Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Jan 27, 2016

பெண்மணியே கேள்!


*******************
பெண்கள் விவகாரத்தில் அவசியமான வேலிகள் மீறப்பட்டு அவளது பாதுகாப்பு, இயல்புநிலை தாண்டிய பல விவகாரங்களை முதலாளித்துவ மேற்குலகு சுதந்திரம் என்ற பெயரில் அவள் மீது திணித்துள்ளது! இந்த இக்கட்டான சூழலை அறிவு பூர்வமாக சந்திப்பது என்ற தரத்தை முஸ்லீம் உம்மத் இழந்த நிலையில் வெறும் சம்பிரதாய பூர்வமாக அதை எதிர் கொள்ள நினைத்ததால் ஏகப்பட்ட தவறுகளை அது விட்டுள்ளது!
இதனால் பெண்மையின் கண்ணியத்தை காக்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் பார்வை பெண்ணிய ஒடுக்குமுறையாக சுட்டிக்காட்ட இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக மாறியது. ஆனால் பிரத்தியோகமாக சட்டங்கள் சொல்லப்படாத அனைத்து விவகாரங்களிலும் ஆணுக்கு நிகராக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை பெண்களுக்குண்டு. அதில் பிரதான விவகாரம் கல்வி கற்கும் உரிமையாகும். 
பெண்வைத்தியர்கள், தாதிகள் என அவர்களுக்கே என பிரத்தியோகமாக இருக்க வேண்டிய பல விவகாரங்களில் கூட முஸ்லீம் உம்மா சரியானதும் தகுதியானதுமான வழிநடாத்தலின்றி தவிக்கிறது! மேற்கு பெண்ணை போகப் பொருளாக பார்க்க முஸ்லீம் உம்மத்தோ பதுக்கி அனுபவிக்கும் பொருளாக பார்க்கிறது! இந்த இரண்டுமே முரண்பட்ட தீவிரங்களே! 
மருத்துவம், சமூக அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லீம் பெண்களின் தேவை பர்ளு கிபாயா என்ற நிலையை தாண்டி பர்ளு ஜன் என்ற அளவுக்கு ஏறத்தாழ வந்துவிட்டது. நடக்கும் இஸ்லாமிய எழுச்சியில் அவளின் பங்கு ஆணுக்கு நிகரானதென்பது உம்மத்திற்கு புரியப்படுத்த வேண்டும். தொடரும் எழுச்சிப் பணிகளில் நவ சுமையாக்கள் சுமைதாங்க தயாராகுவார்களா!?

Oct 26, 2015

காமத்திபுரா பெண் விடுதலையின் கௌரவச் சின்னமா !?

 
( இது 16/11/2011 இல் ' குமுதம் ' இதழில் வந்த ஒரு நேரடி ரிபோர்டின் சுருக்கம்.

வல்லரசாகும் தகுதிக்கான தராதரங்களில் இந்தியா மேற்கின் முதலாளித்துவ சித்தாந்த தரத்திலும் அதிலிருந்து உதிக்கும் சிந்தனை தரத்திலும் எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை உணர்ந்து கொள்ள இந்த விடயங்கள் சிறந்த உதாரணமாகும் .
 
                                                 குடி குடியை கெடுக்கும் என்பார்கள் வரி வருமானத்துக்காக அதை குடியிருக்கவும் விட்டிருப்பார்கள் ! சாதிப் பூசல் நாட்டைக் கெடுக்கும் என்பார்கள் சாதி , மத ,பேதங்களில் இருந்துதான் ஆதிக்க அரசியலுக்கு கடிவாளம் போடுவார்கள் ! 
 
                             அதிகாரத்தின் மாற்றமோ அதிகாரிகளின் மாற்றமோ காலத்தின் தேவையல்ல .அவர்களின் தலையில் ஏறி அமர்ந்து சாவகாசமாக அவர்களை இயக்கும் முதலாளித்துவ சித்தாந்தம் மாற்றப்படாத வரை உருப்படியாக எதுவும் நடக்கப் போவதில்லை . இன்று காமாத்திபுரா எப்படி இருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால் நேரு முதல் மோடி வரை இந்தியா அப்படியே தான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஏன் முழு உலகமே இத்தகு சுயநலப் பேய்களின் பிடியில் தான் இருக்கிறது. அது செவ்வாய்க்கு ராக்கெட் விட்டாலும் சரியே !) 


இந்தியாவின் மும்பாயின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு சின்ன தெருதான் இந்த காமத்திபுரா. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் பல தெருக்களில் குடிசைத் தொழில் போல் விபச்சாரம் வியாபாரமாக நடைபெறுகிறது . இருந்தாலும் இந்த காமத்திபுரா மட்டுமே இதற்கு விசேடமாக அடையாள படுத்தப் படுகிறது . 1795 இல் கட்டுமானப் பணிகளுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித் தொழிலாளிகள் வாழ்ந்த பகுதியே இந்த காமத்திபுரா.


ஹிந்தி மொழியில் 'காம் வாலி ' என்றால் வேலைக்காரி என்று அர்த்தம் .அந்த அடிப்படையிலேயே இத்தகு பெயர் அப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது . பிற்பாடு 1880 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் அந்தப்பகுதி இராணுவ பாதுகாப்பு வளையமாக்கப் பட்டிருந்தது . அன்று காலனித்துவ சிப்பாயின் காமவெறி தீர்க்க இங்கிருந்த பெண்கள் தள்ளப்பட்டார்கள் . அவர்கள் சுதந்திரம் என்ற போலிப்பெயரோடு வெளியேறியபின் அவர்களின் இடத்தை நவ காலனித்துவத்தின் கைக்கூலிகளான இந்தியப் பணக்காரர்கள் பிடித்துக் கொண்டதால் வேறுவழியின்றி அந்தப் பெண்கள் அதே தொழிலை தொடர்ந்தார்கள் . 


அந்த இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் சென்றால் ' காங்கிரஸ் ஹவுஸ் ' என்ற தெரு உள்ளது . இங்கிருக்கும் விபச்சார விடுதிகள் 'காஸ்ட்லியானவை' இங்குதான் கடத்தி வரப்படும் பெண்கள் விற்கப் படுகிறார்கள் .'மேக்ஸிமம்' பயன்படுதப்பட்டதன் பின்னர் 'லோக்கல்' விடுதிகளுக்கு விட்கப்படுவார்கலாம் !


இன்னும் ஒரு சகிக்க முடியாத கொடுமை இந்த 'காமத்திபுராவில் ' இருந்து சில நிமிட தூரத்தில் 'பீலா ஹவுஸ் ' எனும் தெருவுக்குள் நுழைந்தால் இளம் பெண்களோடு சிறுமிகளும் நின்று அழைப்பு விடுப்பார்களாம் ! ஒரு தெருவில் பாதிவரை விபச்சார விடுதிகளும் மீதி குடும்பங்களும் வாழும் குடியிருப்புகள் என வினோதமான பகுதியாக இந்த காமத்திபுரா இருக்கின்றது ." மும்பை குடும்பப் பெண்களை காக்கும் காவல் தெய்வங்களாக காமத்திபுரா பெண்கள் இருப்பதாக ஒரு ஒரு போலீஸ்காரர் பெருமை வேறு பேசிக் கொள்கிறாராம் ! காரணம் அப்படி இல்லா விட்டால் பாலியல் கிரைம் மும்பாயில் பன்மடங்காகி விடுமாம் !? 


கிடைத்த தகவல்களின் படி இப்படியான பல பகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது . மலாலாவுக்காக குரல் கொடுக்கும் பெண்ணுரிமை அமைப்புகளின் பார்வையில் இது பெண் விடுதலையை காட்டி நிற்கும் கௌரவமான சுய தொழில் போலத்தான் தெரிகின்றதோ !?

நன்றி
ஹந்தக் களம்
 

Jun 1, 2014

ஹிஜாப் மற்றும் நிகாப் தொடர்பான குற்றச்சாட்டு…?


ரப்புல் ஆலமீனான வல்ல நாயனின் வழிகாட்டலின் கீழ் மனித வாழ்வு ஒழுங்குபடுத்தப்படவேண்டும் எனும் சிந்தனையில் முஸ்லிம்கள் முனைப்புடன் செயற்படுவது இன்றுள்ள மேற்கினது மனிதச் சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட வாழ்வியல் வழிகாட்டலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உணரப்படும் ஒரு வாழ்க்கைமுறையாக நோக்கப்படுகிறது. இதனால் இஸ்லாம் தொடர்பான பிழையான மக்கள் அபிப்பிராயத்தினை உலகம் முழுவதும் திரட்டும் பணியை இன்றைய ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ சக்திகள் முன்னெடுப்பதனை காணலாம்.அந்த வகையில் இன்று ஹிஜாப் மற்றும் நிகாப்தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் மேற்கினால் முன்வைக்கப்படும் நிலையில் அதன் தாக்கத்தை இலங்கைபோன்ற கீழைத்தேய நாடுகளிலும் நாம் உணர ஆரம்பித்துவிட்டோம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் பிழையான வாழ்வியல் கண்ணோட்டத்தில் இருந்து பிறப்பதால் அவற்றை ஒரு முஸ்லிம் எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முற்படக் கூடாது. அது எமது எதிரிகளுக்கு பலம் சேர்பதாக அமைவதுடன் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் செயல்களில் எம்மவர்களையும் இணைத்துவிடும்.

இன்று ஹிஜாப் மற்றும் நிகாப் தொடர்பான குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டுகளை நாம் பின்வருமாறு நிரல்படுத்த முடியும்.

1.ஹிஜாப் மற்றும் நிகாப் சமூகத்தை கூறுபோடுவதாக அமைகிறது.
2.ஹிஜாப் மற்றும் நிகாப் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
3.ஆண்களைவிட பெண்களை தாழ்ந்த நிலையில் நோக்குகிறது.
4.பெண்கள் சமூகசெயற்பாடுகளில் வினைத்திறனுடன் ஈடுபடத் தடையாக உள்ளது.

அதற்கு பல்வேறு அரசியல் பின்னணிகள் இருப்பினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதுடன் இஸ்லாம் உலகில் மீள் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்கான குற்றச்சாட்டுகளாக அமைவதுடன் அவர்களது தாராண்மை வாதக் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் அச்சுறுத்தலாக உணரப்படுகிறது. அத்துடன் இஸ்லாம் மீள்எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்கான பல்வேறு சதிமுயற்ச்சிகளில் ஒன்றாகவே ஹிஜாப் மற்றும் நிகாபுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்ற அடிப்படையை ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டும்.

ஆனால் இன்று எமது சகோதரர்கள் மேற்கினது சூழ்ச்சியின் ஆழம் விளங்காமல் நிகாப்பை தடைசெய்யக் கோரும்போது அது இஸ்லாத்தில் அவசியம் இல்லை என்ற கருத்துவேறுபாடுகளை முன்வைத்து குப்பார்களது நோக்கங்களை மிக இலகுவாக எட்டும்படியாக்கி விடுகிறார்கள். நாம் விரும்பினால் நிகாப் அணியும் போக்கிற்கும் அதனை கழட்டும்படியான வற்புறுத்தலில் நாம் அணியாமல் விடுவதற்கும் இடையில் பாரிய இடைவெளி உள்ளது என்பதனை உணரவேண்டும்.

உண்மையில் குப்பார்கள் எத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிஜாப் மற்றும் நிகாபை களையச் சொல்கிறார்கள் எனும் பின்னணியறிந்து அது நியாயமற்றது என்றும் அது தனிமனித சுதந்திரம் என்றும் அவரவர் மதச்சுதந்திரம் என்றும் வாதிட்டு நிகாபை நாம் பாதுகாக்க வேண்டும்.

இறுதியாக முஸ்லிமாகிய நாம் எமது தீனில் மிக உறுதியாகவும் திடசங்கட்பத்திடனும் இருக்க வேண்டும். இஸ்லாமும் முஸ்லிமும் ஏன் கொச்சைப் படுத்தப்படுகிறார்கள் எனும் பின்னணியை அவசியம் அறிந்து அதற்கான பரிகார சிந்தனை மாற்றீட்டை வழங்கி இஸ்லாம் முஸ்லிம்களை எவ்வாறு ஒரு பொக்கிசமாக கருதி கண்ணியமாக நடத்துகின்றது என்ற பேருண்மையை இன்றைய முதலாளித்து மதஒதுக்கல் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தாராண்மைவாதக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு இஸ்லாத்தை முன்வைக்க வேண்டும்.

Mar 24, 2014

'பெண்' எமது புரிதல்களுக்கு அப்பால் !!!

" அந்த குறிப்பிட்ட மரத்தை மட்டும் நெருங்காதே. என்ற இறைவனின் கட்டளையை சாத்தான் மறக்கடித்தான் .அவனது ஆசை வார்த்தைகளில் ஆதாமும் (அலை ) ,ஏவாளும் (அலை ) ஏமாந்தது உண்மை . இருந்தும் அந்த முதல் பாவத்தை நோக்கி ஆதத்தை (அலை ) ,ஏவாள் (அலை ) தூண்டினாள் என குத்திக் காட்டுவது ஆண் ஆதிக்க அராஜஹம் இல்லையா!? அப்படியானால் இந்த ஆதி வரலாற்றில் இருந்தே பெண்கள் மீதான ஆணிய அடக்குமுறை தொடங்கியதா !?
இப்படி ஒரு சகோதரி என்னிடம் கேட்டாள் ! பெண் இனத்தின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் கயமை மிக்க இத்தகு வரலாற்றுப் புரிதல்களால் காலாகாலமாக பெண்கள் ஒரு ஈனப்பிறவியாக பார்க்க கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனக்கும் புரிந்தது . ஆனால் உண்மை என்ன ?
பெண்ணின் படைப்பிலக்கணம் மார்க்கத்தின் அடிப்படையில் புரியாமல் சந்தர்ப்ப வாத குற்றத்தை சுமத்தி நிற்பது ஒரு மகா அநியாயமே .முதலில் படைக்கப்பட்டது ஆதம் (அலை ) இவர் ஆண் .மண்ணிலிருந்து படைக்கப்பட்டார் .பின் ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டது எதிலிருந்து !? இந்த இடத்தில இருந்தே வாத விவாதங்களுக்கு அப்பால் உள்ள ஒரு இயற்கையின் உண்மை புரியப்பட வேண்டும் .அதுதான் ஆதத்தின் (அலை ) விலா எலும்பில் இருந்தே ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டாள் என்பதே இறை வேதம் காட்டி நிற்கும் அடிப்படை .
அதாவது பெண் என்பவள் பிறிதொரு கூறு அல்ல . ஆணின் ஒரு பாகம் .இந்த இடத்தில இருந்தே ஆணுக்கும் ,பெண்ணுக்குமான பொதுச் சுதந்திரத்துக்கான அடிப்படை அரசியலை இறைவன் வகுத்து விடுகிறான் .விடயத்தை இப்படி புரியாமல் அவளை மட்டுப்படுத்துவதும் ,கட்டுப்படுத்துவதும் மகா தவறுகளே .
இன்னும் ஆணுக்கும் ,பெண்ணுக்குமான வாழ்வியல் ஒழுங்கையும், சட்ட திட்டங்களையும் காட்டித் தரும் தகுதியும் இறைவன் ஒருவனுக்கே உண்டு . அவன் படைத்ததால் கட்டளையிடும் தகுதி அவனுக்கு மட்டுமே உண்டு . இதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது .ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ற இயற்கையின் நியதியை தவிர்ப்பதோ ,மாற்றுவது மிகப்பெரிய குற்றம் .
எனவே பெண்ணை இழிவு படுத்தி பார்க்கும் ஆண் ,அடிப்படையில் தன்னையே இழிவு படுத்தி பார்க்கிறான் என்பதே உண்மை ."உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே ." எனும் இறை தூதர் (ஸல் ) வாக்கு சொல்லி நிற்கும் உண்மை யாதெனின் ,ஒரு ஆணின் உண்மை உருவத்தை காட்டி நிற்கும் பண்புக் கண்ணாடியாக பெண்ணே இருக்கிறாள் என்பதே . புரிந்தால் (குறிப்பாக மார்க்கத்தின் பெயரால் )பெண்ணை அவமதிக்கும் ஆண்கள் தம் செயல்களை சற்று அடக்கி வாசிக்கட்டும் 

Mar 17, 2014

ஒரு பெண்ணின் மனதை தொட்டு .....


ஒரு ஹவ்வா (அலை ) யின் புத்திரி பேசுகிறாள்

கிடைக்கும் இடைவெளியில் புகுந்து என் அங்கத்தை அனுமதியின்றி அளவிட்டு , அற்ப சுகம் காணும் ஆணிய அசிங்கப் பிறவிகளுக்கு மத்தியில் நானும் ஒரு மனிதப் பிறவியாக வளம் வரும்போது வெட்கித்துப் போகிறேன் .

பெண் விடுதலை ,சுதந்திரம் என்ற சுயநல கோஷங்களுக்கு மத்தியில் ,ஒரு கௌரவப் பண்டமாகவா நான் பார்க்கப் படுகிறேன் !? இது தெளிவான ஏமாற்று .சமத்துவம் என்ற ஆசை காட்டி சல்லாபிக்கும் சந்தர்ப்பங்களை தேடி அலையும் இந்த சீர்கெட்ட நாகரீகத்தை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது.

தன் தாயை , தங்கையை , மகளை பார்க்கத் துணியாத பாத்திரத்தில் மாற்றான் தாயை ,தங்கையை , மகளை பார்க்கத் துணியும் ஆணிய ஜந்துக்கள் முதலில் தனது சொந்த இரத்தங்களை துகில் உரித்து சுவைத்துப் பார்க்கட்டும். அதுதான் விலங்குப் பண்பு .அதையும் செய்வார்கள் இந்த அசிங்கப் பிறவிகள் என்பதுதான் காலத்தின் கோலம் !இந்த வெறிபிடித்த கலாச்சாரத்தை எதிர்கொள்வது பெண் இனத்துக்கு ஒரு ஓயாத போராட்டமே!

கற்பழிப்பு என்ற சொல்லை வன் புணர்வாக எழுதி ,பெண் விடுதலைக்கு அச்சாணி நாம் என மார் தட்டிய பத்திரிகைகள் நடுப்பக்கத்தில் commercial ஆக இந்த காமப் பேய்களுக்கு மாமா வேலை செய்யும் பச்சோந்தி தனத்தை என்னவென்று சொல்வது . இந்த இரட்டை வேடம் அழிக்கப் பட வேண்டும்.

விளம்பர உலகில் விட்டில் பூச்சிகளாக எம் பெண்ணிய மாண்பு மரணித்துப் போவது ஒரு சராசரி நிகழ்வு. அதில் பெண் விடுதலை காண்பது அதி முட்டாள் தனம் .கோடிகளாக பணம் பண்ணும் கேடிகளின் சில்லறைக்காக பெண்களான நாமும் காட்சி விபச்சாரத்தில் பங்காளி ஆவதா!? இந்த முதலாளித்துவம் மூக்குடைக்கப் பட வேண்டும்.

உணவின்றி ,உடையின்றி,வீடின்றி வாடி வதங்கி வீதியில் நிற்கும் ஆபிரிக்க சிறுமியின் அந்தப் பகுதியை பார்த்து எச்சில் வடிக்கும் தரம் கெட்ட கலாச்சாரம் அழிக்கப்பட வேண்டும் . அதற்கு பெண்களாகிய நாம் தெளிவோடு துணிய வேண்டும் . தாய்க்கும் தாரத்துக்கும் இடையிலான ஒற்றுமையும் வேற்றுமையும் ஆண்கள் உலகத்துக்கு புரியப்படுதப் படவேண்டும் இது காலத்தின் தேவை .எப்படி?

இவள்
அசிங்க முற்றுகையில் அகப்பட்டுள்ள
ஹவ்வா (அலை ) அவர்களின் புத்திரி

Mar 10, 2014

பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது…!

பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது. அவர்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பர்க்கிறது. நபி(ஸல்) கூறினார்கள். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவராவார். நான் எனது மனைவி மார்களிடம் சிறந்தவனாக இருக்கிறேன்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சகலவிதமான உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது. பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு படைப்பாளனால் வழங்கப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி அவர்களது வாழ்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க, ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட் டு வாழ்வின் சகல துறைகளுக்குமான வழிகாட்டலைக் கொண்ட மார்க்கமே இஸ்லாமாகும்.

அதே நேரம் பெண்ணியம் கதைக்கும் மேற்கு பெண்களை வெறும் போகப்பொருளாக நடத்துவதுடன் இயற்கைத் தன்மைக்கு முறணான ஒரு செய்தியை (ஆணும் பெண்ணும் சமம்) கூறி பெண்களை உசுப்பேற்றி அவர்களது நிம்மதியை பறித்து அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருப்பதனைக் காணலாம்.
மேற்கத்தைய இந்த தாராண்மைவாதக் கோட்பாடு மற்றும் எல்லையற்ற தனிமனித சுதந்திரத்தினடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட வாழ்கை முறையினால் சமூகத்தில் தனிமனிதன் சீரழிந்து கிடப்பது மாத்திரமன்றி குடும்பவாழ்வும் சீர் குலைந்து கணவன் மனைவி உறவு மற்றும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான பிணைப்பு பலவீனமுற்றுக் காணப்படுகிறது. இது குடும்பவாழ்வில் நிம்மதியில்லாத நிலையை தோற்றுவிப்பதுடன் பல்வேறுவகையான துஸ்பிரயோகங்கள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்துவிடக் காரணமாகிறது.

இத்தகைய மேற்கினது மொடலாக இன்று பெண்ணியம் கீழைத்தேய நாடுகளிலும் பேசப்பபடுகிறது.

மதத்தினது தலையீட்டை பொதுவாழ்வில் ஒதுக்கி மனித சிந்தனையடிப்படையில் கட்டியெழுப்பப் படும் மேற்குலகம் ஆத்மீக வறுமையால் சீரழிந்து காணப்படும் இந்நிலையில் இஸ்லாம் அழகிய வாழ்கை முன்மாதிகளை சுமார் 1300 ஆண்டுகாலம் உலகிற்கு வழங்கியுள்ளதுடன் அதுவே மனிதனின் இயற்கைத் தன்மைக்கு ஏற்றதாகவும் மனிதனை திருப்திப்படுத்துவதாகவும் அமையும். இவ்வுண்மையை உணர்வோம்! இஸ்லாமிய வாழ்வின் முன்மாதிரியை எடுத்தியம்புவோம்!

இஸ்லாத்தில் பெண்களது கண்ணியம் எவ்வாறு பேணப்படவேண்டும்...?

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் மக்களை நோக்கி ஆற்றிய உரையின் ஒரு பகுதி இஸ்லாத்தில் பெண்கள் எவ்வாறு கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்பேருரையில் இன்றைய பெண்ணியம் கதைக்கும் மேற்குலகிற்கு மிகச்சிறந்த படிப்பினைகள் உள்ளது. இவற்றை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும் பெண்களும் மிகவும் அக்கறையுடன் தமது வாழ்வில் ஒழுகிட கடமைப்பட்டுள்ளனர்.

“ஓ மக்களே! உங்கள் பெண்கள் குறித்து குறிப்பிட்ட உரிமைகள் உங்களுக்கு உண்டு என்பது உண்மை. ஆனால் அவர்களுக்கும் உங்கள் மீதான உரிமை உள்ளது. அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவனை நம்பியநிலையில் அவர்களை உங்கள் மனைவியர்களாக நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள் என்பதனை நினைவு கூறுங்கள்! அவர்கள் உங்களுக்கு உரிமையானவர்களாக உள்ள நிலையில் அவர்கள் கருணையுடன் உணவூட்டப்படவும் ஆடையணிவிக்கப்படவும் உரிமைபெற்றவர்கள். நீங்கள் அவசியம் உங்கள் பெண்களை நல்லமுறையில் நடத்தவேண்டும். மேலும் அவர்கள் அர்பணிப்புள்ள உங்கள் பங்காளிகளாகவும் உதவியாளர்களாகவும் இருப்பதால் நீங்கள் அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும். மேலும் நீங்கள் அனுமதிக்காத எவருடனும் அவர்கள் சகவாசம் கொள்ள உரிமை பெற்றவர்கள் அல்ல. அத்துடன் அவர்கள் தங்கள் கற்பை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.”

ஆண்-பெண் வேறுபாடு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்..?

இஸ்லாம் ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி இரு பாலாருக்குமிடையே சமத்துவத்தைப் பேண விரும்புகிறது. சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக இஸ்லாம் ஆண் -பெண் இரு பாலாருக்குமிடையே அனைத்து விவகாரங்களிலும் சமத்துவத்தைப் பேணுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“பெண்கள் ஆண்களின் சரிபாதி, சமபாதி.” (அஹ்மத், அபூதாவூத்)
“ஆணோ பெண்ணோ உங்களில் ஒருவருடைய செயலையும் நான் வீணாக்க மாட்டேன். நீங்கள் ஒரு சாரார் மற்றைய சாராரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றீர்கள்.” (ஆலு இம்ரான்: 195)

ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் அவர் செய்கின்ற எந்த ஒரு செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக அல்லாஹ் மனிதர்களுடைய செயற்பாடுகளையே பார்க்கிறான் எண்ணங்களுக்கேற்ப அவர்களது செயற்பாடுகளுக்கு கூலி வழங்குகின்றான். இதில் எத்தகைய வேறுபாட்டையும் அவன் காண்பிப்பதில்லை.

“ஆணோ பெண்ணோ முஃமினாக இருக்கும் நிலையில் எவர் நற்காரியங்கள் செய்கிறாரோ நிச்சயமாக நாம் அவருக்கு நல்ல வாழ்க்கையை வழங்குவோம். மேலும் அத்தகையவர்கள் செய்து கொண்டிருந்த நற்காரியங்களுக்கு நிறைவான கூலியையும் நாம் கொடுப்போம்.” (அந்நஹ்ல்: 97)

ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி யாராக இருந்தாலும் ஈமான் கொண்ட நிலையில் நற்காரியங்கள் செய்கிறாரோ அவருக்கு நல்ல வாழ்க்கையையும் அவர் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு உரிய கூலியையும் நிச்சயமாக நாம் வழங்குவோம் என்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.

“ஆணோ பெண்ணோ யார் முஃமினாக இருக்கும் நிலையில் நற்காரியங்கள் செய்கின்றாரோ நிச்சயமாக அவர்கள் சுவனம் நுழைவார்கள்.” (அந்நிஸா: 124)

ஆண் என்ற காரணத்தினாலோ அல்லது பெண் என்ற காரணத்தினாலோ எவருக்கும் அணுவளவு அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அவர்களது செயற்பாடுகளுக்கான கூலி கூட்டியோ குறைத்தோ வழங்கப்பட மாட்டாது. அனைவரது செயலுக்கும் நிறைவான கூலி கிடைக்கும். இதில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையவே கிடையாது என்று இந்த வசனம் தெளிவாகச் சொல்கிறது.

இம் மூன்று ஸூராக்களில் வரும் முப்பெரும் வசனங்கள் இஸ்லாம் எவ்வாறு பால் வேறுபாட்டைக் கவனத்திற் கொள்ளாமல் ஆணையும் பெண்ணையும் ஒரே தரத்தில் வைத்து நோக்குகிறது என்பதனை மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கின்றன.

பெண்கள் தொழில் செய்தல் இஸ்லாம் கூறும் அடிப்படைகள்

1. பெண்களின் இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும்

பெண்கள் எந்த விவகாரத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் அவர்களுக்கே உரிய இயல்பு பாதுகாக்கப்படல் வேண்டும் பெண்மைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது. மட்டுமல்ல அவர்களுக்கே உரிய இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கே உரிய தனியான இயல்பு, அவர்களின் சுபாவம், அவர்களின் தன்மை என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இது இஸ்லாம் கூறும் முதலாவது அடிப்படை.

2. வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது

இஸ்லாம் வலியுறுத்தும் மற்றுமொரு மிக முக்கியமான விடயம்தான், வீடு என்பது பெண்களின் ராஜ்ஜியம் என்பதாகும். அந்த ராஜ்ஜியத்தின் தலைவியாக இருப்பவள் பெண். ஆணின் துணைவியாக, குழந்தைகளின் தாயாக, வீடு என்ற சாம்ராஜ்ஜியத்தின் சொந்தக்காரியாக, நிருவாகியாக இருப்பது பெண்ணே. எனவே, வீடு என்ற சாம்ராஜ்யத்தின் நிர்வாகம், பரிபாலனம் பாதிக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீண்ட ஒரு ஹதீஸிலே சொன்னார்கள்:

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்...”
தொடர்ந்து கூறினார்கள்,

'ஒரு பெண் தன்னுடைய கணவனது வீட்டில் பொறுப்புதாரியாக இருக்கிறாள். அவளுடைய பொறுப்புகள் பற்றி நிச்சயமாக அவள் விசாரிக்கப்படுவாள்.' (அல்புகாரி, முஸ்லிம்)

எனவே, மறுமையில் வீட்டு விவகாரம், வீட்டின் நிர்வாகம், அதன் பரிபாலனம் பற்றி ஆணை விட பெண் விசாரிக்கப்படுவாள் என்பது மிக முக்கியமானது.

3. மார்க்கம், குடும்பம், சமூகம் பாதிக்கப்படக் கூடாது

இஸ்லாத்தை குடும்பம் சார்ந்த மார்க்கம் என்பார்கள். இஸ்லாம் குதூகலமான, சந்தோஷமான, மனநிம்மதிமிக்க குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட ஒரு மார்க்கம். அதனை அடுத்ததாக இஸ்லாத்தை சமூகம் சார்ந்த மார்க்கம் என்றும் வர்ணிப்பார்கள். உண்மையில் இவ்விரண்டும் இணைந்த ஒரு பரிபூரணமான மார்க்கம்தான் இஸ்லாம். இந்த இரண்டையும் முறையாகக் கையாள்வது ஒரு பெண்ணின் பொறுப்பாகும்.

பெண்ணியம் பேசும் கூட்டத்திற்கு அல்லாஹ் கூறும் செய்தி...?

இரவு பகலும் எவ்வாறு அதன் தன்மையில் கடமையில் வேறுபட்டு அதற்குரிய தன்மையை கொண்டுள்ளதோ அதேபோன்று ஆணையும் பெண்ணையும் வேறுபட்ட தன்மையில் அவரவர்களுக்கு தனித்துவமான பணிகளுடனும் பொறுப்புக்களுடனும் படைத்துள்ளான் என்பதனை மிக அழகாக தனது திருமறையில் விளக்குகிறான்.

ஆனால் அவர்கள்கள் விடயத்தில் பொதுப்படையாக இருப்பது அவர்கள் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் பாவங்களை விட்டும் தவிர்ந்து அவனது கோபத்தை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதும் தங்களிடம் உள்ளவற்றை அல்லாஹ்விற்கான வாரி வழங்குவதுமாகும்.

அத்துடன் அவர்கள் அனைத்து நன்மைகளும் நலவுகளும் அல்லாஹ்விடம் இருந்துதான் வருகிறது என்று உண்மைப்படுத்தியபடி வாழ்வதுமாகும்.

அவ்வாறு வாழும் அவர்களுக்கே அல்லாஹ் அவர்களது ஈருலக வழிகளையும் இலகுபடுத்துவான் எனும் கருப்பொருளை மிக அழகிய முறையில் தனது திருமறையில் சூறதுல் லைல்லில் முதல் 7 வசனங்களில் கூறுவதாக ஷெய்ஹ் அபூதல்ஹா அழகான தப்ஸீர் விளக்கத்தை வழங்குகிறார்.

Feb 9, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன !!? (பகுதி 13)

வேங்கைகளின் வேட்டைக்கு தயார்படுத்தப் படும் வெள்ளாடுகள் !?

" ........ ஒரு காலம் வரும் அன்று சண் ஆ வில் இருந்து ஹல்றல் மௌத் வரை ஒரு பெண் தனியாகச் செல்லாலாம் ......" --- நபி (ஸல்)

மனித சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இஸ்லாம் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளிள் ஒன்றே இந்த பெண் பாதுகாப்பாக வாழும் சூழல் பற்றியதாகும் . இன்று அத்தகு வாக்குறுதிகளை செயல் படுத்த விடாமல் தீமையின் அதிகார ஆணிவேர்கள் போடும் ஆட்டத்தின் விளைவு மிகப் பயங்கரமாக உள்ளது . சத்தியம் பயங்கர வாதமாக்கப்பட்டு அசத்தியம் நியாமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலை விளக்க கீழ்வரும் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் .

தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் குழுவொன்றினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் வீசப்பட்ட நிலையில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளார்.

அப் பெண் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரின் வயிற்றிலிருந்து, பெண்ணுறுப்பு வரை வெட்டப்பட்டிருந்ததாக அந்நாட்டு பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்னர் அப் பெண் குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸாருக்கு அடையாளங்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இப்படி நடப்பதற்கான காரணம் என்ன ? கீழே வரும் சம்பவத்தை பாருங்கள் .

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் மனைவி, எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழாவின் போது, கவர்ச்சி உடையில் வந்திருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந் நாட்டில், கடந்த மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பிரதமர் நேதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய பாராளுமன்றத்தின், உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றது.

இப் பதவி ஏற்பு விழாவுக்கு, பிரதமர் நேதன்யாகுவின் மனைவி சாராவும் வருகை தந்திருந்தார்.

மெல்லிய துணியால் உள்ளாடைகள் தெரியும் வகையில் அவர் அணிந்திருந்த ஆடையை, அந்நாட்டு பத்திரிகைகள் விமர்சனம் செய்துள்ளன.

அமெரிக்க நடிகையும், பொப் பாடகியுமான பியொன்ஸே போன்று, சாரா உடை அணிந்து வந்தமை அவருடைய மட்டமான ரசனையையை காட்டுகிறது.இந்த வயதில் அவர் இதுபோன்று உடை அணிவது சகிக்க முடியவில்லை' என, பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

இவ் ஆடை விவகாரம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தலைகீழ் மற்றம் என்பது கீழிருந்து மேல் நோக்கி செல்ல வேண்டுமா ? மேலிருந்து கீழ் நோக்கி அமுல் நடத்தப் படவேண்டுமா ? என்பதை மனித சமூகம் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது . பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பதை பெண்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் . இப்படி ஒரு அநீதி பெண் மீது நடக்கக் கூடாது, என்று முதலாவது சம்பவம் சொல்லி நிற்க ,இரண்டாவது சம்பவம் இப்படி ஒரு பெண் இருக்கக் கூடாது என்பதை அவர்களை அதிகாரத்தில் ஏற்றிய சமூகமே கூறி நிற்கின்றது .

இந்த இரண்டு சம்பவங்களும் வெவ்வேறு காலப்பகுதியில் நிகழ்ந்தவை அல்ல , கடந்த ஒரு சில நாட்களுக்குள் நடந்தவை . இது போல் பல சம்பவங்கள் உலகம் தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன . தவறான கலாச்சார மயப்படுத்தல் தவறான விளைவுகளை பெற்றுத் தருகின்றது . இஸ்லாம் 'ஔரத்' கோட்பாட்டின் கீழ் உடலை மறைக்கச் சொன்னால் மட்டும் போர்க்கொடி தூக்கும் பெண்ணுரிமை அமைப்புகள் இந்த தீமையின் ஆணி வேர்களின் ஆட்டம் பற்றியும் ஒரு போராட்டம் நடத்தலாமே !? முஸ்லீம் பெண் போட்டதை கலட்டும் பெண் உரிமை போராட்டங்கள் பற்றி மட்டும் தான் இப்போது உங்கள் கவனம் திருப்பப் பட்டுள்ளது . வேங்கைகள் வேட்டையாட வெள்ளாடுகள் தயார் படுத்தப் படுகின்றது . இதுதான் முதலாளித்துவ வழிமுறை . ரொம்ப நல்லாயிருக்கு .

Feb 7, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 12)

' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

உலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது . செர்பியாவில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு மனிதனும் வெட்கித்துப் போக வேண்டியுள்ளது . ஆனால் 'கபிடளிசத்தின் ' 'ப்ரோபிட் அண்ட் பெனிபிட் ' தரத்தில் 'ஜஸ்ட் பிரக்டிகள் ஜோக்ஸ் ' வகையை சேர்ந்த இந்த சம்பவம் உலகம் எங்கே உள்ளது ? என்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாகும் .

சேர்பிய நாட்டின் பிரதமர் பங்குபற்றிய நேர்காணலின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் தனது காலை அகற்றிக் காட்டிய காட்சி அடங்கிய காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,சேர்பிய நாட்டு பிரதமரான இவிகா டாசிச் அண்மையில் நேர்காணலொன்றில் பங்குபற்றியுள்ளார்.இந்நிகழ்ச்சியை கவர்ச்சியான ஆடை அணிந்த பெண்ணொருவர் தொகுத்து வழங்கியுள்ளார்.ஆரம்பம் முதலே அவரது நடவடிக்கைகள் பிரதமருக்கு கிளர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சியின் இடைநடுவே அவர் தனது கால்களை அகற்றிக் காட்டியுள்ளார். இதன் போது அப்பெண் உள்ளாடை எதனையும் அணியவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பிரதமர் இவிகா டாசிச் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நிகழ்ச்சியானது உண்மையான அரசியல் நிகழ்ச்சியொன்றல்ல எனவும் மாறாக இது தொலைக்காட்சிகளில் நபரொருவரை அவர் அறியா வண்ணம் குழப்பத்தில் ஆழ்த்தும் Practical Joke/ Prank வகையைச் சேர்ந்த வேடிக்கை நிகழ்ச்சியொன்றெனவும் தெரியவந்துள்ளது.

எனினும் இந்நிகழ்ச்சிக்கு சேர்பிய பிரதமர் அலுவலகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. குறித்த பெண் தொகுப்பாளர் பிளே போய் சஞ்சிகையில் தோன்றிய மொடல் அழகியென்றும் தெரியவந்துள்ளது.

வீரகேசரி feb 7. 2013

ஒரு பெண் ஒரு ஆணின் பார்வையில் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பதை இந்த மீடியாக்கள் மிக அழகாகவே காட்டி நிற்கின்றன ! ஒரு பெண் பாலியல் ரீதியாகவோ வேறு எதோ ஒரு வகையிலோ வன்முறைக்கு ஆளாவதை பற்றி கவலையோடு கூக்குரலிடும் இந்த மீடியாக்களின் நோக்கமும் பணத்தால், பணமிட்டு , பணத்திற்காக என்ற கேவலமான இயங்கியலை சுற்றியே பிண்ணப் பட்டுள்ளது . என்பதை உணர்த்த இந்த சம்பவம் நல்ல ஆதாரமாகும் . 

கிளர்ச்சியை தூண்டும் கவர்ச்சித் தூண்டிலில் பெண்ணை இரையாக்கி பாலியல் இரைதேடும் இயல்பான ஆணின் முன் வீசி எறிந்தால் !! விளைவு என்னவாகும் ? சுத்தமான ஒரு சில மீடியாக்கள் தவிர அநேக மீடியாக்கள் செய்வது இந்த 'பெண் போட்டு பிரபல்யம் பிடிக்கும் ' தரக்குறைவான தந்திரமே ! பின்னர்' ஐயோ ! பத்திக்கிச்சு !' என அரசியல் தரத்தில் குற்றம் சுற்றம் பேசுவதுமாகும் . சமூக ஒழுக்கத்தை சாக்கடையாக்கும் முதலாளித்துவ முதலைகளின் சிந்தனைப் பீரங்கிகள் தான் இந்த மீடியாக்கள் என்றால் அது தவறான கணிப்பல்ல .

பெண்ணுரிமை ,பெண் சுதந்திரம் , பெண் கல்வி , என போராட்டம் நடத்தும் உத்தமர்கள் இந்த 'கற்ப் பொழுக்கம் ' பற்றியும் ஒரு போராட்டம் நடத்திக் காட்டலாமே ? 'கணவன் மட்டும் காணும் அழகை கடைகளில் போட்டுக் காட்டும் எல்லோரையும் ஒரு கை பார்க்க பெண்கள் சமூகமே நீ ரெடியா ? ஸ் ..ஸ் .. ஊடக சுதந்திரம் அவர்களின் கேடயமாக அப்போதும் நீங்கள் அடக்கத்தான் படுவீர்கள் . மலாலாவை தாலிபான் சுட்டால் மட்டும் தான் நீங்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசலாம்!அபீஹம்சாவை அமெரிக்க சிப்பாய்கள் சிதைத்துக் கொன்றபோது கூட நீங்கள் மௌனம் காக்கத்தான் வைக்கப்பட்டீர்கள். உங்களது போராட்டத்தின் நியாயத்தையும் உங்களால் தீர்மானிக்க முடியாது ! ' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!! '

Jan 27, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 11)

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

இந்தக் கருத்து மிகத் தவறானது மட்டுமல்ல பெண்கள் சமூகத்தின் மீது மட்டுமல்ல மிகக் கொடூரமான சிந்தனா ரீதியான சமூக நோய்க்கு வித்திடுவதுமாகும் . 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூண்டில் ஒழிப்பது ' போல் ஒரு செயல் தான் இதுவாகும்; என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

மேற்கின் சிந்தனா வாதத்தின் கீழ் படுதோல்வியடைந்த ஒரு வழிமுறையே திறந்த பாலியல் கொள்கையாகும் . அதன் ஒரு அம்சமே விபச்சாரத்தை 'லைசென்ஸ்' கொடுத்து பரவலாக்கினால் பாலியல் மூர்க்கத்தனம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாகும் . ஆனால் இது நடந்ததா ? என்ற கேள்விக்கு பதிலை கீழே வரும் புள்ளி விபரத்தை பார்த்தாலே புரிந்து விடும் .

திறந்த பாலியல் பின்பற்றப் படும் நாடான அமெரிக்காவில் 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 2006093 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 2871732 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . இவ்வளவிற்கும் தொழில் முறை விபச்சாரம் தாராளமாக கொடிகட்டிப் பறக்கும் நாடு ! மேற்கை 'காப்பி ' அடிக்கும் தவறான பாதை நல்ல விளைவை அல்ல இன்னும் பல சமூக நோய்களையே பெற்றுத்தரும் என்பதற்கு இது சிறந்த ஆதாரம் .

(அதே நேரம் அந்தக் கருத்துக் கணிப்பில் சவூதி அரேபியாவின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு இருந்தது . 1990 இல் இருந்து 2000 ம் ஆண்டு வரையான பத்து வருடங்களுக்குள் 25 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . அதே போல 2000ம் ஆண்டில் இருந்து 2010 வரையான பத்து வருடங்களுக்குள் 22 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன . )

திறந்த பாலியல் கொள்கையின் கீழ் விபச்சாரத்தை மேற்கு சட்டபூர்வமாக்கியதன் அடுத்த விளைவு அது நேரடியாக தாக்கிய அடுத்த விடயம் குடும்பவியல். இன்றும் அங்கு தொழில் நுட்பத்தாலும் ,அறிவியலாலும் மேம்படுத்திக் காட்டப் படும் ஒரு போலியான நாகரீகத்தையே காட்ட முடிந்தது தவிர சிதைந்து சின்னா பின்னமான குடும்பக் கட்டமைப்பே அங்கு காணப்படுவது அவர்களே ஏற்றுக்கொண்ட விடயம் . இப்படியான நிலையை ஏற்படுத்தக் கூடிய திறந்த பாலியலின் விபச்சார 'லைசென்ஸ்' எமக்கு தேவையா ?

(தொடரும்...)

Jan 25, 2013

பெண் நிர்வாண சுகத்தில் நியாயம் காணும் உலகம்


(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 10))

பெண்ணை நிர்வாணப் படுத்தி பார்ப்பதில் பண்டைய ரோம் , கிரேக்கம் , அரேபியா , இந்த வரிசையில் நவீனத்தின் சொந்தக்காரர்களாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேற்கின் சிந்தனையை அடிப்படையாக கொண்ட உலகும் சற்றும் சளைத்தது அல்ல . அவளை காட்சிப் பொருளாக்கி காமக் கண்களால் ரசித்து ருசித்து பார்ப்பதில் இன்று முழு உலகும் ஒருமித்த கருத்திலேயே உள்ளது .

ஆணின் இயல்பான காமப் பசிக்கு முன் அவள் அரை ,முழு நிர்வாணமாக நடமாடுவது என்பதில்தான் பெண் விடுதலை எனும் முட்டாள் தனமான அழைப்பில் அவளும் மயங்கினால் , விளைவு உள ரீதியான விபச்சாரம் கம்பியூட்டர் தொடங்கி மொபைல் போன் வரை சாதாரணமானது . வீதியல் தெரியும் ஒவ்வொரு விளம்பரமும் விபச்சாரத்தின் அழைப்பாக புரியப்படாமல் ஒரு கலை அம்சமாக காட்டப்பட்டது .

ஆண்கள் சமூகம் முன் காமக் காட்சிச் சாலையாக பெண்ணை உத்தியோக பூர்வமாக மாற்றிய பெருமை முதலாளித்துவத்தையே சாரும் . உங்களுக்கு தெரியுமா
'கொக்கா கோலா ' போத்தல் ; அதை சற்று கூர்ந்து பாருங்கள் . அதன் அமைப்பு ஒரு பெண்ணின் உடல் அமைப்பை மையப்படுத்தி செய்யப் பட்டது . கலை என்ற பெயரில் காமத்தை தூண்டும் வகையில் ஒரு குளிர்பானம் !

சிக்மன் புரைட் என்ற யூதனின் சிந்தனை தான் 'எல்லாமே செக்ஸ் ' குழந்தை விரல் சூப்புவதும் செக்ஸ் ! தாயின் மார்பில் சுரக்கும் பாலை அது குடிப்பதும் செக்ஸ் !
தொட்டில் முதல் செக்ஸ் தொடங்கி விடுமாம் !!! இதை கெட்டியாக பிடித்த முதலாளித்துவம் பெண்ணை பண்டமாக்கி ஆணின் முன் அனுபவி ராஜா அனுபவி .... என இவர்களே தாலாட்டுப் பாடி வெறித்தனத்தை தொடங்கி விட்டு பாலியல் வல்லுறவு என்ற அதன் கொடிய விளைவை அனுபவிக்கும் போது மட்டும் சட்டம் ஒழுங்கு என கத்திக் கதறுவதில் என்ன பயன் ?

(தொடரும் ...)

Jan 23, 2013

விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .


விபச்சார அழைப்பாக பெண் விடுதலை வாதம் .
(தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 09) )

இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியாவில் நான்கு முறையான ஆண் , பெண் உடலுறவுக்கான உறவு முறைகள் இருந்தன முதலாவது முறை இன்று இருப்பதைப் போல ஒருவன் தான் விரும்பும் பெண்ணின் தந்தையிடம் முறையாக பெண் கேட்பார் . அவரின் சம்மதத்துடன் அந்தப் பெண்ணால் நிர்ணயிக்கப் பட்ட ஒப்பந்தத் தொகையை கொடுத்து திருமணம் செய்து (தாம்பத்திய உறவில் ஈடுபட்டுக் ) கொள்வார் .

இரண்டாவது முறை கணவன் தன் மனைவியின் மாதவிடாய் காலம் முடிந்த பின் , ஒரு குறிப்பிட்ட உயர்ந்த குல ஆணை தன் மனைவியுடன் கூடச் செய்வான் . அவள் அதன் மூலம் கருவுறும் வரை அந்தக் கணவன் அவளை நெருங்க மாட்டான் . இங்கே இந்தக் கணவனின் நோக்கம் உயர்ந்த குலத்தில் இருந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் .

மூன்றாவது முறை பத்து அல்லது அதற்கு குறைவான ஆண்கள் கூட்டம் , ஒரு குறிப்பிட்ட பெண்ணுடன் உடலுறவு கொள்ளுவார்கள் . அவள் கருவுற்று பிள்ளை பெற்றபின் அந்த ஆண்களை அழைப்பாள் .அந்த ஆண்களில் யாரும் அந்த அழைப்பை மறுக்கக் கூடாது . அவர்களிடம் அந்தப் பெண் பின் வருமாறு கூறுவாள் .

" நீங்கள் ,உங்கள் உறவால் விளைந்ததைக் கண்டீர்கள் . அது இந்தக் குழந்தைதான் " என்பாள் பின் அவர்களில் ஒருவனைக் காட்டி "இது உங்கள் குழந்தைதான் " என்று கூறுவாள் அதை அவன் மறுக்க முடியாது .

நான்காவது முறை ஒரு பெண் தன் வீட்டுக்கு முன்னாள் ஓர் கொடியை நாட்டி வைப்பாள் .அதன் அர்த்தம் உடல் சுகம் வேண்டுபவர்கள் தாராளமாக வாருங்கள். என்ற பகிரங்க அழைப்பே ஆகும் .பலரும் வருவார்கள் கூடுவார்கள் ,செல்வார்கள் . அவள் கருவுற்று குழந்தை பெற்ற பின் உறவு கொண்ட ஆண்கள் எல்லோரும் அழைக்கப் படுவர் .

பின்னர் குழந்தையின் சாயலைக் கொண்டு தந்தையை அடையாளம் காணும் திறமை உள்ளவள் என கருதப் படும் ஒரு குறிசொல்லும் பெண் அழைத்து வரப்படுவாள் . அவள் அந்த ஆண்களில் இருந்து ஒருவரை இனம் காட்டுவாள் அதுதான் அந்தக் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் .அதை அவன் மறுக்க முடியாது .

ஆதாரம் :- புஹாரி

மேலே கூறியது நாம் கண் காணாதது .இதில் முதல் முறையை தவிர மற்றைய அனைத்தும் அப்பட்டமான விபச்சாரம் என்பதில் சந்தேகமில்லை . இதில் ஆணாதிக்கத்திற்கான வாசலை ஒரு பெண் சாதாரணமாகவே திறக்கிறாள் . அதே நேரம் அவமதிப்புக்கான மகுடத்தையும் அவளே சூடிக் கொள்கிறாள் . ஆனால் துரதிஷ்ட வசமாக இன்றைய நிகழ்காலமும் பெண்ணுரிமை என்ற பெயரில் வேண்டுவது இத்தகு தவறான பாதையினைத்தான் . பின்வரும் சம்பவத்தை படியுங்கள் .

இது நடந்தது 1990 களில் , திருமணமான முதலிரவிலேயே தன் கணவனை வெளியே இருத்தி விட்டு , இன்னொரு ஆணோடு சல்லாபித்தாள் ஒரு பங்களாதேச பெண் . அவள் உலகு அறிந்த 'செக்ஸ் ' எழுத்தாளர் . அவளது பெயர் 'தஸ்லிமா நஸ்ரின் '. பெண்ணுரிமையின் கீழ் அவள் கேட்டது ' ஒரு பெண் தனது கருப்பைக்குள் தாங்கள் விரும்பும் ஆணின் விந்துவை செலுத்தும் உரிமை ! (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரம் .

இந்த விபச்சார அழைப்புக்கு மேற்கின் பெண் விடுதலை வாதிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது . ஒரு பெண்ணை ஆண் எப்படி ரசிக்க ,அனுபவிக்க , பயன்படுத்த முடியுமோ அதற்கான வாயிலை அவளே திறக்கிறாள் . இவர்களும் பரிசோடும் ,மாலையோடும் படையெடுத்தார்கள் . புனிதமான் உறவை
கழிவரையாக்கும் இந்த நா(ய் )கரீகத்தின் பார்வையில் எப்படி ஒரு பெண் பாதுகாப்பாய் வாழ முடியும் ? மேலே தந்த அரேபிய ஆண் ,பெண் உடலுறவு முறையோடு இந்த (FREEDOM OF THE UTERUS) அதாவது கருப்பைச் சுதந்திரத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் நிறைய உண்மைகள் புலப்படும் .
(தொடரும் ...)

Jan 20, 2013

(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 08) )

'குரங்கு கையில் பூமாலை ' என்றால் என்ன ?
(தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு
என்ன ? (பகுதி 08) )

1961 இல் இந்த சம்பவம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த சம்பவத்தோடு சம்பத்தப் பட்டவர் ஒரு அமைச்சர் .சாதாரண அமைச்சர் அல்ல பிரித்தானிய பாதுகாப்புத் துறையோடு சம்பத்தப் பட்ட அமைச்சர் . அவரின் பெயர் 'JOHN PROFUMO ' . அவரின் கேவலமான நடத்தைக்கு உதாரணமான சம்பவமே கீழேவருகின்றது .இது ஒரு தனி மனித தவறு என்பதால் சுட்டிக்காட்டவில்லை ஆனால் அந்த சமூகத்தின் பிரதானிகள் , அந்த சமூகத்திற்கு சட்டம் இயற்றக் கூடியவர்கள் . இது சம்பந்தமாக என்ன தீர்ப்பைக் கூறினார்கள் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும் .

இந்த அமைச்சருக்கும் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற மொடல் அழகிக்கும் இடையில் தவறான பாலியல் தொடர்பு இருந்தது . இந்த கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்தது . கோபத்தோடு
அந்த பாராளுமன்றம் சம்பவத்தை பற்றி கடுமையாக விசாரிக்கத் தொடங்கியது . (சில நேரம் தங்களுக்கு அந்த காம சுகம் கிடைக்க வில்லையே ! என்ற கவலையாக கூட இருக்கலாம் .) காரணம் இது தான் .

அவர்கள் கோபப்பட்ட காரணம் 'கிரிஸ்டைன் கீலர் ' என்ற அந்தப் பெண் ஒரு ரஷ்ய உளவாளி .ஒரு ரஷ்ய கடற்படை அதிகாரியுடனும் அவளுக்கு 'செக்ஸ்' உறவு இருந்தது,பிரித்தானிய இராணுவ இரகசியங்களை அவளது உடலைக் காட்டி இந்த அமைச்சரிடம் இருந்து வாங்கி , அந்த கடற்படை அதிகாரி மூலம் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டதும் தெரிய வந்தது .

அந்த அமைச்சர் தான் தப்பிக்கொள்ள பல பொய்களை கூறினார் . ஆனால் சம்பவங்கள் யாவும் ஆதாரத்தோடு நிரூபிக்கப் பட்டது .பிரித்தானிய பாராளுமன்றம் என்றால் இன்றைய சர்வதேச ஜனநாயக வடிவத்தின் தந்தை என்று கூட கூறலாம் . இந்த சம்பவம் தொடர்பில் கொடுத்த தீர்ப்பு என்ன ?அது இதுதான் .

" குறித்த சம்பவத்தில் அமைச்சர் 'JOHN PROFUMO' 'கிரிஸ்டைன் கீலர் ' உடன் 'செக்ஸ்' உறவு வைத்துக் கொண்டது தவறில்லை . அது அவரது தனிப்பட்ட விடயம் . அத்தோடு அது எமது பண்பாட்டு எல்லைகளுக்கும் உட்பட்டது ! ஆனால் இராணுவ இரகசியங்கள் வெளியிடப் பட்டது தான் தவறானது !எனவே அதற்காக அவர் தண்டிக்கப் பட வேண்டும் "

# இங்கு அந்த அமைச்சரின் தவறான 'செக்ஸ்' உறவு அவர்களின் பண்பாட்டு எல்லைகளுக்கு உட்பட்டதாம் !

# தவறு கண்டு பிடிக்கப் பட்டும் தன்னை நிரூபிக்க அமைச்சர் 'JOHN PROFUMO' பொய் சொன்னது கூட தவறில்லையாம் !!

# உலகத்திற்கே ஒளி கொடுத்த ஐரோப்பா என சொல்லப்பட்டாலும் , பெண் தொடர்பில் தனது வரலாற்று மனப் பாங்கை மாற்றிக் கொள்ளவில்லை !!!

இப்படி இங்கே கவனிக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . ஆனால் இந்த உதாரண சம்பவத்தோடு ஒத்துப் போகக் கூடிய பல சம்பவங்கள் . இன்னும் பல நாடுகளிலும் நடந்துள்ளன . எல்லா பாராளு மன்றங்களும் இத்தகு துப்புக்கெட்ட தனத்தோடுதான் இருக்கின்றன . இப்படிப் பட்டவர்கள் தான் மனிதனுக்காக சட்டம் இயற்றப் போகிறார்களாம் !!! இவர்களின் மூலம் தான் பெண்கள் மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கப் போகிறதாம் !!! இதை 'குரங்கு கையில் பூமாலை ' என்று நாம் சுருக்கமாக கூறலாம் .

(தொடரும் ...)

Jan 17, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 07)



ஐரோப்பாவின் அறிவியல் ஆதிக்கம் மதத்தை சர்ச்சுகளுக்கு உள்ளே மட்டும் அங்கீகரித்து
மதச் சார்பற்ற அரசியலை கொள்கையாக்கியது . இங்கும் முதலாளித்துவம் புகுந்து விளையாடியது . எதிலும் இலாபம் என்ற சுயநலம் மனித மூளைகளை இயக்கியது . அடக்கி ஆளப்பட்ட பெண்கள் சமூகம்
தனது உரிமைகளை வென்றெடுக்க காலம் கணிந்ததாக நினைத்து களமிறங்கினார்கள் .

தொழில் புரட்சியின் மூலம் இலாபத்தை குறிவைத்த முதலாளி வர்க்கம் சந்தர்ப்பத்தை சாதகமாக்கியது . பெண் வீதிக்கு இறங்கினாள் ; அவளின் விடுதலைப் பாதை 'மோடேர்ன் ஐரோப்பாவின் 'தொழில் புரட்சியின் விலை குறைந்த தொழிலாளியாக சந்தைப் படுத்தியது . அவளின் தாகத்திற்கு கானல் நீர் காட்டப் பட்டது . ஒரு ஆணை விட குறைந்த சம்பளத்தில் பெண் வேலை வாங்கப் பட்டாள் !

உலகப் போர்கள் ஆண்களின் தொகையை பெருமளவில் குறைத்தது . பெண்கள் வேலை செய்வதற்கான ஊக்கம் அதிகரிக்கப் பட்டது . குடும்பம் எனும் அமைப்பு ஏறத்தாள சிதைந்தே போனது . இந்த இயந்திர வாழ்க்கை தான் அவளது விடுதலையா ? ஆனாலும் அவள் 'செக்ஸ் மெசின் ' என்ற பார்வை அழுத்தமாகவே அதையும் அவளது சேவையாக்கியது .

* தொழில் முறை விபச்சாரம் சட்டங்களால் வேலியோடு தொடரப் பட்டது .

* அனுசரிப்பு விபச்சாரம் தொழில் நிறுவனங்களில் சாதாரணமானது .

காமத்தில் இலாபம், இலாபமான காமம் இந்த இயங்கு விதியோடு பெண் நோக்கப் பட்டதுதான்
தொழில் புரட்சியின் பெண் தொடர்பான மகத்தான
புரட்சி !

(தொடரும் ...)

Jan 16, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 06)

ஜனநாயகத்தில் பெண் .

ஜனநாயக நெருப்பின் முன் 
ஒரு விட்டில் பூச்சியாய் பெண் 
உலகில் உலா வந்தாள் !
சம வாழ்வுரிமை ,வாக்குரிமை 
தொழில் உரிமை , ஆணோடு சம உரிமை 
எல்லாம் கிடைத்தது 
காமப் பார்வைகளின் தொடரில்
நிம்மதியை மட்டும் விலை பேசியதாக !

கருப்பை சுதந்திரத்தின் முன்
கட்டில் சுகத்தோடு அவள்
விடுதலை வீட்டில் அவமானத்தை
உரிமையோடு தொட்டில்
கட்டவும் கேட்டாள் !
அந்த விபச்சார விலாசத்தை தேடி
'நோபல் ' பரிசோடு அணிவகுத்தார்கள்
அந்த நவீனத்தின் காவலர்கள் !

(தொடரும் ...)

Jan 15, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)

" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை " டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ , அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் . பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன . அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .இது பொதுவாக எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் . எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன . ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை . இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள் ,சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது ? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான தேடல் அவசியமாகின்றது . ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது ; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம் இருக்காது . கிரேக்கமோ , ரோம் சமூகமோ , அல்லது ஐரோப்பாவோ , அரேபியாவோ ,ஆபிரிக்காவோ , ஆசியாவோ , தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க , அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது . இந்த விதி இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள் , சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும் . அந்த வகையில் முதலாளித்துவமோ , கம்பியூனிசமோ , பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன ? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற 'சிக்மன் புரைடின் ' சிந்தனை ஆதிக்கமும் , சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும் , கம்பியூனிசமும் ) இருக்கின்றன . என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும் . இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது . அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும் . அந்தக் கேள்வி இதுதான் ' மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது ?' என்ற வினாவே அதுவாகும் . பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன் . அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன் . அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம் , 2. உளவு வேலை என்பதாக இருந்தது . அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும் , பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது . (தொடரும் ...)

Jan 14, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 04)

முன்னைய சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆராயும் தொடரில் ,கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம் . இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை .இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க ,ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம் .

உண்மையில் இந்த நாகரீகங்களிலும் வழிவரான கலாச்சாரம் , மதக் கோட்பாட்டு அழுத்தங்களுடன் கூடிய சாதிக் கோட்பாடு என்பவற்றின் கீழ் பெண்கள் சமூகம் தரக்குறைவாக நடத்தப் பட்டமைக்கு பல ஆதாரங்களை நாம் காண முடியும் . ஒப்பீட்டளவில் கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை ஒத்த செயலையே சில வடிவ மாறுபாட்டோடு இந்த சமூகங்களும் செய்துள்ளன .
# பெண் சிசுக் கொலை
# தேவதாசிக் கோட்பாடு
# தாழ் சாதி விதியின் கீழ் மேலாடை அணியத் தடை .
# உடன் கட்டை ஏறுதல் .
போன்ற விதிகளின் கீழ் தனது சமூகத்திற்கு உள்ளும் ,பிற சமூகங்களுக்கு மத்தியிலும் மிக அதிகமாகவே பெண்கள் சமூகம் தாழ்த்தப்பட்டது.இந்த தரக்குறைவான நியதிகளின் கீழ் பேசும் விலங்கு என்ற போலித் தத்துவத்தை அவள் உருவப் படுத்தினாள் . சில ஆபிரிக்க பழங்குடியினர் அவளின் மீதான நம்பிக்கையீனத்தின் சான்றாக அவளின் யோனித் துவரங்களை கூட குறிப்பிட்ட காலம் தைத்து விடுவார்களாம் !

தொட்டில் பழக்கத்தில் இருந்து பெண்கள் தொடர்பில் தவறான கருது கோள்களே சமூகங்காளால் கற்றுத் தரப்படுகின்றன . அதாவது கலாச்சாரப் பாரம்பரியங்கள் ,மதங்கள் ,சிந்தனைகள் போன்ற எல்லாமே பெண்கள் தொடர்பில் ஒரு வகையான வன்முறைப் பார்வையையே கற்றுக் கொடுக்கின்றன .

(தொடரும் ...)