செய்தியாக சிலருக்கு இருக்கலாம் . இந்த ஆப்கான் 'அசைன்மெண்டுக்கு' பாகிஸ்தான் உளவுப் பிரிவான I .S .I தெளிவாகவே அமெரிக்கா பயன் படுத்தியது . இதன் பின் ஆப்கான் பெருநிலம் முஜாஹிதீன்களின் பக்கம் முற்றாகவே வீழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய சரீயாவை விரும்பிய ஆப்கான் மக்களுக்கு அந்த இலக்கை அடைய முடிந்ததா !? இந்த கேள்விக்கு விடையை இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன் .

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது ! அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே !


 

நம்புங்கள் 'கிலாபா ' நாளை உதிக்கும். 
மனித அடிமை விலங்கு தெறிக்கும் !

ஒரே தலைமையில் 'உம்மாஹ் ' நிமிர்ந்திடும் .
'பை அத் ' கொடுத்திடும் வாய்ப்பும் வந்திடும் !

'தாகூத்திய சக்திகள் அஞ்சி நடுங்கிடும் .
'ஜிஸ்யாவா '? ஜிஹாதா ? கேள்வி பிறக்கும் !

'வஹியின் ' வழிதனில் சட்டம் வேலிபோடும் .
குனிந்த முகங்களும் நிமிர்ந்து சிரிக்கும் !

நீதியின் உண்மையை உலகம் உணரும் .
முஹம்மதின் (ஸல் ) படையணி மீண்டும் ஜொலிக்கும் !

'சியோனிச 'அதிகாரம் ஓடி ஒதுங்கும் .
தூய பாலஸ்தீன் மீண்டும் கிடைக்கும் !

'பைத்துல் முகத்திஸில் ' அதான் ஒலிக்கும் .
'குப்ரின்' தடைகளை இஸ்லாம் ஒடிக்கும் ! 

 

ஏகாதிபத்தியம் இராணுவ சப்பாத்துக்களை பதிக்க இன்னொரு முஸ்லீம் பெருநிலம் தயாராகி வருகிறது!!

ஆளும் தாகூத்தின் அநியாயம் போதாமல் முதலாளித்துவ ஏகாதிபத்திய தாகூத்தும் தன் ஆதிக்கத் தாண்டவத்தை ஆட இன்னொரு முஸ்லீம் பெருநிலம்! அதுவும் நாளைய இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முன்னறிவிப்பாக வஹி குறிப்பிட்ட 'ஆஷ் ஷாம் 'இன்று தயாராவது இன்று எதற்காக !? ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களின் துள்ளியமான 'கபுருஸ்தானாக ' அது மாறுமா ? சமரச குள்ளநரித் தனத்தில் சுருண்டு விடுமா !? என்ற எதிர் பார்ப்புக்கு இன்ஷா அல்லாஹ் பதில் சொல்வார்கள் எம் போராளிகள். ஆயிரம் ஆயிரம் படை வந்தாலும் ஆட்கள் தொகையா வெல்லும் !? ஓ முஸ்லிம் உம்மாவே ! உனக்கு அல்குர் ஆன் பதில் சொல்லும் .

டமஸ்கஸ் எயார் போர்ட்டின் விளக்குகள் அனைக்கப்பட்டு விட்டன. ஓடு தளத்தில் பாதையை காட்டும் ஒளிர் விளக்குகளும் அனைக்கபட்டு விட்டன. இந்த விமானத்தளத்தை சூழ 03 மிலிட்டரி பேஸ்கள் அதன் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்தன. விமான நிலையம் முழுவதும் சிரிய கொமாண்டோக்கள் எப்போதும் இருந்து வந்தனர். அமெரிக்க வான் தாக்குதலின் முதல் இலக்கு சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமானத்தளமாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளதால் இப்போது அங்குள்ள இராணுவத்தினர் அங்கிருந்து ட்ரக் வண்டிகளிலும், துருப்புக்காவி கவச வாகனங்களிலும் ஏற்றப்பட்டு விமான நிலையத்தை அண்டிய நகரான al-Awameen Huran-இற்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

சிரிய பாதுகாப்பு தலைமை கட்டளைப்பீடத்தில் இருந்து அதன் அதிகாரிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இராணுவ ஆராய்ச்சி மையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டிடங்களை விட்டும் அதன் உத்தியோகத்தர்கள், காவலர்கள் வெளியேறியுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு டமஸ்கஸ்ஸின் உயர் பாதுகாப்பு வலைய பிரதேசங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இரவிரவாக ட்றக் வண்டிகளின் உறுமல்கள் கேட்ட வண்ணமேயிருந்தன. ஒரு சில அரசியல் ஆர்வலர்களின் தகவல்களின் படி இந்த ட்ரக் வண்டிகள் துறைமுகம் நோக்கியே சென்றதாக தெரிவித்துள்ளனர். இங்கே தான் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

பஸர் அல்-அஸாத்திற்கு சத்தாம் ஹுஸைனிடமும், முஹம்மர் கடாபியிடமும் கற்றுக்கொண்டவை நிறையவேயுள்ளது.

அதேவேளை ஈராக்கின் அமைச்சர்களும், லிபியாவின் அமைச்சர்களும் பேசிய வீர வசனங்களும், சூளுரைகளம், சவால்களும் இப்போது சிரிய அமைச்சர்களால் விடுக்கப்படுகின்றன. அமெரிக்க தாக்குதலை முறியடிக்க நாம் எப்போதும் தயார் என்று முழங்குகின்றனர் அவர்கள். எம்மை தாக்கினால் ஐரோப்பாவில் இரசாயன தாக்குதல் நடாத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று எச்சரிக்கைகளை விடுக்கின்றனர். இவற்றை வைத்தது பார்க்கும் போது சிரிய சண்டையிட தயாராவது போல தெரியவில்லை.

http://khandaqkalam.blogspot.ae/2013/08/blog-post_30.html?spref=fb

எகிப்திய மக்கள் சிரிய மக்கள் புரட்சியில் இருந்து பாடம் பெறவேண்டும்!


1. சிரிய மக்கள் மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்! அதே போன்று எகிப்தியர்கள் இஸ்லாத்தை அமுல்படுத்த முற்பட்டு அல்ஜீரியாவிலும் பலஸ்தீனிலும் இருமுறை தோல்விகண்ட மேற்கினது கருவியாகிய ஜனநாயகம் எனும் கருவியை தூக்கி வீசவேண்டும். அதற்கான கோஷத்தை கைவிடவேண்டும்.

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டும் என்று சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதேபோன்று “சிசி” யும் அவனது அடிவருடிகளும் இல்லாமல் போகவேண்டும் என்பதற்கு எகிப்தியர்கள் போராடவேண்டும்.

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் சிரிய மக்கள் கோருகிறார்கள்! அதுவே எகிப்திய மக்களது மூலமந்திரமாக வீரவசனமாக மாறவேண்டும்.

ஷாமில் இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி சிரிய மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் எகிப்தில் இன்று முன்னெடுக்கப்படும் சாத்வீக வழிமுறையில் இவற்றை சாதிப்பது எந்தளவுக்கு சாத்தியம்? இத்தகைய சாத்வீகவழிப்போராட்டம் எமது வீர வரலாற்றில் எத்தகைய பங்கை செய்துள்ளது என்பதனை சிந்தித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து ஹக்கை நிலைநாட்ட எகிப்திய போராடவேண்டும்.

ஜனநாயக வழிமுறையில் இஸ்லாத்தை அமுல்படுத்தும் போக்கையும் கோரிக்கையையும் கைவிடவேண்டும். அதுவே இஸ்லாத்திற்கு பலம் சேர்கும். முஸ்லிம் உம்மத்தை பாதுகாக்கும்.

அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?


ஈராக்கினுள்ளும் சிரியாவினுள்ளும் குப்ருடைய ஆட்சியாகிய ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு போலியான காரணங்களை முன்வைத்து களமிறங்கும் அமெரிக்க நலன்களுக்கு சாவுமணி அடிக்கப்படும் தருணமாக சிரியா மாறுமா?

ஆம், நிச்சயம் அல்லாஹ்வின் உதவி ஷாம் தேசத்து மக்களுக்கு உண்டு. ஏனெனில் அவர்கள்


1.மேற்கினது வழிமுறையிலான எந்த ஆட்சிமுறையும் வேண்டாம் என்று கோருகிறார்கள்!

2.அசாத்தும் அவனது குப்ரிய ஆட்சியும் இல்லாமல் போகவேண்டு கோருகிறார்கள்! 

3.அல்லாஹ் அருளியபடி ஷரீஆவின் அடிப்படையில் தங்களது வாழ்வியல் விவகாரங்கள் ஒழுங்கு படுத்தப்பட தேவையான கிலாபா ராஷிதா வேண்டும் என்றும் கோருகிறார்கள்!


இத்தகைய கோஷங்களுடன் தங்கள் உயிர்களை துச்சமாக கருதி போராடும் நிலையில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பான். குப்பார்களது அனைத்து சதி முயற்சிகளையும் தவிடுபொடியாக்குவான்.

அவர்கள் சிறிய கூட்டமாக இருந்தாலும் ஹக்கில் இருந்து கொண்டு இஸ்லாம் மீள நபிவழியில் அமுலாக்கப்பட வேண்டிய அரசாகிய கிலாபா ராஷிதாவை கோரியபடி போராடுகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் நிச்யமாக அல்லாஹ் அவர்களது கரத்தைப் பலப்படுத்துவான்! எதிரிகளை விரண்டோடச்செய்வான்.

எமது வீரவரலாற்றில் எத்தனையோ படிப்பினைகளை முஸ்லிம் உம்மத் சந்தித்துள்ளது. “ஹந்தக்” எமக்கு மிகப்பெரும் படிப்பினையைத் தருகிறது. “பத்ர்” எமக்கு மேலும் நமது நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.

அல்லாஹ் ஷாம் மக்களது கால்பாதங்களை நிச்சயம் இஸ்திரப்படுத்துவான். அவன் எப்போதும் முஃமீன்களுடன் இருப்பவன். நிச்சயம் அவனது நூரை பிரகாசமடையச் செய்வான்.

எமது இந்த நம்பிக்கைக்கும் பிரார்த்தனைக்கும் பலம்சேர்க்கும் பல நன்மாராயங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சலமா பின் நுபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) கூறினார்கள்.

'முஃமீன்களின் சாம்ராஜியம் கட்டியெழுப்பப்படுவது ஷாமில் இருந்துதான்' (தபராணி)

Aug 29, 2013

என்றும் மறவாத நினைவுகளில் புதைத்துள்ள உண்மைகள் !


சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .

" அரசியல் அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் " என்ற வார்த்தைகளின் வடிவமான இந்த தேசத்தின் உண்மை பலருக்கு புரியும் போது, தங்கள் நெற்றிகளுக்கு முன்னாலும் ஒரு துப்பாக்கி தோட்டாவை துப்பத் தயாராக இருந்தது மட்டுமே கடைசிப் பார்வையாக இருந்தது .

"நூறு பேச்சு மேடைகளும் , ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற இவர்களின் இரண்டாம் கடவுள் 'லெனின் கிராட் ' சொன்னதை கச்சிதமாக செய்தது அதன் உளவுப் பிரிவான கே .ஜி .பி . யும் ,அதன் இராணுவமும் .

நாஸ்திக வாத அகீதாவை கொண்ட இந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசோடு முஸ்லீம்கள் பலப்பரீட்சை செய்த முதல் களமே ஆப்கானிஸ்தான் .இந்த செங்கரடிகளின் இராணுவ மேலாதிக்க வாதத்தின் அழிவுக் கதவுகளை ஆப்கான் உத்தியோக பூர்வமாக திறந்தது 1970 களின் இறுதிப் பகுதியிலேதான் ஆகும் .

1990 கள் வரை தொடர்ந்த இந்த பலப்பரீட்சை மூட்டை முடிச்சுகளோடு ஆப்கானை விட்டு சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் அதன் இராணுவ வலிமை பற்றிய 'இமேஜ்' ஜுஜூபி வடிவத்தை அடைந்தது .இந்தப் போரில் இன்னொரு பார்வையாக புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் வியட்நாமின் படு தோல்விக்கு சோவியத் யூனியனை பழிவாங்க அமெரிக்காவுக்கு நல்ல சந்தர்ப்பமாகவும் ஆகியதாகும் .

சோவியத் ஆப்கானில் அடைந்த இராணுவத் தோல்வி மற்றும் அதன் ஆட்சித் தலைவராக இருந்த மிக்கைல் கொர்பச்சோ வழங்கிய சீர்திருத்தக் கொள்கைகள் என்பன கொம்யூனிச அகீதாவை அங்கு கோமா நிலைக்கு ஆக்கி முதலாளித்துவத்திடம் சரண்டராகும் நிலைக்கு ஆக்கியது .இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தொடர்ந்த பனிப்போர் எனும் ஆதிக்கச் சண்டைக்கு முற்றுப் புள்ளியும் வைத்தது . இந்த தோல்வி அரசியலின் முடிவுரைப் பந்தி ஆப்கான் களத்தில் இருந்துதான் எழுதப் பட்டது என்பது 'ஓபன் சீக்கிரட்' .

தெற்காசியாவில் இருந்த அதிகம் அறியப்படாத ஒரு முஸ்லீம் பெருநிலத்தை உலக முஸ்லீம் உம்மாவின் இதயங்களில் பசுமையாக விதைத்ததும் இந்த தியாகப் போராட்டம்தான் என்றால் அதுவும் மறுக்க முடியாதது .அதேபோல கம்யூனிச பிசாசை விரட்ட அமெரிக்கா எனும் பூதம் ஏன் பின்னால் நிற்கின்றது !? என்பதை உணராமல் முஸ்லீம் உம்மா போராடிய தவறும் மறுக்க முடியாதது தான் ஆகும் .

'புரபிட் அன்ட் பெனிபிட் பேசில்' துரோகத்தனமான 'டபுள் கேம்' கொடுப்பது U .S பொலிசியின் பிரதான எண்ணக்கரு என்பது புரியாமல் ,அந்த முதலாளித்துவம் விரித்த சதிவலையில் நாஸ்திக செங்கரடிகள் எதிர்ப்பு என்ற ஒருபக்க பார்வையை மட்டுமே முஸ்லீம் உம்மத் பதித்தது .

'அல்லாஹு அக்பர்' என கையில் இருந்த 'கிளஸ் நிகோ ரைபிளின் ரிகரை ' தட்டுவது பற்றி இருந்த ஆர்வம் ,தனது தலையில் இருந்த சிந்தனை 'ரிகரை தட்டுவதில் இந்த உம்மாவுக்கு அன்று இருக்கவில்லை .நாஸ்திக அகீதாவுக்கு எதிரான கடுமையான பார்வை நாசகரமான 'செக்கியூலரிச முதலாளித்துவக் கடவுளின் ஆதிக்கம் பற்றி மற்றும் குள்ளநரித்தனம் பற்றி ஆராய விடவில்லை . அது எப்படியான திட்டமிடல் !? நடந்தது என்ன !? இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன்.